search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ready"

    • எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க மக்கள் தயாராகி விட்டனர் என்று கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
    • 2024 பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது.

    ராஜபாளையம்.

    ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் தேரடி திடலில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. ராஜபாளையம் வடக்கு ஒன்றிய செய லாளரும், முகவூர் கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.எம்.குருசாமி தலைமை தாங்கினார்.

    இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பங்கேற்று பேசியதாவது:-

    தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாகவும், தில்லுமுல்லு ஆட்சியாகவும் நடைபெற்று வருகிறது. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.

    உதயநிதி ஸ்டாலின் எங்கள் தலைவர் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பேசினார். அதேபோல் கனிமொழி ஒரேயொரு கையெழுத்தில் மதுபான கடைகள் மூடப்படும் என்றார். ஆனால் மதுக்கடைகள் மூடப்படவில்லை. அதற்கு பதிலாக 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது.

    மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு மக்கள் மீதும், கடவுள் மீதும் அச்சம் கிடையாது. ஆகையால் தான் அவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    2024 பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரப்போகிறது.தமிழக மக்கள் மீண்டும் எடப்பாடி யாரை முதலமைச்சராக்கி அழகு பார்க்க தயாராகி விட்டனர்.தி.மு.க. ஆட்சி எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை.

    குறிப்பாக ராஜபாளையம் பகுதியில் நான் அமைச்சராக இருந்த போது கொண்டு வரப்பட்ட ெரயில்வே மேம்பால பணிகள் பாதியிலேயே நிற்கின்றன. இதனால் ராஜபாளையம் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலை ராஜ பாளையம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் எம்.ஜி.ஆர். இளை ஞரணி துணை செயலாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மான்ராஜ், மகளிரணி துணை செயலாளர் சந்திரபிரபா, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுப்பிரமணியம்,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாபுராஜ்,மாவட்ட பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மாவட்ட இணைசெயலாளர் அழகுராணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் வனராஜ், ராஜபாளையம் நகர செயலாளர்கள் துரைமுருகேசன்(வடக்கு), பரமசிவம்(தெற்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 7-ந் தேதி இரவு நெல்லை வருகிறார்.
    • வரவேற்பு ஏற்பாடுகளை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று அரசு விழாக்களில் பங்கேற்று வருகிறார்.

    மு.க.ஸ்டாலின் வருகை

    அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிற 7-ந்தேதி இரவு நெல்லை வருகிறார். முன்னதாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மதியம் வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற உள்ள ராகுல்காந்தியின் பாதயாத்திரை தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் அங்கிருந்து நெல்லை திரும்பும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று இரவு தாழையூத்து பகுதியில் தங்குகிறார். மறுநாள் (8-ந்தேதி) காலை 10 மணிக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

    நலத்திட்ட உதவிகள்

    இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதில் இலவச வீட்டுமனை பட்டா, விதவைகள் உதவித்தொகை, திருநங்கைகள் தொழில் தொடங்க கடன் உதவி, இலவச வீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் செய்து வருகின்றனர். முன்னதாக மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் மேடை போலீஸ் நிலையம், வ.உ.சி. மைதானம் உள்ளிட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை அவர் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். இதற்காக விழா மேடை, பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உற்சாக வரவேற்பு

    இதனையொட்டி அங்கு இருக்கைகள் அமைக்கும் பணி, பிரமாண்ட மேடை, மேற்கூரைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாகனங்கள் பார்க்கிங், குடிநீர், கழிவறை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    முன்னதாக 7-ந்தேதி மாலை குமரியில் இருந்து வரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நெல்லை-குமரி மாவட்ட எல்லையான காவல்கிணறில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் பணகுடி, வள்ளியூர், நாங்குநேரி ஆகிய இடங்களில் அவருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

    சுவர் விளம்பரங்கள்

    இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இதேபோல் மாநகர பகுதியில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த இடங்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று ஆய்வு செய்தார்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் சார்பில் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டு வருகிறது.

    ×