search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பயனாளிகளுக்கு இலவச மனை பட்டா
    X

    பயனாளிகளுக்கு இலவச மனை பட்டாவை அங்காளன் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

    பயனாளிகளுக்கு இலவச மனை பட்டா

    • திருபுவனை தொகுதியில் உள்ள 3 பேர்களுக்கு நில அளவை பதிவுத்துறையின் மூலமாக இலவச மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருபுவனை பெருமாள் கோவில் தேவஸ்தான வளாகத்தில் நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை தொகுதியில் உள்ள 3 பேர்களுக்கு நில அளவை பதிவுத்துறையின் மூலமாக இலவச மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திருபுவனை பெருமாள் கோவில் தேவஸ்தான வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி இலவச மனை பட்டாவை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து திருபுவனை தொகுதியில் உள்ள கலித்தீர்த்தாள் குப்பம், சன்னியாசிகுப்பம், செல்லிப்பட்டு, சோரப்பட்டு, வம்புப்பட்டு, ஆகிய கிராமங்களில் உள்ள மனை பட்டா சொத்து அடையாள அட்டை சுமார் 153 குடும்பங்களுக்கு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×