search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "judge sathya narayana"

    தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டுள்ளார். #MLAsDisqualificationCase
    சென்னை:

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கை விசாரித்த 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் இன்று தீர்ப்பு அளித்தார். காலை 10.25 மணிக்கு நீதிபதி கோர்ட்டுக்கு வந்தார். சரியாக 10.30 மணிக்கு தீர்ப்பின் முக்கிய பகுதியை வாசிக்கத் தொடங்கினார்.

    அப்போது 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமனிடம், ‘நான் தலைமை நீதிபதி தீர்ப்பு சரியா? நீதிபதி எம்.சுந்தர் தீர்ப்பு சரியா? என்ற வி‌ஷயத்துக்குள் செல்ல விரும்பவில்லை. நான் சுதந்திரமான முடிவுக்கு வந்து, இந்த தீர்ப்பை பிறப்பித்துள்ளேன்’ என்று கூறினார்.

    பின்னர் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பு விவரம் வருமாறு:-

    ‘18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் எந்த ஒரு உள்நோக்கமோ, தவறோ இல்லை என்ற முடிவுக்கு வருகிறேன்.

    மேலும், 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பிக்கும் போது என்ன ஆதாரமும், ஆவணங்களும், சூழ்நிலைகளும் நிலவியதோ, அதன் படி தான் சபாநாயகர் முடிவு எடுக்க முடியும். அதன்படி அவர் முடிவு எடுத்துள்ளார். அதில் தவறு இல்லை. அதை தொடர்ந்து பின்னர் நடைபெறும் நிகழ்வுகளை எல்லாம் அவர் பரிசீலிக்கத் தேவையில்லை.

    மேலும், முதல்அமைச்சருக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் கடிதம் கொடுத்த போது, அதை பெற்றுக்கொண்ட தமிழக கவர்னர், இந்த விவகாரத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.


    இதை தலைமை நீதிபதி அமர்வு முன்பு 18 எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் கூறவில்லை. மேலும், சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த தீர்ப்புகளின் அடிப்படையில், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறேன்.

    ஏற்கனவே, 18 சட்டசபை தொகுதிகளையும் காலியாக அறிவிப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு இந்த ஐகோர்ட்டு தடை விதித்து இருந்தது. அதேபோல, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு தடை விதித்து இருந்தது. இந்த தடைகளை எல்லாம் நீக்கி உத்தரவிடுகிறேன்.

    இவ்வாறு நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பளித்தார்.

    தடைகள் எல்லாம் நீக்கப்பட்டு விட்டதால், இந்திய தேர்தல் ஆணையம் 18 சட்டசபை தொகுதிகளை காலியாக அறிவித்து, அங்கு இடைத்தேர்தல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. #MLAsDisqualificationCase
    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிபதி தீர்ப்பை எழுதி முடித்து விட்டதாகவும், நாளை மறுநாள் தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. #18MLAsCase #MLAsDisqualificationCase
    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு 4 அணிகள் உருவானது.

    அதன்பிறகு முதல்- அமைச்சர் எடப்பாடியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து அ.தி.மு.க. கட்சி- ஆட்சி இரண்டையும் கைப்பற்றினார்கள்.

    சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில் தனி அணியாக செயல்பட்டு வரும் தினகரனுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் ஆதரவு அளித்து வந்தனர். அவர்கள் தமிழக கவர்னரை சந்தித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், அவருக்கு பதில் வேறு ஒருவரை முதல்-அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து 18 எம்.எல்.ஏ.க்களும் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் சிபாரிசின் பேரில் சபாநாயகர் தனபால் இந்த நடவடிக்கையை எடுத்தார்.

    சபாநாயகர் நடவடிக்கையை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது.

    நீதிபதி சத்திய நாராயணா

    இதையடுத்து 3-வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சத்திய நாராயணா இந்த வழக்கை விசாரணை நடத்தினார். வக்கீல்கள் வாதம் நிறைவு பெற்றதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்தார்.

    இந்த நிலையில் நீதிபதி தீர்ப்பை எழுதி முடித்து விட்டதாகவும், நாளை மறுநாள் (25-ந்தேதி) இதில் தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வருமா? அல்லது செல்லாது என்று தீர்ப்பு வருமா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    செல்லாது என்று தீர்ப்பு கூறினால் 18 பேருக்கும் எம்.எல்.ஏ. பதவி திரும்ப கிடைத்து விடும். இதன் மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இந்த நிலையில் மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஆட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    தகுதி நீக்கம் செல்லும் என்று நீதிபதி தீர்ப்பளித்தால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் 18 தொகுதிகளும் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டி வரும்.

    இதனால் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. #18MLAsCase #MLAsDisqualificationCase
    ×