search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mamallapuram Beach"

    • சூரிய உதயத்தில் ஒளிரும் கருப்பு மணல் பகுதியை பார்த்து உற்சாகம் அடைந்தனர்.
    • கடல் அலையில் இருந்து வெளிவரும் இந்த கருப்பு மணல் கடற்கரையில் படிந்து தார் சாலை போன்று காட்சி அளிக்கிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள புராதன சின்னங்களை பார்வையிட்டு செல்கிறார்கள். சுற்றுலா வரும் பார்வையாளர்கள் மாமல்லபுரம் கடற்கரையில் பொழுதை கழிப்பது வழக்கம்.

    இந்த நிலையில் வடக்கு மாமல்லபுரம்-தேவநேரி கடற்கரை பகுதிகள் தற்போது கருப்பு மணல் கடற்கரையாக மாறி வருகிறது. கடல் அலையில் இருந்து வெளிவரும் இந்த கருப்பு மணல் கடற்கரையில் படிந்து தார் சாலை போன்று காட்சி அளிக்கிறது. மேலும் அதிகாலை சூரிய வெளிச்சத்தில் இந்த கருப்ப மணற்பகுதி ரம்யமாக காணப்படுகிறது.

    வித்தியாசமாக மாறி வரும் கடற்கரையில் ரிசார்ட்களில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் இன்று அதிகாலை நடைபயிற்சி சென்றபோது பார்த்து வியந்தனர். சூரிய உதயத்தில் ஒளிரும் கருப்பு மணல் பகுதியை பார்த்து உற்சாகம் அடைந்தனர். அந்த கருப்பு நிற மணலை கைகளில் அள்ளி வீசி மகிழ்ந்தனர்.

    இதுபோன்ற கருப்பு மணல் எரிமலை செயல்பாடுகள் அதிகமாக காணப்படும் கடற்கரை பகுதிகளில் மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது. இந்த மணலில் நடந்தால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இது போன்ற கருப்பு மணல் கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரில் உள்ள தில்மதி கடற்கரையில் இருக்கிறது. சூரிய உதயம், அஸ்தமம் நேரங்களில் மின்னும் கருப்பு கடற்கரையை பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகள் அங்கு கூடுவர், தற்போது மாமல்லபுரத்தில் கருப்பு மணல் கடற்கரை காணப்படுவது இயற்கை அதிசயமாக உள்ளது என்றனர்.

    • பல்வேறு ஆன்மீக செயல்பாடுகள் நடக்கும் இடமாக மாமல்லபுரம் கடற்கரை உள்ளது.
    • பூஜைகள் செய்வதை கட்டுப்படுத்த இரவில் போலீசார் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடற்கரையானது சுற்றுலா பயணிகளுக்கு சூரிய குளியல், நடைபயிற்சி, அலைச்சறுக்கு விளையாட்டு, கடலில் குளிப்பது என மகிழ்ச்சியை கொடுக்கும் முக்கிய பொழுதுபோக்கு பகுதியாக இருந்தாலும், ஸ்தலசயன பெருமாள் கோயில் தீர்த்தவாரி, மூதாதையர் திதி, இருளர்களின் குலதெய்வ வழிபாடு, காணிக்கை, வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக செயல்பாடுகள் நடக்கும் இடமாகவும் உள்ளது.

    இப்பகுதி கடலோரத்தில் அண்மைக் காலமாக அவ்வப்போது ஏவல், பில்லி, சூனியம் வைக்கும் மர்ம நபர்கள் நள்ளிரவில் கடற்கரையில் அமர்ந்து ஜாமகால பூஜைகள் செய்வதாகவும், ஊழையிட்டு பேய் ஆட்டம் ஆடுவதாகவும் பேசப்பட்டு வந்தது. சமீபத்தில்

    கடற்கரை கோயில் தென் பகுதி கடலோரத்தில், கழுத்தை அறுத்து பூஜை செய்யப்பட்ட சேவல், மஞ்சள் குங்குமம் கலந்த பூசணிக்காய், துணி, ரிப்பன், மரப்பொம்மை உள்ளிட்ட ஜாமபூஜை பொருட்கள் கிடந்தன. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் முகம் சுழித்து சென்றனர்.

    இதுபோன்ற பூஜைகள் செய்வதை கட்டுப்படுத்த இரவில் போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கனமழைக்கு பிறகு நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு அவர்கள் புராதன சின்னங்களை ரசித்து பார்த்து பொழுதை கழித்தனர்.
    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னங்களாக திகழ்கிறது. இந்த புராதன சின்னங்களை காண நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்வதுண்டு.

    இந்திய அளவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் 2-வது இடமாக மாமல்லபுரம் திகழ்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வரத்து இல்லாமல் அங்குள்ள புராதன சின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

    மழையால் கடந்த சில நாட்களாக பயணிகள் வரத்து இல்லாமல் இருந்து. இந்தநிலையில் தற்போது மழை நின்றதாலும் நேற்று வார விடுமுறை தினம் என்பதாலும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பயணிகள் வரத்து நேற்று அதிகம் இருந்தால் அவர்களை நம்பி வாழ்வாதாரம் நடத்தும் சுற்றுலா வழிகாட்டிகள், ஆட்டோ, கார் டிரைவர்கள், நடைபாதை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக தமிழக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளுடன் தற்போது தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஊரடங்குக்கு பிறகு திறக்கப்பட்ட புராதன சின்னங்களை காண தொடக்கத்தில் பயணிகள் குறைவான அளவிலேயே மாமல்லபுரம் வந்தனர்.

    தற்போது பருவ மழைகாலம் முடிந்தபிறகு வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு போன்ற இரு தினங்களில் இன்னும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காலை 7, 8, 9 மணிக்கு வரும் பார்வையாளர்கள் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட தொல்லியல் புராதன சின்னங்கள் திறக்கும் வரை அங்கேயே சில மணி நேரம் வரை காத்திருந்து புராதன சின்னங்களை கண்டுகளிக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

    அதேபோல் மாலை 3, 4 மணிக்கு வரும் பயணிகள் 5 மணிக்கு புராதன சின்னங்கள் மூடப்படும் நிலையில் அவசர, அவசரமாக கண்டு களித்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. குறுகிய நேரத்தில் அனைத்து புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியாத ஏமாற்றத்துடன் பயணிகள் பலர் வீடு திரும்புவதை காண முடிகிறது. எனவே சுற்றுலா பயணிகள் வருகைக்கு ஏற்ப சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களை கண்டுகளிக்க கூடுதல் நேரம் திறந்து பார்வையாளர்களின் குறைகளை போக்க தொல்லியல் துறை முன் வரவேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மாமல்லபுரம் கடற்கரையில் விதிமுறையை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு மணல் பரப்பு அழிக்கப்பட்டு வருவதால் பேரூராட்சி செயல் அலுவலர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடற்கரையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மீனவர்களின் வீடுகள் மட்டுமே இருந்தன. தற்போது அப்பகுதியில் விடுதி, உணவகம், பார், சர்பிங், யோகா, சூரிய குளியல் என உல்லாச பகுதியாக மாறியுள்ளது.

    கடற்கரை ஒழுங்காற்று மேலான்மை விதிகளின்படி கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவிற்குள் கட்டிடம் கட்ட தடை இருந்தும் தற்போது கடற்கரையை ஒட்டிய மணல்வெளியில் ஓய்வு காட்டன், கார்பார்க், சீ பாஸ்ட்புட், சீகுடில் என விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. மேலும் மணல் பரப்பு சிறிது சிறிதாக அழிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலை தொடரும் பட்சத்தில் மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை நாளடைவில் குறைந்து சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவாய் குறையும் வாய்ப்பு உள்ளது.

    இதனை மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×