search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant gate"

    • மேம்பாலத்தின் மற்றொரு பகுதியில் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தன.
    • சவுகார்பேட்டை மற்றும் ஜார்ஜ் டவுனில் இருந்து பாரிமுனை பகுதிக்கு செல்லும் வாகன நெரிசல் குறையும்.

    ராயபுரம்:

    சென்னை யானைக் கவுனி மேம்பாலம் 1935-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய மேம்பாலம் ஆகும். பாலம் பழுதடைந்ததால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து கடந்த 2016-ம் ஆண்டு யானைகவுனி மேம்பாலம் மூடப்பட்டது.

    ரெயில்வே பாதை வழியாக பாலம் அமைவதால் ரெயில்வே துறையுடன் மாநகராட்சி இணைந்து மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி யானைகவுனி ரெயில்வே மேம்பாலம் கட்ட ரெயில்வே துறை ரூ. 49 கோடி மற்றும் மாநகராட்சி ரூ.30.78 கோடி என மொத்தம் ரூ.79.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    கடந்த 2019-ம் ஆண்டு பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிதாக அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் இந்த பணி முடிவடைவதில் காலதாமதம் ஏற்பட்டது. தூண்கள் அமைக்கப்படாமல் ராட்சத இருப்பு கம்பிகள் மூலம் இந்த பாலம் அமைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியில் மேம்பாலப்பணிகள் முடிந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது. அதில் இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்ட்டது.

    மேம்பாலத்தின் மற்றொரு பகுதியில் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இந்த பணிகள் முழுவதும் தற்போது முடியும் நிலையில் உள்ளது. இதன் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. எனவே யானைகவுனி ரெயில்வே மேம்பாலத்தின் 2-வது பகுதி அடுத்த மாதத்தில் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த மேம்பாலம் முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. சவுகார்பேட்டை மற்றும் ஜார்ஜ் டவுனில் இருந்து பாரிமுனை பகுதிக்கு செல்லும் வாகன நெரிசல் குறையும்.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, யானைகவுனி ரெயிவே மேம்பாலத்தில் இறுதி கட்ட பணியை ரெயில்வே துறை மேற்கொண்டு வருகிறது.இந்த மாத இறுதிக்குள் பாலத்தை ஒப்படைக்க ரெயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து உள்ளோம், அடுத்த மாதத்திற்குள் (ஜூன்) பாலம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

    யானைக் கவுனி மேம்பாலம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும்போது வால்டாக்ஸ்சாலை, ஜார்ஜ் டவுன் பகுதியில் போக்கு

    வரத்து நெரிசல் மிகவும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    யானைகவுனி நகை பட்டறையில் வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்தில் 6 கிலோ தங்கத்துடன் ஊழியர் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ராயபுரம்:

    சவுகார்பேட்டையில் வசித்து வருபவர் சுபாஷ் பட்னாதர். ராஜஸ்தானை சேர்ந்த இவர் யானை கவுனியில் நகை பட்டறை நடத்தி வருகிறார்.

    இங்கு சென்னையில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைகள் தயார் செய்து அனுப்பப்படுகிறது. இந்த நகை பட்டறையில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள்.

    கடந்த வாரம் நகை பட்டறையில் ராஜஸ்தானை சேர்ந்த ராகுல் கவுதம் என்பவர் வேலைக்கு சேர்ந்தார்.

    நேற்று மாலை நகை பட்டறை ஊழியர்கள் டீ குடிப்பதற்காக கடைக்கு சென்றனர். அப்போது ராகுல் கவுதம் 6 கிலோ தங்கக்கட்டிகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார்.

    கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய ஊழியர்கள் 6 கிலோ தங்கக்கட்டிகளும், ராகுல் கவுதமும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உரிமையாளர் சுபாஷ் பட்னாதருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் யானைகவுனி போலீசில் புகார் செய்தார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து ராகுல் கவுதமை தேடி வருகிறார். வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்தில் 6 கிலோ தங்கத்துடன் ஊழியர் மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×