என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Dal lake"
- தால் ஏரி காஷ்மீர் மகுடத்தின் வைரக்கல் என போற்றப்படுகிறது.
- காஷ்மீரில் கடும் குளிர் நிலவுவதால் புகழ் பெற்ற தால் ஏரி உறைந்தது.
ஸ்ரீநகர்:
வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.
காஷ்மீரின் ஸ்ரீநகரில் தால் ஏரி அமைந்துள்ளது. உலகளவில் பிரபலமான இந்த ஏரி, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் ஆகும். அதனால்தான் இந்த ஏரி, காஷ்மீர் மகுடத்தின் வைரக்கல் என போற்றப்படுகிறது.
இந்நிலையில், இத்தகைய சிறப்பு வாய்ந்த தால் ஏரியின் சில பகுதிகள் உறைந்து காணப்படுகிறது.
குழந்தைகள், மூத்த குடிமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஷிகாரா படகுகள் ஏரியின் நடுவில் பயணத்தில் இருந்ததால் காற்று வேகம் தாளாமல் கவிழ்ந்தது.
- மோசமான காலநிலையின்போது ஏரிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பொது மக்களுக்கு போலீசார் வேண்டுகோள்.
ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பலத்த காற்று வீசியதால் தால் ஏரியில் பயணத்தில் இருந்த ஷிகாரா எனப்படும் மரக்கட்டையால் ஆன படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்தானது. இதில் பயணம் செய்த பயணிகளும் ஏரியில் கவிழ்ந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், ஏரியில் தத்தளித்த 20க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி மன்ஷா சிங் கூறுகையில், "ஷிகாரா படகுகள் ஏரியின் நடுவில் பயணத்தில் இருந்ததால் காற்று வேகம் தாளாமல் கவிழ்ந்தது. மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்றார்.
மேலும், மோசமான காலநிலையின்போது ஏரிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பொது மக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காஷ்மீரில் ஸ்ரீநகரில் தால் ஏரி அமைந்துள்ளது. உலகளவில் பிரபலமான இந்த ஏரி, சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம் ஆகும். அதனால்தான் இந்த ஏரி, காஷ்மீர் மகுடத்தில் வைரக்கல் என போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்புக்குரிய தால் ஏரியின் கரையோரப் பகுதி உறைந்து விட்டது.
அங்கு உயிரை உறைய வைக்கும் அளவுக்கு கடும் குளிர் நிலவி வருகிறது. காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் குழந்தைகளும், மூத்த குடிமக்களும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
நேற்று முன்தினம் ஸ்ரீநகரில் வெப்ப நிலை மைனஸ் 4 டிகிரியாக குறைந்து விட்டது. எனவே தால் ஏரி மட்டுமல்லாமல், பிற நீர் நிலைகளும் உறைந்து போய் உள்ளன. குழாய்த்தண்ணீரும் உறைந்து போய் உள்ளது.
தால் ஏரிக்கரையில் நின்று மக்கள், உறைந்த போன ஏரியில் கற்களையும், காகிதங்களையும் வீசி மகிழ்ச்சி அடைந்தனர்.
அதே நேரத்தில் குடிநீர்க்குழாயில் தண்ணீர் வராமல் குடி நீருக்கு மக்கள் அவதிப்படுகிற நிலையும் அங்கு நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன. #Kashmirwinter
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்