search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Farmers Protest"

    • பல கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கத்தின் தலைவர்களுடன் மத்திய அரசு நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறது.

    புதுடெல்லி:

    வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்துசெய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

    விவசாயிகள் போராட்டத்தைத் தடுக்க டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைய முயன்ற நிலையில் அவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கலைத்தனர்.

    ஆனாலும் டெல்லி எல்லைகளான சம்பு, திக்ரி, காசிபூர், சிங்வாலா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் சண்டிகரில் நாளை மாலை 5 மணிக்கு மத்திய மந்திரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது என பஞ்சாப் விவசாய சங்கத்தின் பொது செயலாளர் சர்வான் சிங் தெரிவித்துள்ளார்.

    ×