என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Duleep Trophy"
- மத்திய மண்டலம் முறையே 122 மற்றும் 239 ரன்கள் சேர்த்தது
- கிழக்கு மண்டலம் முறையே 122 மற்றும் 129 ரன்களில் ஆல்அவுட் ஆனது
துலீப் கிரிக்கெட் தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் மத்திய மண்டலம்- கிழக்கு மண்டலம் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த மத்திய மண்டலம் அணி 182 ரன்னில் சுருண்டது. பின்னர் கிழக்கு மண்டலம் 122-ல் ஆல்அவுட் ஆனது. 60 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய மத்திய மண்டலம் அணி 239 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
ஒட்டுமொத்தமாக 299 ரன்கள் முன்னிலைப் பெற்றதால், கிழக்கு மண்டலம் அணிக்கு 300 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் முதல் இன்னிங்சில் 122 ரன்கள் எடுத்த கிழக்கு மண்டலம், 2-வது இன்னிங்சில் 129 ரன்னில் சுருண்டது. இதனால் மத்திய மண்டலம் 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
ஜூலை 5-ந்தேதி தொடங்கும் அரையிறுதி ஆட்டத்தில் மத்திய மண்டலம் அணி மேற்கு அல்லது தெற்கு மண்ட அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.
முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டும் வீழ்த்திய சவுரப் குமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
- துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் கோவையில் நடந்து வருகிறது.
- இதில் மேற்கு மண்டலம் அணிகளும், மத்திய மண்டல அணிகளும் மோதின.
கோவை:
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கு மண்டலம் அணிகளும், மத்திய மண்டல அணிகளும் கோவையில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மத்திய மண்டல அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்நிலையில், நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மண்டல அணி பேட்டிங்கில் தடுமாறியது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந் வெங்கடேஷ் அய்யர் 6 ரன்கள் எடுத்திருந்தபோது காஜா என்ற வீரர் பந்தை பீல்டிங் செய்யும்போது எறிந்தார். அது, வெங்கடேஷ் அய்யரின் பின் தலையில் பட்டது. இதனால் வலியால் துடித்தார்.
மைதானத்திற்குள் உடனடியாக ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டதால் அங்கிருந்த ரசிகர்கள் பதறினர். எனினும் வெங்கடேஷ் அய்யர், அவராகவே எழுந்து நடந்து மைதானத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து, உடனடியாக வெங்கடேஷ் அய்யர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்ததை அடுத்து அவர் மீண்டும் மைதானத்திற்கு வந்து பேட்டிங்கை தொடங்கினார். அவர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் தொடங்கியது. இந்தியா ப்ளூ அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் 182 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. ஸ்வாப்னில் சிங் அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 359 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா ரெட் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் இந்தயா ரெட் திணறியது. முதல் இன்னிங்சில் 182 ரன்களில் ஆட்டமிழந்த இந்தியா ரெட், 2-வது இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியா ப்ளூ இன்னிங்சில் மற்றும் 187 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹூடா, சவுரப் குமார் தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
அதன்படி இந்தியா ப்ளூ அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்தனர். தொடக்க வீரர்கள் சராசரியாக ரன்கள் அடிக்க 5-வது வீரர் புய் 60 ரன்னும், அடுத்து வந்த அன்மோல்ப்ரீத் சிங் 96 ரன்களும், என் கங்ட்டா 130 ரன்களும், ஸ்வாப்னில் சிங் 69 ரன்களும் அடிக்க இந்தியா ப்ளூ முதல் இன்னிங்சில் 167.3 ஓவரில் 541 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
இந்தியா ரெட் சார்பில் பர்வேஸ் ரசூல் 4 விக்கெட்டும், ஹிர்வானி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் இந்தியா ரெட் முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்