என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 3 merchants killed
நீங்கள் தேடியது "3 merchants killed"
பழனி அருகே வேன் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வியாபாரிகள் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
பழனி:
ஒட்டன்சத்திரம் விஸ்வநாத நகரை சேர்ந்த சின்னதம்பி மகன் ராஜா (வயது28). இவர் மினி டோர் வேன் டிரைவர். தினசரி ஒட்டன்சத்திரத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு காய்கறிகள் ஏற்றி செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று இரவு காய்கறிகளை ஏற்றிக் கொண்டு பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். வேனில் அதே பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மூர்த்தி (45), சின்ராஜ் மகன் அரசன் (18) ஆகியோரும் சென்றனர்.
அதிகாலை 1½ மணி அளவில் நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அய்யம் பாளையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு தென்னை நார் ஏற்றி சென்ற டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேனை ஓட்டி வந்த ராஜா உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.மூர்த்தி, அரசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் டிராக்டரில் வந்த டிரைவர் கிருஷ்ணமூர்த்தி, தர்மன் ஆகியோரும், வேனை ஓட்டி வந்த ராஜாவும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாமிநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்த 3 பேரையும் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். அதிகாலையில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
ஒட்டன்சத்திரம் விஸ்வநாத நகரை சேர்ந்த சின்னதம்பி மகன் ராஜா (வயது28). இவர் மினி டோர் வேன் டிரைவர். தினசரி ஒட்டன்சத்திரத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு காய்கறிகள் ஏற்றி செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று இரவு காய்கறிகளை ஏற்றிக் கொண்டு பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். வேனில் அதே பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மூர்த்தி (45), சின்ராஜ் மகன் அரசன் (18) ஆகியோரும் சென்றனர்.
அதிகாலை 1½ மணி அளவில் நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அய்யம் பாளையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு தென்னை நார் ஏற்றி சென்ற டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் வேனை ஓட்டி வந்த ராஜா உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.மூர்த்தி, அரசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் டிராக்டரில் வந்த டிரைவர் கிருஷ்ணமூர்த்தி, தர்மன் ஆகியோரும், வேனை ஓட்டி வந்த ராஜாவும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாமிநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்த 3 பேரையும் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். அதிகாலையில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X