என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Festival of thanksgiving"
- தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 19-வது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகை நடைபெற்றது.
- விழாவில் ரூ.12லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
நாசரேத்:
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 19-வது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகை கடந்த 22-ந்தேதி தொடங்கி, நேற்று வரை நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாலையில் திருச்சபைகளின் கலைநிகழ்ச்சிகள் நாசரேத் தூயயோவான் கதீட்ரல் வளாகத்தில் நடைபெற்றது. நேற்று காலையில் ஸ்தோத்திரப்பண்டிகை ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை நாசரேத் கதீட்ரலில் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பிரதமப் பேராயரின் ஆணையாளரும், கோவை திருமண்டல பேராயருமான தீமோத்தேயு ரவீந்தர் அருட்செய்தி வழங்கினார். ஆராதனை முடிந்ததும் கதீட்ரல் வளாகத்தில் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
நாசரேத் கதீட்ரல் தலைமை குருவானவர் மர்காஷிஸ் டேவிட் வெஸ்லி ஆரம்ப ஜெபம் செய்தார்.
விழாவில் ரூ.12லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நற்செய்தி அருட்பணித்துறை, சிறுவர் ஊழியம், வாலிபர் ஊழியம், பெண்கள் ஐக்கிய சங்கம், சமூக நலத்துறை, ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள், சுற்றுச் சூழல் துறை, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகள் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல கல்வி நிறுவனங்களின் மேலாளர்கள், தாளாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல சபைமன்றத் தலைவர்கள், சேகரத் தலைவர்கள் குருவானவர்கள் மற்றும் திருமண் டல நிர்வாகிகள், திருச்சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்