search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Ganesan"

    • 1984-ம் ஆண்டு தமிழ்நாடு கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்ளுக்கு இயற்றப்பட்ட சட்டமானது இதுநாள் வரை நடைமுறைக்கு வரவில்லை.
    • மைய அரசானது 1996-ம் ஆண்டு கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு முறைப்படுத்தல் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டத்தினை இயற்றியுள்ளது.

    சென்னை:

    தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டசபையில் இன்று சட்ட முன்முடிவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    1984-ம் ஆண்டு தமிழ்நாடு கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சட்டமானது (தமிழ்நாடு சட்டம் 29/1986), கட்டிடம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு மற்றும் பணி நிபந்தனைகளை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பு உடல்நலம் அதனுடன் தொடர்புடைய பிற பொருட்படுத்துவதற்காகவும் இயற்றப்பட்டது. இந்த சட்டமானது இதுநாள் வரை நடைமுறைக்கு வரவில்லை.

    இதற்கிடையில் மைய அரசானது 1996-ம் ஆண்டு கட்டிடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு முறைப்படுத்தல் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டத்தினை (மைய சட்டம் 27/1996) இயற்றியுள்ளது. இதன் விளைவாக கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் வழக்கொழிந்து தேவையற்றதாகிவிட்டது. எனவே அரசானது கூறப்பட்ட தமிழ்நாடு சட்டம் 29/1986-ஐ நீக்களவு செய்வது என முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்படிவம் கொடுக்க விழைகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில இதுவரை 66 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.
    • தனியார் நிறுவனங்களில் 1 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வருகிற 5-ந் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. திருச்சி எஸ்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட உள்ள இந்த முகாமிற்கான முன்னேற்பாடு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆண்டுக்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை முதலமைச்சர் பெற்று தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 66 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 1 லட்சத்து 4 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் 15-ந் தேதி சென்னையில் நடந்த விழாவில் ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வருகிற 5-ந் தேதி திருச்சியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×