search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalyanasundaram MLA."

    • கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டியில் காலாப்பட்டு முழுவதும் இருந்து 12 அணிகள் பங்கு பெற்றன.
    • பெரிய காலாப்பட்டு அணி 2-ம் இடத்தையும், கணபதி செட்டி குளம் அணியினர் முதல் இடத்தையும் பிடித்தனர்.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு தொகுதி கைப்பந்து வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதலாமாண்டு காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. கோப்பை விளையாட்டு போட்டிகள் கடந்த 1-ந் தேதி தொடங்கியது.

    கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. போட்டிகளை தொடங்கி வைத்தார். போட்டியில் காலாப்பட்டு முழுவதும் இருந்து 12 அணிகள் பங்கு பெற்றன. அனைத்து ஆட்டங்களும் லீக் முறையில் நடத்தப்பட்டது. ஆலங்குப்பம் அன்னை நகர் அணி, ஆலங்குப்பம் வாரியர்ஸ் அணி, பெரிய காலாப்பட்டு அணி, கணபதி செட்டிக் குளம் ஏ அணி ஆகியவை சூப்பர் லீக் தகுதி பெற்றன.

    விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் ஆலங்குப்பம் அன்னை நகர் அணி 4-ம் இடத்தையும், ஆலங்குப்பம் வாரியர்ஸ் அணி 3-ம் இடத்தையும், பெரிய காலாப்பட்டு அணி 2-ம் இடத்தையும், கணபதி செட்டி குளம் அணியினர் முதல் இடத்தையும் பிடித்தனர்.

    வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. பாராட்டி, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பரிசுகளை அனைத்து விளையாட்டு வீரர்க ளுக்கும் வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் பிரகாஷ், மொய்தீன், ஸ்பைடர் விளையாட்டு கழக பொறுப்பாளர்கள் விஜய சாரதி, அழகேசன், ரவிச்சந்திரன், முருகன், பன்னீர் செல்வம், கவுதமன் ஆகியோர் செய்திருந்தனர். 

    • கனகசெட்டி க்குளம் முதல் பிள்ளைச்சாவடி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலைகளை அகலப்படுத்த வேண்டும்.
    • ஆலங்குப்பம், காலாப்பட்டு பகுதிகளில் பாதாள சாக்காடை திட்டம் கொண்டு வர வேண்டும்.

    புதுச்சேரி:

    மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசியதாவது:-

    கனகசெட்டி க்குளம் முதல் பிள்ளைச்சாவடி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலைகளை அகலப்படுத்த வேண்டும், என்.சி.சி.ஆர். திட்டத்தின் கீழ் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் முள் வளைவை அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை ஊழியர்கள் புதுவையில் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்ய வேண்டும்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காலாப்பட்டு தொகுதியை சேர்க்க வேண்டும். ஆலங்குப்பம், காலாப்பட்டு பகுதிகளில் பாதாள சாக்காடை திட்டம் கொண்டு வர வேண்டும். சுற்றுலாத் துறை மூலமாக காலாபட்டு தொகுதிக்கு ரூ. 1000 கோடிக்கு விரிவான திட்டம் கொடுக்க வேண்டும். 26 ஏக்கரில் அறிவிக்கப்பட்ட ஆலங்குப்பம் கிராம சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

    காலாப்பட்டு கடற்கரை பகுதிகளில் சாகச விளையாட்டுகளை கொண்டு வர வேண்டும். காலாபட்டில் கடற்கரை திருவிழா நடத்த வேண்டும். மீனவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம், மானிய விலையில் மீன்பிடி உபகரணம் வழங்க வேண்டும. காலாப்பட்டில் மீன்பிடி துறைமுகத்தை உடனே அமைத்து தர வேண்டும். அடுத்த ஆண்டு அரசு டைரி வழங்க வேண்டும்.

    சட்டப்பல்கலை அமைய நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அங்கு புதுவை மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். தண்டனை முடிந்துள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஐ.ஆர்.பி.என். காவலர்களுக்கு சிவப்பு நிற தொப்பி வழங்க வேண்டும். சைபர் க்ரைமில் எப்.ஐ.ஆர். போட அதிகாரம் வழங்க வேண்டும்.
    • போலீஸ் சூப்பிரண்டு பதவி வெளியூரை சேர்ந்வர்க ளுக்கே கொடுக்கப்படுகிறது. அவர்கள் எம்.எல்.ஏ.களை மதிப்பதில்லை.

    புதுச்சேரி:

    மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கல்யாணசுந்தரம் பா.ஜனதா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    ஐ.ஆர்.பி.என். காவலர்களுக்கு சிவப்பு நிற தொப்பி வழங்க வேண்டும். சைபர் க்ரைமில் எப்.ஐ.ஆர். போட அதிகாரம் வழங்க வேண்டும். காவலர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.

    காவல்துறை உயரதி காரிகள் வசதியானர்கள், வெளிநாட்டினர் மீது வழக்கு பதிவு செய்வதில்லை. போலீஸ் சூப்பிரண்டு பதவி வெளியூரை சேர்ந்வர்க ளுக்கே கொடுக்கப்படுகிறது. அவர்கள் எம்.எல்.ஏ.களை மதிப்பதில்லை.

    புதிய கல்விக்கொள்கை யை கொண்டு வர வேண்டும். அரசு பள்ளியில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாணவர் பஸ் தரமில்லாமல் உள்ளது. பி.ஆர்.டி.சி. மூலமாக இ-பஸ் வாங்கி இயக்க வேண்டும்.

    புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள ஆட்சிக்குழுவில் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. கள் உறுப்பினர்களாக இல்லை. புதுவைக்கு வரும் வெளிமாநில அதிகாரிகளும் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துங்கள்.

    தண்டனை காலம் முடித்து சிறையில் இருக்கும் சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். சிறை காவலர்களுக்கு பதவி உயர்வும், இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு கல்யாண சுந்தரம் பேசினார்.

    • புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத டிஜிட்டல் மயமாக்க வேண்டும். தமிழகத்தில் இதற்காக மத்திய அரசு நிதி அளிக்கிறது.
    • சமுதாய கூடங்களை மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் நிர்வகிக்க ஏற்பாடு செய்யலாம்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசியதாவது:-

    புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத டிஜிட்டல் மயமாக்க வேண்டும். தமிழகத்தில் இதற்காக மத்திய அரசு நிதி அளிக்கிறது. புதுவைக்கு ஏன் நிதி வழங்கவில்லை. மழை நீர் சேகரிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    புதுவையின் ஒவ்வொரு பகுதியிலும் சமுதாய கூடம் உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் அதில் உள் கட்டமைப்பு வசதி இல்லை. சமுதாய கூடங்களை மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் நிர்வகிக்க ஏற்பாடு செய்யலாம். சமுதாய கூடத்தை தரம் உயர்த்தி திருமண மண்டபங்களாக மாற்றலாம்.

    கிழக்கு கடற்கரை மீன் அங்காடியில் காலாப்பட்டு மீனவர்களுக்கு இடம் ஒதுக்கி தரப்படவில்லை. அவர்களுக்கு நவீன மீன் மார்க்கெட்டில் இடம் கொடுங்கள் இல்லையென்றால் புதிதாக ஒரு மார்க்கெட் கட்டி கொடுக்க வேண்டும்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரின் கீழ் 3 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதனால் பட்டா, பட்டா மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. சட்டமன்றத்தை தவிர வேறு அனைத்தையும் பதிவு செய்து தரும் நிலையில் பத்திரப்பதிவு துறை உள்ளது. பத்திரப்பதிவு துறையில் பணியில் உள்ளவர்களை சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும். ஆன்லைன் பட்டா மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கல்யாணசுந்தரம் பேசினார்.

    • குடிமைப்பொருள் வழங்கல் துறை மக்களுக்கான துறை. கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகாரிகள் அங்கு பணியாற்றுகிறார்கள்.
    • கொரோனா காலத்திற்கு பிறகு காலாப்பட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.

    புதுச்சேரி:

    பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    குடிமைப்பொருள் வழங்கல் துறை மக்களுக்கான துறை. கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகாரிகள் அங்கு பணியாற்றுகிறார்கள். அமைச்சர் இந்த துறையில் தனி கவனம் செலுத்தி லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காலாப்பட்டில் அமை ந்துள்ள சிறைச்சாலையில் தண்டனை காலம் முடிவடைந்தும் சிறையில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் பங்களிப்புடன் ரூ.24 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள்தரம் உயர்த்த ப்படும் என அறிவித்தது பாராட்டுக்குரியது.

    கொரோனா காலத்திற்கு பிறகு காலாப்பட்டில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால் கழிப்பறை, விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே அனைத்து பள்ளிகளிலும் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு விடுவதை கைவிட்டு, மகளிர் சுய உதவி குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை 1 முதல் 6 வரை கொண்டு வருவதற்கு நன்றி. மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7- வது ஊதியக்குழு நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும். மாணவர் இளைஞர்கள் போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அவர்களை வழிநடத்தி செல்ல உடற்பயிற்சி ஆசிரியர்கள் தேவை.

    ஐ.டி. பார்க் காலாப்பட்டில் ஆரம்பிப்பதாக கூறினர். பல்கலைக்கழகத்தில் பல ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. அதனை ஐ.டி. பார்க் அமைக்க பயன்படுத்தி க்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை மாநில அரசு பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடையிலான கைப்பந்து போட்டி லாஸ்பேட்டை முத்து லட்சுமி அம்மாள் கைப்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது.
    • போட்டியை தொடங்கி வைத்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அரசு பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடையிலான கைப்பந்து போட்டி லாஸ்பேட்டை முத்து லட்சுமி அம்மாள் கைப்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது.

    போட்டியை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து போட்டி நடுவர்களுக்கு சீருடை வழங்கினார். புதுவை காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் இருந்து அரசு பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

    போட்டியை தொடங்கி வைத்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

    • புதுவை காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், கவர்னர் தமிழிசையிடம் ஒரு மனு அளித்துள்ளார்.
    • பல பெண் குழந்தைகள் என்னிடம் தங்களின் மனவேதனையை வெளிப் படுத்தியுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், கவர்னர் தமிழிசையிடம் ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    என் தொகுதியில் காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்குள்ள விழாக்களில் பங்கேற்க செல்லும்போது தண்டனை முடிந்த கைதிகள் பலர் இன்னும் சிறையில் வாடி வருவதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கைதிகளின் குழந்தைகள் பண்டிகை நாட்களில் பெற்றோரை பார்க்கும் போது மிகுந்த வேதனையடுகின்றனர்.

    பல பெண் குழந்தைகள் என்னிடம் தங்களின் மனவேதனையை வெளிப் படுத்தியுள்ளனர். அரசு கொறடாவும், நானும் சமீபத்தில் சிறையில் இதுபோன்ற நிகழ்வை சந்தித்தோம்.

    இதுகுறித்து இருவரும் சட்டசபை யிலும் குரல் எழுப்பினோம். கவர்னர் உண்மைநிலையை அறிந்து தண்டனை காலம் முடிந்தும் சிறையில் வாடி வரும் கைதிகளை உடனடியாக விடுவிக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆலங்குப்பம் பகுதியில் தேசிய மூங்கில் வளர்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • விளையாட்டு கவுன்சிலில் பணியாற்றும் பயிற்சியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பேசியதாவது:-

    ஆலங்குப்பம் பகுதியில் தேசிய மூங்கில் வளர்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்தாண்டு நடைபெறாத மலர் கண்காட்சியை இந்த ஆண்டு நடத்த வேண்டும். பிரதமர் 8 ஆண்டுகாலமாக ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்து வருகிறார்.

    இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தந்துள்ளது. அதனால் தான் அடுத்த முறையும் மோடிதான் பிரதமர் என ஆணித்தரமாக கூறுகிறோம்.

    விளையாட்டு துறையை தனி துறையாக மாற்றியதற்கு நன்றி. கடந்த 5 ஆண்டுகளாக விளையாட்டு வீரர்கள் ஊக்குவிக்கப்படவில்லை. புதுவையில் அதிகாரிகள் சரியில்லை. விளையாட்டு கவுன்சிலில் பணியாற்றும் பயிற்சியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

    அனைத்து பள்ளிகளிலும் உள்கட்டமைப்பை செய்து தர வேண்டும். எனது தொகுதியில் உள்ள மகளிர் தொழில்நுட்ப கல்லூரியை பொறியியல் கல்லூரியாக மாற்றியதற்கு நன்றி. பெரிய காலாப்பட்டில் தேசிய சட்ட பல்கலைக் கழகம் அமைக்க 25 ஏக்கர் விவசாய நிலத்தை கொடுத்துள்ளோம்.

    நிலம் கொடுத் தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். உயர் கோபுர மின் விளக்குகளை சீரமைத்து தர வேண்டும். எனது தொகுதியில் தூண்டில் முள் வளைவு அமைத்துத் தர வேண்டும். ஆலங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் சிகிச்சை அளிக்க மருத்துவரை நியமிக்க வேண்டும்.

    ஆலங்குப்பம் பகுதியில் 4 மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி செல்லும் மாணவர்களின் பெற்றோர்கள் அவதிப் படுகின்றனர். மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்தும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. தண்டனை முடித்தும் சிறையில் 27 கைதிகள் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×