search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "beer bottle Punch"

    • நடனம் ஆடும்போது ஒருவரை ஒருவர் முட்டியதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் அருகே உள்ள சின்ன தெள்ளூர் கிராமத்தில் நேற்று கெங்கை அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. நேற்று இரவு சாமி ஊர்வலம் சென்றது.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 35) ஊர்வலத்தில் நடனம் ஆடினார்.

    அப்போது 5 பேர் கொண்ட கும்பல் நடனம் ஆடினர். இதல் நடனம் ஆடும்போது ஒருவரை ஒருவர் முட்டி உள்ளனர். இதனால் அருண்குமாருக்கும் கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரமடைந்த 5 பேர் கொண்ட கும்பல் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து அருண்குமாரின் கழுத்தில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அருண்குமாரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை பீர் பாட்டிலால் குத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேல் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • வெள்ளகோவில் போலீசார் 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் கரூர் ரோட்டில் தனியார் மது பார் உள்ளது. இந்த பாரில் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் பாலமுருகன் (வயது 25) சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகின்றார். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு அடிக்கடி பாருக்கு வரும் 3 நபர்கள் வந்து பாலமுருகனை பார்த்து தகாத வார்த்தைகளால் கூப்பிட்டு மது கொண்டுவர கூறியுள்ளனர். ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று பாலமுருகன் கேட்டுள்ளார். அதற்கு அந்த 3 நபர்களும் எங்களையே எதிர்த்து பேசுகின்றாயா? என்று கூறி கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து பாலமுருகனை குத்தி உள்ளனர். உடனே பாலமுருகன் சத்தம் போட்டதால் பாரில் பணியாற்றும் பணியாளர்கள் வரவும் 3 நபர்களும் பாட்டிலை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். உடனே பாலமுருகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இச்சம்பவம் குறித்து பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருமாம்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியரை பீர் பாட்டிலால் குத்திய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் புது தெருவை சேர்ந்தவர் நேவிராஜ்(வயது26). இவர் தவளக்குப்பத்தில் உள்ள தனியார் இரு சக்கர வாகன ஷோரூமில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். 

    கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது நேவிராஜியிடம் அவரது ஊரை சேர்ந்த புகழ் என்ற புகழேந்தி என்பவர் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டார்.

    அதன்படி நேவிராஜ் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தவணை முறையில் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார். 2 மாதம் மட்டுமே தவணை தொகை கட்டிய புகழ் அதன் பிறகு தவணை தொகை கட்டவில்லை.

    அடுத்த சில நாட்களில் ஒரு வழக்கில் புகழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் புகழ் வாங்கிய மோட்டார் சைக்கிளை  அவரது நண்பர்களான திருக்குமரன் மற்றும் வசந்த் ஆகியோர் பயன்படுத்தி வந்தனர்.

    இதையடுத்து தவணை தொகை கட்டாததால் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய நேவிராஜ் வேலை பார்க்கும் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. 

    சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய அந்த நிறுவனத்தை சேர்ந்த அகஸ்டின் என்பவர் கிருமாம்பாக்கத்துக்கு வந்தார். அவருடன் நேவிராஜியும் உடன் வந்தார்.

    இதன் காரணமாக நேவிராஜ் மீது திருக்குமரனும்,  வசந்தும் ஆத்திரத்தில் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேவிராஜ் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். 

    பின்னர் நேவிராஜ் அகஸ்டினுடன் அங்குள்ள சுடுகாட்டு பகுதிக்கு சென்றார். அப்போது சிலர் சண்டை போட்டுக்கொண்டிருந்தை கண்ட நேவிராஜ் அங்கு சென்று பார்த்தார்.

    அந்த நேரத்தில் அங்கிருந்த திருக்குமரனும், வசந்தும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி காட்டிக்கொடுத்த துரோகியே என்று பேசி அங்கு கிடந்த பீர் பாட்டிலை எடுத்து நேவிராஜியின் முகத்தில் குத்தினர். மேலும் இனிமேல்  எங்களிடம் வைத்துக்கொண்டால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

    பீர் பாட்டிலால் குத்தியதில் முகத்தில் காயமடைந்த நேவிராஜ் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருக்குமரன் மற்றும் வசந்தை தேடி வருகிறார்கள்.
    ×