search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா
    X

    பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கிய காட்சி.

    பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா

    • இந்திரா நகர் தொகுதி புரட்சி தலைவி நகரில் 13 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் முன்னிலையில் ரங்கசாமி வழங்கினார்.
    • அதன்படி அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி புரட்சி தலைவி நகரில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    இந்திரா நகர் தொகுதி புரட்சி தலைவி நகரில் 13 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் முன்னிலையில் ரங்கசாமி வழங்கினார்.

    புதுவை இந்திராநகர் தொகுதிக்குட்பட்ட புரட்சி தலைவி நகரில் வசித்து வரும் வீடுகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ.வும் அரசு கொறடாவுமான ஏ.கே.டி. ஆறுமுகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    அதனை ஏற்ற ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. அப்பகுதி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி புரட்சி தலைவி நகரில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு ஏ.கே.டி. ஆறுமுகம் எம்.எல்.ஏ. முன்னிலையில் 13 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை அதிகாரிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள், என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×