search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KT Rajendrabalaji speech"

    • எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க மக்கள் தயாராகி விட்டனர் என்று கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
    • 2024 பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது.

    ராஜபாளையம்.

    ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் தேரடி திடலில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. ராஜபாளையம் வடக்கு ஒன்றிய செய லாளரும், முகவூர் கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.எம்.குருசாமி தலைமை தாங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பங்கேற்று பேசியதாவது:-

    தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாகவும், தில்லுமுல்லு ஆட்சியாகவும் நடைபெற்று வருகிறது. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.

    உதயநிதி ஸ்டாலின் எங்கள் தலைவர் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பேசினார். அதேபோல் கனிமொழி ஒரேயொரு கையெழுத்தில் மதுபான கடைகள் மூடப்படும் என்றார். ஆனால் மதுக்கடைகள் மூடப்படவில்லை. அதற்கு பதிலாக 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது.

    மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு மக்கள் மீதும், கடவுள் மீதும் அச்சம் கிடையாது. ஆகையால் தான் அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    2024 பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது.தமிழக மக்கள் மீண்டும் எடப்பாடி யாரை முதலமைச்சராக்கி அழகு பார்க்க தயாராகி விட்டனர்.தி.மு.க. ஆட்சி எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

    குறிப்பாக ராஜபாளையம் பகுதியில் நான் அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட ெரயில்வே மேம்பால பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. இதனால் ராஜபாளையம் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலை ராஜ பாளையம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் எம்.ஜி.ஆர். இளை ஞரணி துணை செயலாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ், மகளிரணி துணை செயலாளர் சந்திரபிரபா, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுப்பிரமணியம்,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ்,மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட இணைசெயலாளர் அழகுராணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் வனராஜ், ராஜபாளையம் நகர செயலாளர்கள் துரைமுருகேசன்(வடக்கு), பரமசிவம்(தெற்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அ.திமு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் படிக்கட்டாக அமையும் என்று கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
    • திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.

    சிவகாசி

    விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் தி.மு.க. அரசை கண்டித்தும் வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து சிவகாசியில் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் நகர செயலாளர் அசன்பதுருதீன் தலைமையில் நடந்தது. சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    தி.மு.க. அரசை கண்டித்து சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் நடைபெறும் மாபெரும் கண்டன பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

    அ.தி.மு.க. ஆட்சியை இழக்கவில்லை. ஆட்சி பறிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் எப்போதெல்லாம் அ.தி.மு.க.வில் பிரச்சினை நிலவுகிறதோ அப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வந்து விடுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சிவகாசியில் தீப்பெட்டி, பட்டாசு, அச்சு தொழிலுக்கு பாதுகாவலனாக இருந்துள்ளேன். எல்லா தொழிலுக்கும் எடப்பாடியார் உறுதுணையாக இருந்துள்ளார். அடுத்து வரும் எம்.பி. தேர்தலோடு எம்.எல்.ஏ. தேர்தலும் சேர்ந்து வரலாம். எனவே அ.தி.மு.க. தொண்டர்கள் இப்போதே தயாராக வேண்டும். சிவகாசிக்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க வேண்டும்.

    இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். சிவகாசியில் தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் கண்டண பொதுக்கூட்டம் அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் படிக்கட்டாக அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் முத்துபாண்டியன்,மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பிலிப்வாசு, முன்னாள் மாவட்ட இளைஞரணி அவைத் தலைவர் லட்சம், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×