என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "humans"
- உலக சிட்டுக்குருவிகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.
- டெல்லி அரசு சிட்டுகுருவியை தங்களது மாநில பறவையாக அறிவித்துள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில், நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்,கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக திருப்பூர் இயற்கை கழக பிரதிநிதி ராம்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில் :- அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை காக்க உலகம் முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.டெல்லி அரசு சிட்டுகுருவியை தங்களது மாநில பறவையாக அறிவித்துள்ளது.உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய பறவை. கோடை காலங்களில் பறவைகளுக்கு தினமும் தண்ணீர் வைக்க வேண்டும், குருவிகளுக்கு தண்ணீர் வைப்பது பெருமையல்ல அது நம்முடைய கடமை, மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும் பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது எனறு கூறி சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதற்காக செயற்கை முறையில் கூட்டை எப்படி உருவாக்க வேண்டும், அதன் அளவுகளை எவ்வாறு கணக்கீடு செய்யவேண்டும் என்று கூறினார். பிறகு பறவை ஆர்வலர் கீதாமணி,கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவச் செயலர்கள் சுந்தரம்,பூபதி ராஜா, ரமேஷ்,மதுகார்த்திக் ஆகியோர் தலைமையில் 55 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டு இயற்கையை காப்பாற்ற சிட்டுக்குருவிகள் அவசியம் என்பதை உணர்ந்து சிட்டுக்குருவி தினத்தன்று அனைவரும் சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அல்ஜியர்ஸ்:
பூமியில் மனிதர்கள் தோன்றியது எங்கு? எப்போது? என்பது குறித்த பல்வேறு சர்ச்சைகளும், ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் வட ஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜீரியா நாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டது. அதில் அல்ஜீரியா உள்பட சர்வதேச நாடுகளின் நிபுணர்கள் பங்கேற்றனர். அதில் அல்ஜியர்ஸ் நகரில் இருந்து கிழக்கே 300 கி.மீ. தொலைவில் உள்ள செடிப் என்ற இடத்தில் கற்களால் ஆன கூர்மையான ஆயுதங்கள் கிடைத்தன.
இவை தவிர விலங்குகளின் வெட்டப்பட்ட எலும்புகளும் சிக்கின. இவற்றை ஆய்வு செய்தனர். இதில் அவை கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் என கண்டறியப்பட்டது. இதே போன்ற ஆயுதங்கள் ஏற்கனவே கிழக்கு ஆப்பிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
வெட்டப்பட்ட விலங்குகளின் எலும்புகள் பழங்கால முதலைகள், யானைகள் மற்றும் நீர் யானைகளுடையது என்றும் தெரிய வந்துள்ளது. அவை வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
முந்தைய ஆய்வின்படி 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாததையர்கள் வேட்டையாட பயன்படுத்திய கற்கால ஆயுதங்கள் போன்றே இவையும் உள்ளது. எனவே கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த மூதாதையர்கள் இவற்றை பயன்படுத்தியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதே நேரத்தில் மனிதர்கள் 24 லட்சம் ஆண்டுகள் அல்லது 19 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என 2 விதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன.
வட ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் சோனா பகுதியில் உள்ள அய்ன்லானோக் என்ற இடத்தில் ஆதிகால மனிதர்கள் உருவாகியிருக்கலாம். அவர்கள் 6 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கலாம் என்றும் நிபுணர்கள் முகமது சகோனி உறுதிபட தெரிவித்துள்ளார். #HumanEvolution
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்