search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தால் ஏரி"

    • தால் ஏரி காஷ்மீர் மகுடத்தின் வைரக்கல் என போற்றப்படுகிறது.
    • காஷ்மீரில் கடும் குளிர் நிலவுவதால் புகழ் பெற்ற தால் ஏரி உறைந்தது.

    ஸ்ரீநகர்:

    வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.

    காஷ்மீரின் ஸ்ரீநகரில் தால் ஏரி அமைந்துள்ளது. உலகளவில் பிரபலமான இந்த ஏரி, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் ஆகும். அதனால்தான் இந்த ஏரி, காஷ்மீர் மகுடத்தின் வைரக்கல் என போற்றப்படுகிறது.

    இந்நிலையில், இத்தகைய சிறப்பு வாய்ந்த தால் ஏரியின் சில பகுதிகள் உறைந்து காணப்படுகிறது.

    குழந்தைகள், மூத்த குடிமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ஷிகாரா படகுகள் ஏரியின் நடுவில் பயணத்தில் இருந்ததால் காற்று வேகம் தாளாமல் கவிழ்ந்தது.
    • மோசமான காலநிலையின்போது ஏரிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பொது மக்களுக்கு போலீசார் வேண்டுகோள்.

    ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பலத்த காற்று வீசியதால் தால் ஏரியில் பயணத்தில் இருந்த ஷிகாரா எனப்படும் மரக்கட்டையால் ஆன படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்தானது. இதில் பயணம் செய்த பயணிகளும் ஏரியில் கவிழ்ந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், ஏரியில் தத்தளித்த 20க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி மன்ஷா சிங் கூறுகையில், "ஷிகாரா படகுகள் ஏரியின் நடுவில் பயணத்தில் இருந்ததால் காற்று வேகம் தாளாமல் கவிழ்ந்தது. மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்றார்.

    மேலும், மோசமான காலநிலையின்போது ஏரிக்கு மக்கள் செல்ல வேண்டாம் என பொது மக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×