என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனிதர்கள்"
- வன உயிரின ங்களுக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் மோதல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
- பல்வேறு செயல்முறை விளக்க காட்சிகள் நடைபெற்றன.
ஈரோடு:
அறச்சலூரில் உள்ள கொடுமுடி சாலை சந்திப்பில் வன உயிரின ங்களுக்கும் மனிதர்களுக்கு ஏற்படும் மோதல் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
இதில் வன உயிரினங்க ளுடனான சந்திப்பின்போது தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள் மற்றும் வன உயிரினங்களின் தொல்லையில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்த பல்வேறு செயல்முறை விளக்க காட்சிகள் நடைபெற்றன.
நிகழ்வில் ஈரோடு வனச்சரக அலுவலர் சுரேஷ், வனவர் சந்தோஷ், வனக்காவலர்கள் துரைசாமி, ராமசாமி, கோமதி, ரீனுபிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
- உலக சிட்டுக்குருவிகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.
- டெல்லி அரசு சிட்டுகுருவியை தங்களது மாநில பறவையாக அறிவித்துள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின கருத்தரங்கு மற்றும் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில், நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்,கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக திருப்பூர் இயற்கை கழக பிரதிநிதி ராம்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அவர் பேசுகையில் :- அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை காக்க உலகம் முழுவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.டெல்லி அரசு சிட்டுகுருவியை தங்களது மாநில பறவையாக அறிவித்துள்ளது.உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய பறவை. கோடை காலங்களில் பறவைகளுக்கு தினமும் தண்ணீர் வைக்க வேண்டும், குருவிகளுக்கு தண்ணீர் வைப்பது பெருமையல்ல அது நம்முடைய கடமை, மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும் பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது எனறு கூறி சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதற்காக செயற்கை முறையில் கூட்டை எப்படி உருவாக்க வேண்டும், அதன் அளவுகளை எவ்வாறு கணக்கீடு செய்யவேண்டும் என்று கூறினார். பிறகு பறவை ஆர்வலர் கீதாமணி,கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவச் செயலர்கள் சுந்தரம்,பூபதி ராஜா, ரமேஷ்,மதுகார்த்திக் ஆகியோர் தலைமையில் 55 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ ,மாணவிகள் கலந்து கொண்டு இயற்கையை காப்பாற்ற சிட்டுக்குருவிகள் அவசியம் என்பதை உணர்ந்து சிட்டுக்குருவி தினத்தன்று அனைவரும் சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியாக நாய் திகழ்கிறது. இது மனிதர்களின் நண்பனாக மாறியுள்ளது. வீட்டில் பாதுகாப்பிற்காகவும், தனிமையை குறைப்பதற்காவும் பலர் நாய்களை வளர்க்கின்றனர். நாய் மிகவும் நன்றியுள்ள மிருகமாக கருதப்படுகிறது. இந்நிலையில், மனிதர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளும் திறன் நாய்களுக்கு இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்பிரிஞ்சர் என்ற தனியார் நிறுவனம் எடுத்த ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. நாய்கள் தங்கள் எஜமான்களின் முகபாவத்திற்கு ஏற்ப தலையை திருப்புகின்றன. கோபம், பயம் மற்றும் சந்தோஷமாக இருக்கும் போது தலையை இடது பக்கமாக திருப்புகின்றன. ஆச்சரியமாக முகத்தை வைத்திருக்க்ம் போது வலது பக்கமாக தலையை திருப்புகின்றன.
ஒருவேளை அவர்கள் சோகமாக இருந்தால் நாய்களின் இதயத்துடிப்பு மிகவும் அதிகரிக்கிறது. இந்த ஆய்வு மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையே உள்ள பாசத்தை எடுத்துக்காட்டுகிறது. மனிதர்களுடன் நெருங்கி வாழ்வதன் மூலம் நாய்கள் புதிய பண்புகளை வளர்த்துக்கொண்டுள்ளன. அவற்றின் மூலம் மனிதர்களுடன் பேசிப்பழகுகின்றன.
நாய்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவற்றின் மூளை செயல்பாடு குறித்து அறிய முடிந்தது. மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில் நாய்களின் மூளை தான் பெரும் பங்கு வகிக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்