search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "injection"

    • அந்தியூரில் போதை மாத்திரை, ஊசி பயன்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருக்கும் 2 பேரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்
    • மேலும் இது குறித்து போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர்.

    அந்தியூர்,

    அந்தியூர் அருகே சண்டி ப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள மயான த்தில் 7 பேர் கொண்ட கும்பல் போதை ஊசி, போதை மாத்திரை போ ட்டுக் கொண்டிருந்தனர். அதில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பின்னர் போலீசார் பிடி பட்டவர்களை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழை த்து சென்றனர். விசாரணை யில் அவர்கள் அதே பகுதி யைச் சேர்ந்த மகாதேவன், ரூபேஷ், மகேஸ்வரன், வெ ங்கடேசன், சவுந்தர் ஆகியோ ர் என தெரியவந்தது.

    இவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பி லான போதை ஊசி, மாத்தி ரையை போலீசார் பறிமு தல் செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் பாலாஜி, திருமூர்த்தி ஆகி யோரை பிடிக்க இன்ஸ்பெ க்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். தலைமறை வாக இருக்கும் 2 பேரை பிடித்தால் தான் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரி யவரும் என போலீசார் தரப்பில் தெரிவித்து ள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசார ணை மேற்கொண்டு வருகி ன்றனர்.

    • தனி படை போலீசார் அதிரடியாக அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்
    • சூர்யா மற்றும் கிடங்கல் 2 பகுதியைச் சேர்ந்த பொற்செல்வன் ஆகியோர் போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

     விழுப்புரம்:

    திண்டிவனத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போதை ஊசி,போதை மாத்திரை பயன்படுத்துவதாகவும் விற்பனையில் ஈடுபடுவதாகவும் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து திண்டிவனம் டி.எஸ்.பி.சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் போதை மாத்திரைகளை பயன்படுத்துவர்கள் மற்றும் விற்பவர்களை ரகசிய தகவலின் பேரில் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டிவனம் சின்ன முதலி தெருவில் சூர்யா என்பவர் வீட்டில் போதை மாத்திரை விற்பனை செய்வதாகவும் மற்றும் பயன்படுத்தி வருவதாகவும் சுடி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து தனி படை போலீசார் அதிரடியாக அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது சூர்யா மற்றும் கிடங்கல் 2 பகுதியைச் சேர்ந்த பொற்செல்வன் ஆகியோர் போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.அவர்களை பிடிக்க முற்பட்டபோது பொற்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடி அருகே உள்ள வீட்டில் மறைந்து கொண்டான் .  ஆனாலும் போலீசார் அவனை மடக்கி பிடித்தனர். பொற்செல்வன் மற்றும் சூர்யாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவர்களிடம் இருந்த போதை மாத்திரை ,போதை ஊசியை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இது குறித்து டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் கூறும் போது, திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் பயன்படுத்தினாலோ, விற்றாலோ,அதற்கு துணை போனாலும் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .மேலும் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை தெரிவித்தால் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றார்.

    ×