என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
பாரதிய ஜனதா கட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- முருங்கபாக்கம் அரவிந்தர் நகர் பகுதியில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
- விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி:
பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், வீடு வீடாக சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து, வாக்காளர் பட்டியலை சரிபார்த்து 18 வயது நிரம்பியவர்களையும், அந்தப் பகுதிக்கு புதிதாக குடியேறியவர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தும், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பணிகளை மேற்கொள்ளு மாறு கட்சியின் தேசிய தலைமை, மற்றும் மாநில தலைமை அறிவுறுத்தி உள்ளது.
அந்த வகையில் அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதி பா.ஜனதா சார்பில் முருங்கபாக்கம் அரவிந்தர் நகர் பகுதியில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சி அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன் முன்னிலை வகித்தார். பார்வையாளராக மாவட்ட செயலாளர் ராஜ் கலந்து கொண்டார் .
நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், பொதுச் செயலாளர்கள் பிச்சைமுத்து, முருகவேல், தொகுதி துணை தலைவர் புகழேந்தி, கிளை தலைவர்கள் ராமமூர்த்தி, தியாகராஜன், மணி, வசந்தி, ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்