search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gastric cancer"

    • அசுத்தமான குடிநீரில் ஹெலிகோபாக்டர் பைலோரி கிருமி இருக்கும்.
    • இரைப்பை புற்றுநோயை தூண்டும்.

    இரைப்பை புண் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. `ஹெலிகோபாக்டர் பைலோரி' எனும் பாக்டீரியா கிருமி காரணமாக இரைப்பை புண் ஏற்படுவதுதான், தற்காலத்தில் அதிகம். அசுத்தமான குடிநீரில் இந்த கிருமி இருக்கும். அதைக் குடிப்பவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்றிக்கொள்ளும். இது பல வருடங்களுக்கு இரைப்பையில் வாழும். இதற்கு சிகிச்சை எடுக்கத் தவறினால், நாளடைவில் இது இரைப்பை புற்றுநோயை தூண்டும்.

    மற்றவர்களைவிட இந்த கிருமித்தொற்று இருப்பவர்களுக்கு, இரைப்பையில் புற்றுநோய் வருவதற்கு 6 மடங்கு வாய்ப்பு அதிகமாம். அடிக்கடி இரைப்பை புண் தொல்லை கொடுத்தால், ஒருமுறை 'எண்டோஸ்கோபி' பரிசோதனை செய்து, 'ஹெலிகோபாக்டர் பைலோரி' கிருமி இருக்கிறதா என்பதை உறுதி செய்து, சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்த புற்றுநோயை தடுத்துவிடலாம்.

    ஹெப்படைடிஸ்-பி மற்றும் சி வைரஸ்கள் கல்லீரலை தாக்கும்போது முதலில் மஞ்சள் காமாலை ஏற்படும். இந்த நோய்க்கிருமி ரத்தம், தாய்ப்பால், விந்து, பெண் பிறப்புறுப்பு திரவங்களில் வெளியேறி அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கர்ப்பிணிக்கு அல்லது தாய்க்கு இந்த நோய் இருந்தால் குழந்தைக்கும் அது தொற்றுகிறது.

    பாலுறவு மூலம் இது மற்றவர்களுக்குப் பரவும். இந்த நோயாளிகள் முன்னெச்சரிக்கை பரிசோதனை செய்யாமல் ரத்ததானம் செய்யும்போது, அந்த ரத்தத்தை பெற்றுக்கொண்டவருக்கும் இந்த நோய் வருகிறது. இவர்களுக்கு போடப்பட்ட ஊசியை சரியாக தொற்றுநீக்கம் செய்யாமல், அடுத்தவருக்கு ஊசி போடப்பட்டால், புதிய நபருக்கும் இந்த நோய் ஏற்படுகிறது.

    இது நாள்பட்ட கல்லீரல் அழற்சி நோயாக மாறி, பின்னர் புற்றுநோயாக உருவெடுக்கும். ஹெப்படைடிஸ்-பி மஞ்சள் காமாலைக்கு தடுப்பூசி உள்ளது. குழந்தைப் பருவத்தில் இதைப் போட்டுக்கொள்ளாமல் இருந்தால், வளர்ந்த பிறகு போட்டுக்கொள்ளலாம். இதன் மூலம் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

    ×