search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake SMS"

    • டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாக, பண மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது.
    • போலி எஸ்.எம்.எஸ்.,களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    திருப்பூர்:

    மின் கட்டணம் செலுத்துவது, மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பது என மின்வாரியம் தொடர்புடைய அனைத்து பணிகளும் ஆன்லைன் மயமாகிவிட்ட நிலையில், மின் நுகர்வோரை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில் சில போலி எஸ்.எம்.எஸ்.,களும் உலா வருகின்றன.

    அதன்படி, உங்கள் மின் கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது. உடனடியாக மின் கட்டணம் செலுத்துங்கள். தவறினால், உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.உடனடியாக இந்த எண்ணுக்கு அழையுங்கள் என்ற வாசகம் தாங்கி, ஒரு மொபைல் எண்ணுடன் கூடிய எஸ்.எம்.எஸ்., வந்த வண்ணம் உள்ளது. இது மின் நுகர்வோர் மத்தியில் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

    இதற்கும் மேலாக இன்னும் சில எஸ்.எம்.எஸ்.,களில், ஒரு மொபைல் எண்ணை குறிப்பிட்டு, மின் கட்டண பாக்கியை அந்த எண்ணுக்கு செலுத்த வேண்டும் எனவும், எஸ்.எம்.எஸ்., வருகிறது.

    இது குறித்து திருப்பூர் மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாக, பண மோசடி அதிக அளவில் நடந்து வருகிறது. அதுபோன்ற மோசடி தான், இதுபோன்றஎஸ்.எம்.எஸ்.,கள். இதுபோன்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மின் கட்டணம் செலுத்தியதற்கான தகவல், செலுத்த வேண்டிய தகவல் குறித்த விவரங்கள் மட்டுமே மின்வாரியத்தினர் சார்பில் எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப்படுகிறது என்றனர்.

    நுகர்வோர் சிலர்கூறுகையில்,போலி எஸ்.எம்.எஸ்.,களை அடையாளம் காண்பது, கடினமான காரியமாக உள்ளது. எஸ்.எம்.எஸ்., அதில் வரும் லிங்க் ஆகியவற்றை தொடும் போதே, நமது வங்கிக்கணக்கு, இ-மெயில் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள், மர்ம நபர்களால் சேகரிக்கப்பட்டு, பண மோசடி நடக்கிறது என போலீசார் எச்சரிக்கின்றனர். எனவே போலி எஸ்.எம்.எஸ்.,களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • எஸ்.எம்.எஸ்., மூலமாக மின்சாரம் துண்டிக்கப்படும் என்று குறுஞ்செய்திஅனுப்பி பணம் பறிப்பதற்கான மோசடி நடந்துவருகின்றது.

    திருப்பூர் : 

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச் செயலாளர் ஈ.பி. சரவணன், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், கயல்விழி செல்வராஜ், மற்றும் கலெக்டர் வினீத் ஆகியோரிடம் ஒரு கோரிக்கையை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு மின்வாரியம்பெயரில் செலுத்தப்படாத மின்கட்டணத்தை செலுத்த இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுமாறுஎஸ்.எம்.எஸ்., மூலமாக அனுப்புவதுடன், மின்சாரம் துண்டிக்கப்படும் என்று குறுஞ்செய்திஅனுப்பி பணம் பறிப்பதற்கான மோசடி தற்போது அதிகளவில் நடந்துவருகின்றது.

    இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதோடுபொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பொது மக்கள்எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் விரைவாக தீர்வுகாணவேண்டும்.

    தற்போது இணையத்தில், செல்போன் வாயிலாக உலா வரும்போலி குறுந்தகவலை மக்கள் நம்பி தொடர்ந்து ஏமாந்து வருகின்றனர். எனவே பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    • அன்பளிப்பு கூப்பன்கள் வாங்கி அனுப்பும்படி குறுஞ்செய்தி அனுப்புவதாக தெரிய வருகிறது.
    • போலியான குறுஞ்செய்தியை யாரும் பொருட்படுத்த வேண்டாம்.

    திருப்பூர்

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் கூறியிருப்பதாவது:- போலீஸ் டி.ஜி.பி. என்று தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு, போலி நபர்கள் அமேசான் அன்பளிப்பு கூப்பன்கள் வாங்கி அனுப்பும்படி வாட்ஸ்-அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமாக குறுஞ்செய்தி அனுப்புவதாக தெரிய வருகிறது.இந்த போலியான குறுஞ்செய்தியை யாரும் பொருட்படுத்த வேண்டாம். அந்த நபரை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு போலீசார் மற்றும் பொதுமக்கள் கவனத்திற்காக மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

    ×