search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Leaders greeting"

    தமிழ்ப்புத்தாண்டையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். #TamilNewYear
    சென்னை:

    தமிழ்ப்புத்தாண்டையொட்டி பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்பாக தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவது மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.

    தமிழர்கள் அனைவரும் தங்களது பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியப் பெருமை இவற்றையெல்லாம் பறிக்கிற அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    இதை தமிழர்கள் அனைவரும் மனதில் கொண்டு மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறுகிற அரசுகளுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க தமிழ் புத்தாண்டில் சூளுரை மேற்கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    தாரைவார்க்கப்பட்ட காவிரி உரிமை உள்ளிட்ட எல்லா உரிமைகளும் மீட்கப்பட வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்தின் விருப்பம் ஆகும். அந்த விருப்பம் நிறைவேறவும், வளமான, மகிழ்ச்சியான தமிழகம் என்ற கனவு நனவாகவும் அற்புதமான வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டால் தமிழர்கள் வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசும். அதற்கு சித்திரைத் திருநாள் வகை செய்ய வேண்டும்; உணவு படைக்கும் கடவுளரான உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும்; அதற்காக சரியான முடிவை எடுக்க இந்நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.

    தமிழகத்திலும், அனைத்து இந்திய அளவிலும் ஒரு பெரிய மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திங்கள் மலர்கின்றது.

    மத்திய அரசின் கேடுகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடும் வலிமையைப் பெற்றுள்ள தமிழகம், நடைபெற இருக்கின்ற 17-வது பாராளுமன்றத் தேர்தல் களத்தில் ஆட்சியாளர்களுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில் நல்ல தீர்ப்பு அளிக்கும்.

    தமிழ் மண்ணுக்குப் புதுப் பொலிவு ஊட்டிடக் கடமை ஆற்றுவோம்; களத்தில் வெற்றியும் காண்போம். தரணி எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

    மேலும் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஜன நாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தலைவர்களும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். #TamilNewYear
    ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமிய பெருமக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்:-

    தங்களுடைய மெய்வருத்தி நோன்பிருந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை எனும் மானுடத்தின் மிக உயர்ந்த பண்புகளை தமது செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரமலான் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆட்சியிலிருந்த போதும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் போதும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக எப்போதும் அயராது பாடுபடும் இயக்கத்தின் சார்பில் ஆற்றிய சாதனைகள் எண்ணிலடங்காதவை.

    இஸ்லாமிய மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம் அனைத்து வகையிலும் மென்மேலும் உயர்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்குடனும் செயல்பட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகம் சிறுபான்மையின மக்களின் சமூக, கல்விபொருளாதார முன்னேற்றத்திற்காக என்றைக்கும் உற்ற துணையாக விளங்கிடும் என்று உறுதியளிக்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    நபிகள் நாயகம் வழியில் ஜக்காத் என்னும் ஏழை வரியை பொது நிதியங்களில் செலுத்தி, ஏழை, முதியவர், விதவைகளுக்கு மாத உதவி, மருத்துவ, கல்வி, திருமண, உணவு மற்றும் தொழில் துவங்கும் உதவி என அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இம்மாதம் உதவுகிறது.

    நோன்பு உடலையும், உள்ளத்தையும் புனிதமாக்குகிறது. இப்புனித நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் நலமும், வளமும் பெருகிட அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தே.மு.திக. தலைவர் விஜயகாந்த்:-

    பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளவும், உடல்நலத்தை பேணிக்காத்து மனிதர்களை மேம்படுத்துவதுதான் இந்த புனித ரமலான் நோன்பின் சிறப்புகள். புனித நோன்பினை முடித்துக் கொண்டு ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில் அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட வேண்டுமென இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அம்மா மக்கள் முன் னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன்:-

    புரட்சி தலைவி அம்மா இஸ்லாமியர்களின் அரணாகத் திகழ்ந்து. அவர்களின் நன்மைக்காக முன்னெடுத்து நடைமுறைப்படுத்திய திட்டங்கள் அனைத்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தவை. தமிழகத்தில் தழைத்தோங்கிவரும் இந்த சகோதரத்துவம் என்றும் நிலைத்திட செய்யவும், இந்திய நாட்டின் மதச்சார்பற்ற கொள்கையை பாதுகாத்திடும் அரணாகவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றும் திகழ்ந்திடும்.

    இந்நன்னாளில் இறைத் தூதர் நபிகள் நாயகம் போதனைகளை தொடர்ந்து கடைபிடிப்போம். போற்றிடுவோம்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    பண்பாட்டு ரீதியாக இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் ஒற்றுமையாக அணி திரள்வதற்கு ரமலான் நோன்பு ஏதுவாக அமைவதை காணமுடிகிறது. மானுடத்தின் மேன்மையை வலுப்படுத்தும் மனிதநேயம் என்னும் மாண்பினை இது செழுமைப்படுத்துகிறது. சாதி, மத வரம்புகளைத் தாண்டி ஏழை எளியோருக்கு கொடையளிக்கும் கருணையையும் இந்த நோன்பு மேம்படுத்துவதை உணரமுடிகிறது.

    இத்தகைய சிறப்புக்குரிய நோன்பை நிறைவுசெய்யும் திருநாளான ரமலான் பெருநாளில் இஸ்லாமியர் யாவருக்கும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர- சகோதரிகளுக்கும் அனைவருக்கும் இந்நன்னாளில் எல்லா வளங்கள் மற்றும் நலங்களும் பெற்று எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திடவும் அன்பான ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

    புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:- நோன்பு காலத்தில் வறுமையில் உள்ள ஏழை எளியோருக்கு உதவி செய்வதை குர்ஆன் வலியுறுத்துகின்றது. இந்த நோன்பு ஏழை, பணக்காரன் என்கின்ற பேதம் கிடையாது. இறைவன் முன் எல்லோரும் சமம் என்பதை இந்த புனித மாதம் தெள்ளத்தெளிவாக்குகின்றது. இந்த இனிய நாளில் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் புனித ரமலான் தின வாழ்த் துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி:-

    அறுசுவையான உணவுகளை உட்கொண்டு புத்தாடை அணிந்து உறவினர்களுடன் இந்த நன்நாளில் இன்பமுற்று இருப்பது போல வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ஏழைகளின் கண்ணீரை துடைத்திடுவோம், வறியவர்களுக்கு உதவிடுவோம். மத நல்லிணக்கத்தை காத்திடுவோம் என்று இந்த நன்னாளில் உறுதி ஏற்போம். இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்.

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி:-

    ரம்ஜான் பண்டிகையின் மகிழ்ச்சியே இல்லாதவர்களுக்கு செல்வங்களை கொடுத்து மகிழ்வதுதான். சகோதரத்துவத்தை வளர்த்தல், அன்பை பகிர்தல் என ரமலான் பண்டிகை மனித நேயத்தையும் உணர்த்துகிறது. இதுவே அதன் சிறப்பாகும். இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், இந்திய ஹஜ் அஷோசி யே‌ஷன் தலைவர் ஏ.அபுபக் கர் ஆகியோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Ramadan
    ×