என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bodi farmers"
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தென்னை, மா உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. இது அல்லாமல் வானம் பார்த்த பூமியாக மொச்சை, அவரை, நிலக்கடலை, எள்ளு உள்ளிட்ட மானாவாரி பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக போடி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் செழித்து காணப்படுகிறது. தற்போது நிலங்கள் தேவையான அளவு ஈரப்பதத்துடன் காணப்படுவதால் அவற்றை உழுது பன்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக போடி - சிலமலை ராணிமங்கம்மாள் சாலை பகுதியில் விவசாயிகள் உழவு பணியை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழை கைகொடுத்தால் விரைவில் பயிர்கள் நடத் தொடங்கி விடுவார்கள்.
மேலும் தென்னை மரங்கள் தற்போது செழித்து தேங்காய்கள் தடிமனாக காணப்படுகிறது. இதனால் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்