search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commissioner Alert"

    • வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என கீழக்கரை நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • பொதுமக்கள் நலன் கருதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி கமிஷ னர் செல்வராஜ் கூறியதா வது:-

    கீழக்கரை நகராட்சியில் பொது மக்களுக்கு தேவை யான பல்வேறு அடிப்படை வசதிகளை நகராட்சி நிதியில் இருந்து செய்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து வரி செலுத்த அறிவிப்பு கொடுத்தும், பணியா ளர்களும் நேரடியாக சென்று வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் பலரும் அதிக பாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட குடி யிருப்பு கட்டிடங்கள், வணிக கட்டிடங்களின் உரிமையாளர்கள் சிலர் செலுத்த வேண்டிய வரி இனங்களை முறையாக செலுத்தப்படாத காரணத்தி னால், பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சேவைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

    நகராட்சி சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் முதல் அரை யாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் மாதம் 31-ந் தேதிக்குள்ளும், 2-வது அரையாண்டு வரியை அக்டோபர் மாதம் 30-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். தொடர்ந்து வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் பகிரங்கமாக பொது வெளியில் மக்களின் பார்வைக்கும் வைக்கப்படும். மேலும் வரி வசூல் 100 சதவீதம் இருந்தால் மட்டுமே திட்ட பணிகள் மேற்கொள்ள முடியும்.

    எனவே வரி பாக்கி வைத்துள்ளவர்கள் நகராட்சி யில் செலுத்த முன்வர வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி வசூல் மையங்கள் செயல்படும். கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் அல்லது tnurbanepay.tn.gov.in என்ற இணையதள வாயிலாகவோ செலுத்த லாம்.தங்களது வரிகளை செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி, ஜப்தி நடவடிக்கையினை தவிர்த்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • அன்பளிப்பு கூப்பன்கள் வாங்கி அனுப்பும்படி குறுஞ்செய்தி அனுப்புவதாக தெரிய வருகிறது.
    • போலியான குறுஞ்செய்தியை யாரும் பொருட்படுத்த வேண்டாம்.

    திருப்பூர்

    திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் கூறியிருப்பதாவது:- போலீஸ் டி.ஜி.பி. என்று தங்களை அறிமுகப்படுத்தி கொண்டு, போலி நபர்கள் அமேசான் அன்பளிப்பு கூப்பன்கள் வாங்கி அனுப்பும்படி வாட்ஸ்-அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலமாக குறுஞ்செய்தி அனுப்புவதாக தெரிய வருகிறது.இந்த போலியான குறுஞ்செய்தியை யாரும் பொருட்படுத்த வேண்டாம். அந்த நபரை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு போலீசார் மற்றும் பொதுமக்கள் கவனத்திற்காக மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

    ×