search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chitra Ramkrishna"

    • தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணன் கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை பணியாற்றி வந்தார்.
    • முன்அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்து பிற சலுகைகளை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    புதுடெல்லி:

    தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணன் கடந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை பணியாற்றி வந்தார். அப்போது அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது. முன்அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமித்து பிற சலுகைகளை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. சி.பி.ஐ. வழக்கில் ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டிருந்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

    • தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
    • சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி ஐகோர்ட் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணன் மற்றும் முன்னாள் குழு இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு டெல்லி ஐகோர்ட்டு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதே போல ஆனந்த் சுப்பிர மணியனுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது.

    ×