search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Janata Party"

    • முருங்கபாக்கம் அரவிந்தர் நகர் பகுதியில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
    • விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன் முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், வீடு வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து, வாக்காளர் பட்டியலை சரிபார்த்து 18 வயது நிரம்பியவர்களையும், அந்தப் பகுதிக்கு புதிதாக குடியேறியவர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தும், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பணிகளை மேற்கொள்ளு மாறு கட்சியின் தேசிய தலைமை, மற்றும் மாநில தலைமை அறிவுறுத்தி உள்ளது.

    அந்த வகையில் அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதி பா.ஜனதா சார்பில் முருங்கபாக்கம் அரவிந்தர் நகர் பகுதியில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சி அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன் முன்னிலை வகித்தார். பார்வையாளராக மாவட்ட செயலாளர் ராஜ் கலந்து கொண்டார் .

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், பொதுச் செயலாளர்கள் பிச்சைமுத்து, முருகவேல், தொகுதி துணை தலைவர் புகழேந்தி, கிளை தலைவர்கள் ராமமூர்த்தி, தியாகராஜன், மணி, வசந்தி, ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
    • அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாநில, மாவட்ட, தொகுதி, கிளை நிர்வாகிகள் இப்பணியை தொடங்கி உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் பெயர் சேர்ப்பது நீக்குவது சரிபார்ப்பதை தேசிய தலைமையில் அறிவுறுத்தலின்படி தொடங்கி உள்ளனர்.

    அதன் படி லாஸ்பேட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணி இன்று தொடங்கியது.

    லாஸ்பேட்டை உழவர் சந்தை அருகில் தொடங்கிய இந்நிகழ்ச்சியை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் லதா உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் அலுவலக செயலாளர் கவுரிசங்கர், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கனகவல்லி, லாஸ்பேட்டை தொகுதி பொதுச் செயலாளர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், கார்த்திகேயன், திருமால், செல்வாஸ் அசோகன், விஜய பூபதி, மணிமேகலை, ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இது போல் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மாநில, மாவட்ட, தொகுதி, கிளை நிர்வாகிகள் இப்பணியை தொடங்கி உள்ளனர்.

    ×