search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.எம்.எஸ்."

    • பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • எஸ்.எம்.எஸ்., மூலமாக மின்சாரம் துண்டிக்கப்படும் என்று குறுஞ்செய்திஅனுப்பி பணம் பறிப்பதற்கான மோசடி நடந்துவருகின்றது.

    திருப்பூர் : 

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுச் செயலாளர் ஈ.பி. சரவணன், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், கயல்விழி செல்வராஜ், மற்றும் கலெக்டர் வினீத் ஆகியோரிடம் ஒரு கோரிக்கையை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கு மின்வாரியம்பெயரில் செலுத்தப்படாத மின்கட்டணத்தை செலுத்த இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுமாறுஎஸ்.எம்.எஸ்., மூலமாக அனுப்புவதுடன், மின்சாரம் துண்டிக்கப்படும் என்று குறுஞ்செய்திஅனுப்பி பணம் பறிப்பதற்கான மோசடி தற்போது அதிகளவில் நடந்துவருகின்றது.

    இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதோடுபொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பொது மக்கள்எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் விரைவாக தீர்வுகாணவேண்டும்.

    தற்போது இணையத்தில், செல்போன் வாயிலாக உலா வரும்போலி குறுந்தகவலை மக்கள் நம்பி தொடர்ந்து ஏமாந்து வருகின்றனர். எனவே பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியதாக எஸ்.எம்.எஸ். வந்துள்ளது.
    • விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 32-வது சுற்று கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் 2,448 மையங்களில் நடைபெற்றது.

    இதில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பொதுமக்கள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து க்கொள்ள முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும், இரண்டு தவணை செலுத்தி யவர்கள் மூன்றாவதாக முன்னெ ச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி க்கொண்டு பய ன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் 416 தடுப்பூசி குழுக்கள் நியமிக்கப்பட்டு குழுவினர் மூலம் மாவட்ட முழுவதும் முதல் தவணை தடுப்பூசி 270 பேருக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 5,870 பேருக்கும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 25 ஆயிரத்து 95 பேருக்கும், ஆக மொத்தம் 31, 235 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத பலருக்கும் தங்களுடைய செல்போனில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக எஸ்.எம்.எஸ். மூலம் குறுஞ்செய்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விசாரணை செய்து தடுப்பூசி செலுத்தாத பலருக்கும் எவ்வாறு எஸ்.எம்.எஸ்.வந்தது. சுகாதாரத்துறை பணி யாளர்கள் அலட்சி யமாக செயல்படுகிறார்களா? அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்துவ தற்கான இலக்கு நிர்ணயிக்கப்படுவதால் சுகாதாரப் பணியாளர்கள் முறை கேட்டில் ஈடுபடுகிறார்களா? என்பது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    ×