search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free land plot"

    • திருபுவனை தொகுதியில் உள்ள 3 பேர்களுக்கு நில அளவை பதிவுத்துறையின் மூலமாக இலவச மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருபுவனை பெருமாள் கோவில் தேவஸ்தான வளாகத்தில் நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதியில் உள்ள 3 பேர்களுக்கு நில அளவை பதிவுத்துறையின் மூலமாக இலவச மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருபுவனை பெருமாள் கோவில் தேவஸ்தான வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இலவச மனை பட்டாவை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து திருபுவனை தொகுதியில் உள்ள கலித்தீர்த்தாள் குப்பம், சன்னியாசிகுப்பம், செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புப்பட்டு, ஆகிய கிராமங்களில் உள்ள மனை பட்டா சொத்து அடையாள அட்டை சுமார் 153 குடும்பங்களுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்திரா நகர் தொகுதி புரட்சி தலைவி நகரில் 13 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் முன்னிலையில் ரங்கசாமி வழங்கினார்.
    • அதன்படி அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி புரட்சி தலைவி நகரில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    இந்திரா நகர் தொகுதி புரட்சி தலைவி நகரில் 13 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் முன்னிலையில் ரங்கசாமி வழங்கினார்.

    புதுவை இந்திராநகர் தொகுதிக்குட்பட்ட புரட்சி தலைவி நகரில் வசித்து வரும் வீடுகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ.வும் அரசு கொறடாவுமான ஏ.கே.டி. ஆறுமுகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதனை ஏற்ற ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. அப்பகுதி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி புரட்சி தலைவி நகரில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. முன்னிலையில் 13 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை அதிகாரிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள், என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×