search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Booze smuggling"

    நாமக்கல் அருகே கண்டெய்னர் லாரியில் ரூ.28 லட்சம் மதிப்பிலான எரிசாராயத்தையை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள புதுசத்தரம் பகுதி வழியாக மினி கண்டெய்னர் லாரியில் எரி சாராயம் கடத்தி செல்வதாக நாமக்கல் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையிலான போலீசார், புதுசத்திரம் பகுதிக்கு விரைந்து சென்று கண்காணிப்பு மற்றும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது எரிசாராயம் கடத்தி வந்த மினி கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

    கண்டெய்னருக்குள் 550 கேனில் 19 ஆயிரத்து 250 லிட்டர் எரி சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாராயம் அரியானா மாநிலத்தில் இருந்து கடத்தி எர்ணாகுளத்துக்கு கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.28 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

    இந்த கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 44) மற்றும் மாற்று டிரைவர் ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த சிவைய்யா (30) ஆகிய 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான 2 டிரைவர்களை படத்தில் காணலாம்

    பறிமுதல் செய்யப்பட்ட எரி சாராயத்தை சேலம் சரக மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஆகியோர் பார்வையிட்டு, டிரைவர்களை கைது செய்த போலீசாரை பாராட்டினர். #tamilnews
    நாகூர் அருகே சாராயம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப் பட்டன.
    நாகூர்:

    நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று நாகூர் அருகே மேலவாஞ்சூர் முட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் விசாரித்தபோது, அவர் திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (வயது26) என்பதும், சாராய பாக்கெட்டுகளை சாக்கு மூட்டையில் கடத்தி செல்வதும் தெரிய வந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 120 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப் பட்டது.

    அதேபோல் பனங்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகை காமராஜ் நகரை சேர்ந்த ராஜேந்திரன் (49), காடம்பாடியை சேர்ந்த பாண்டியன் (32) ஆகியோர் என்பதும், 120 லிட்டர் சாராயத்தை கடத்தி செல்வதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், பாண்டியன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    ×