search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garbage truck"

    • நகர மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
    • ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக வானங்களில் சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர்.

    இந்த நிலையில் துப்புர பணியாளர்கள் குப்பைகளை விரைந்து சேகரிக்க, 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 2 வாகனங்கள் வாங்கப்பட்டது. இந்த வாகனங்களை நகர மன்ற தலைவர் எம். காவியாவிக்டர் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    அப்போது நகராட்சி ஆணையர் ஜி. பழனி, நகர செயலாளர் ம. அன்பழகன், நகராட்சி பொறியாளர் சங்கர் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    பம்மல் அருகே ஏரியில் குப்பைகளை கொட்ட முயற்சித்த 3 லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த பம்மல் நகராட்சியில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. நேற்று இரவு 10 மணி அளவில் பம்மல் நகராட்சிக்கு சொந்தமான 3 குப்பை லாரிகள் திருநீர் மலை பேரூராட்சிக்குட்பட்ட ஏரி பகுதிக்கு வந்தன. பின்னர் அதில் இருந்த குப்பைகளை அங்கு கொட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏரியில் குப்பையை கொட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து 3 லாரிகளையும் சிறைபிடித்தனர். பின்னர் அவை திருநீர் மலை பேரூராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று இரவு அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×