search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people missing"

    • உத்தமபாளையம் அருகே முதியவர் உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டி மேற்குதெருவை சேர்ந்தவர் மகாலிங்கம்(67). இவர் கருத்துவேறுபாடு காரணமாக மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.

    தற்போது அவர்கள் சேர்ந்து வசித்து வந்த நிலையில் கடைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் உத்தமபாளையம் போலீசில் அவரது மனைவி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மகாலிங்கத்தை தேடி வருகின்றனர்.

    உத்தமபாளையம் அருகே ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் துரைமகன் ஜெகதீஸ்வரன்(29). இவர் சின்னமனூரில் உள்ள இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரது தந்தை கடை உரிமையாளரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது ஜெகதீஸ்வரன் வேலைக்கு வரவில்லை என கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த துரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை தேடி வருகின்றனர்.

    • தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பேர் மாயமாகினர்.
    • புகாரின்பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் மேல்ம ங்கலம் அருகில் உள்ள அம்மாபட்டி தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகள் ேராசிணி(15). இவர் 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி மாயமானார்.

    பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் சாந்தி ஜெயமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    கொடைக்கானல் பிரகாசபுரத்தை சேர்ந்த தேவதாஸ் மகன் லோக நாதன்(29). இவர் பெரிய குளம் வடகரை புதிய பஸ்நிலையம் பகுதியில் தனது தந்தையுடன் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக வந்தார்.

    அதன்பிறகு மாயமானார். இதுகுறித்து தேவதாஸ் பெரியகுளம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவரை ேதடி வருகின்றனர்.

    • போடி அருகே முதியவர் உள்பட வியாபாரி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் ஒண்டிவீரப்பன் (வயது80). சம்பவத்தன்று இவர் சுருளிபட்டிக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி தாலுகா போலீசில் அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை தேடி வருகின்றனர்.

    கம்பம் கோம்பை ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (26). பால் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று திடீரென வீட்டில் இருந்த அவர் மாயமானார். அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    பல்ேவறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் கம்பம் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை தேடி வருகின்றனர்.

    • போடி அருகே கல்லூரி மாணவி மற்றும் மூதாட்டி ஒருவரும் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மாயமானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி தென்றல் நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ் மகள் ரமோஷ்பிரியா(22). இவர் வீரபாண்டியில் உள்ள கல்லூரியில் எம்.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற ரமோஷ்பிரியா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை கல்லூரிக்கு சென்று விசாரித்தபோது அன்று விடுமுறை என்பது தெரியவந்தது.

    நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    குள்ளப்பகவுண்டன்பட்டிைய சேர்ந்த காமையன் மனைவி வெள்ளைத்தாய்(60). இவர் சம்பவத்தன்று வெளியில் சென்றார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் கூடலூர் தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மூதாட்டியை ேதடி வருகின்றனர்.
    ×