என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Liquor dealer arrested"
- பிரபு (வயது 36). சாராய வியாபாரியான இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ந்தேதி வலசக்கல்பட்டி ஏரிக்கரையில் சாராயம் காய்ச்சினார்.
- டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வை யில் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிமுத்து தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிமுத்து மகன் பிரபு (வயது 36). சாராய வியாபாரியான இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ந்தேதி வலசக்கல்பட்டி ஏரிக்கரையில் சாராயம் காய்ச்சியபோது டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மேற்பார்வை யில் சப்-இன்ஸ்பெக்டர் அல்லிமுத்து தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய பிரபு தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் கெங்கவல்லி அருகே நடுவலூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார் நேற்று இரவு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது உறவினர் வீட்டில் தங்கியிருந்த பிரபுவை போலீசார் சுற்றி வளைத்தனர்.
இதை பார்த்ததும் அவர்களை தள்ளி விட்டு பிரபு ஓட்டம் பிடித்தார். உடனே போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)