என் மலர்
நீங்கள் தேடியது "போலீசார் விசாரணை"
- மது பிரசாத் நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மது பிரசாத்தை தாயார் டியூசனுக்கு செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது.
- ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து டியூசனுக்கு செல்லாததால் தாயார் அவரை கண்டித்துள்ளார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் டிவிடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவரது மனைவி பானு. இவர்களுக்கு மது பிரசாத் வயது 15 என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
பத்மநாபன் தஞ்சாவூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார். வீட்டில் பானு அவரது மகன் மற்றும் மகளும் இருந்தனர்.
மது பிரசாத் நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். மது பிரசாத்தை தாயார் டியூசனுக்கு செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து டியூசனுக்கு செல்லாததால் தாயார் அவரை கண்டித்துள்ளார்.
தாயார் கண்டித்ததால் மது பிரசாத் மனமுடைந்து காணப்பட்டார். நேற்று இரவு வழக்கம்போல் இரவு தூங்க சென்றார். இன்று அதிகாலையில் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவரது அறை கதவை திறந்து பார்த்தபோது மது பிரசாத் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதை பார்த்து அவரது தாயார் மற்றும் சகோதரி கூச்சலிட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். பின்னர் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய மது பிரசாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பழனியம்மாளுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
- இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீவட்டிப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தும்பிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சேர்வராயன். இவரது மகன் மாது (வயது 37). கூலி தொழிலாளி.
மாதுவுக்கும், அதே ஊரை சேர்ந்த பழனியம்மாள் (வயது 52) என்ற பெண்ணுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மாது குடிபோதையில் பழனியம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதனால் பதிலுக்கு பழனியம்மாள் அவரை சத்தம் போட்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை உருவானது.
தொடர்ந்து இருவரும் ஆபாசமான வார்த்தைகளை பேசி சண்டை போட்டனர். இதை கண்டு அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு திரண்டு மாதுவிடம் சண்டை போடாமல் இருக்கும்படி கூறி விலக்கி விட்டனர். ஆனால் மாது அங்கிருந்து செல்லாமல் கோபத்தில் கல்லை எடுத்து பழனியம்மாளின் தலையில் தாக்கினார்.
இதனால் அவரது தலையில் இருந்து ரத்தம் குபு, குபுவென பீறிட்டு வெளியேறியது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பலத்த காயம் ஏற்பட்ட பழனியம்மாளை மீட்டு அக்கம், பக்கத்தினர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். பழனியம்மாளுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் பழனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீவட்டிப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளி மாது வீட்டில் இல்லை. போலீசார் கைது செய்து விடுவார்கள் என கருதி அவர் தலைமறைவாகி விட்டார்.
மாது குறித்து அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரித்தபோது பரபரப்பு தகவல் கிடைத்தது.
மாதுவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. ஏற்கனவே திருமணம் ஆனவர். குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல், வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் மது குடித்து வந்தார். இதனால் அவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாதுவிடம் இருந்து விவாகரத்து பெற்று சென்று விட்டார். தற்போது அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மாது விரக்தி அடைந்தார். இதனால் மாது அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டார். இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த பழனியம்மாள், அந்த பெண்ணையும், மாதுவையும் கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட விரோதத்தால் பழனியம்மாளை மாது கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார், மாது மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- இளம்பெண் நேர்காணலுக்கு வேலூர் செல்வது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நண்பரான சரவணன் என்பவரிடம் தெரிவித்து இருந்தார்.
- இதற்கிடையே சரவணன் தனது நண்பர்களான சாரதி, சூர்யபிரகாஷ் ஆகியோருடன் காரில் காஞ்சிபுரம் வந்து இளம்பெண்ணை சந்தித்தார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே உள்ள வடபாதி கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் நர்சிங் டிப்ளமோ முடித்து உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சு காலி பணியிடம் இருப்பதை அறிந்த இளம்பெண் அதில் சேர முடிவு செய்தார்.
இதையடுத்து நர்சு பணிக்கான நேர்காணலுக்கு வேலூர் செல்வதற்காக இளம்பெண் தனது தோழிகள் மேலும் 2 பேருடன் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் காஞ்சிபுரம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.
அப்போது இளம்பெண் நேர்காணலுக்கு வேலூர் செல்வது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த நண்பரான சரவணன் என்பவரிடம் தெரிவித்து இருந்தார்.
இதற்கிடையே சரவணன் தனது நண்பர்களான சாரதி, சூர்யபிரகாஷ் ஆகியோருடன் காரில் காஞ்சிபுரம் வந்து இளம்பெண்ணை சந்தித்தார்.
அப்போது ஓட்டலில் சாப்பிட்டு செல்லலாம் என்று இளம்பெண்ணை, சரவணன் அழைத்தார்.
இதைத்தொடர்ந்து இளம்பெண் தனது உடன் வந்த 2 தோழிகளையும் வேலூர் செல்லும்படி தெரிவித்தார்.
தான் அடுத்த பஸ்சில் வருவதாக கூறி இளம்பெண், நண்பரான சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் வந்த காரில் சென்றார்.
ஆனால் மதுபோதையில் இருந்த சரவணன் உள்பட 3 பேரும், இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் காரிலேயே இளம்பெண்ணை செங்கல்பட்டுக்கு கடத்தி வந்தனர்.
செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரத்தில் சாலையோரம் உள்ள முட்புர் அருகே காரை நிறுத்தி இளம்பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மதுபானம் ஊற்றினர்.
அவர்களிடம் இருந்து இளம்பெண் தப்பிக்க முயன்றும் முடியவில்லை.
இதையடுத்து போதை மயக்கத்தில் இருந்த இளம்பெண்ணை சரவணன், அவரது கூட்டாளிகள் சாரதி, சூர்ய பிரகாஷ் ஆகிய 3 பேரும் கற்பழித்தனர்.
பின்னர் இளம்பெண்ணை சாலையோர முட்புதரில் வீசிவிட்டு அங்கிருந்து 3 பேரும் காரில் தப்பி சென்று விட்டனர்.
மறுநாள் காலை எழுந்த இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து அலறி துடித்தார். அங்கிருந்து வீட்டுக்கு வந்த அவர் தனக்கு நேர்ந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார்.
இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான சரவணனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவான அவரது கூட்டாளிகள் சாரதி, சூர்ய பிரகாஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
இவர்களில் சரவணனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அவர் ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
தலைமறைவாக உள்ள சாரதி கல்லூரி மாணவர் ஆவார். அவர் தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சூர்யபிரகாஷ் வக்கீல் ஆவார்.
அவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு, காயப்படுத்துதல், மிரட்டல், பெண் வன்கொடுமை ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையே தனக்கு நேர்ந்த கொடுமையால் இளம்பெண் மிகவும் மனமுடைந்து இருந்தார். நேற்று காலை அவர் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலைக்காக சென்றபோது நர்சை நண்பரே கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி கற்பழித்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொலை செய்யப்பட்ட பெண் நீலநிற சுடிதார் மற்றும் கொலுசு அணிந்திருந்தார்.
- பெண் தென்னந்தோப்பில் பிணமாக கிடந்ததால், அவரை எங்கிருந்தாவது அழைத்து வந்து பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பள்ளப்பட்டியில் கொட்டப்பட்டி செல்லும் சாலையில் இருக்கும் தென்னந்தோப்பில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் இன்று பிணமாக கிடந்தார். அந்த பெண்ணின் முகம் உள்ளிட்ட பகுதிகள் எரிந்த நிலையில் இருந்தது.
இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. நீலநிற சுடிதார் மற்றும் கொலுசு அணிந்திருந்தார். மேலும் அவரது கழுத்தில் காயம் இருந்தது. அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, உடலை தீ வைத்து எரித்துள்ளனர்.
ஆனால் அவரை கொன்ற கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. அந்த பெண் தென்னந்தோப்பில் பிணமாக கிடந்ததால், அவரை எங்கிருந்தாவது அழைத்து வந்து பலாத்காரம் செய்து கொன்றிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கும் தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த படுகொலை குறித்து தகவல் அறிந்ததும் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் அவரை கொன்ற கொலையாளிகளை கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். மேலும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் அங்கு எரிந்த நிலையில் கிடந்த செல்போன் ஒன்றை மீட்டனர். அது கொல்லப்பட்ட பெண்ணின் செல்போனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காணாமல் இருப்பதற்காக அவரது முகம் மற்றும் செல்போனை கொலையாளிகள் தீ வைத்து எரித்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
செல்போன் முற்றிலும் எரிந்து விட்டதால் அதிலிருந்து எந்த தகவலையும் போலீசாரால் சேகரிக்க முடியவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது தென்னந்தோப்பில் இருந்து சிறிது சென்றதும் நின்று விட்டது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை போலீசார் பிரேத பரிசோதனை செய்ய அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பதை கண்டறிந்தால் கொலையாளிகள் பற்றிய விபரம் தெரிந்து விடும். இதனால் அந்த பெண் யார்? என்பதை கண்டறியும் நிகழ்ச்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தென்னந்தோப்பில் இளம்பெண் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் மேலூர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 2 வாலிபர்கள் தனுசை வழிமறித்து கத்தியால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர்.
- தலையில் வெட்டுபட்டு படுகாயமடைந்த தனுஷ் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போரூர்:
நெற்குன்றம் முனியப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் தனுஷ் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் இரவு கோயம்பேடு மார்க்கெட் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் தனுசை வழிமறித்து கத்தியால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டதால் கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தலையில் வெட்டுபட்டு படுகாயமடைந்த தனுஷ் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரஜிஸ்பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து அதே பகுதியை சேர்ந்த துரைமுருகன் (25) என்பவரை கைது செய்தனர். அவனிடம் இருந்து பட்டா கத்தி பறிமுதல் செய்யப்பட்டது தப்பி ஓடிய அவனது கூட்டாளியை தேடி வருகின்றனர்.
+2
- கடையில் இருந்து புகை மூட்டம் வருவதை கண்ட பொதுமக்கள் ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
- கட்டிடம் உயரமாக இருந்ததால் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றது.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள சின்னசுரைக்காய்பட்டி தெருவை சேர்ந்தவர் பசும்பொன். இவர் அதே பகுதியில் பெரிய அளவில் எலெக்ட்ரிக் ஸ்பேர்பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு கடை ஊழியர்கள் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென எலெக்ட்ரிக் கடையில் திடீரென தீப்பிடித்தது. இதில் தீ மளமளவென்று பரவி அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதமாகின.
கடையில் இருந்து புகை மூட்டம் வருவதை கண்ட பொதுமக்கள் ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் ஜெயராமன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கட்டிடம் உயரமாக இருந்ததால் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றது. இருந்தபோதிலும் இந்த தீ விபத்தில் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டதாக கூறப்படுகிறது.
தீப்பிடித்து எரிந்த கடைக்குள் கியாஸ் சிலிண்டர்கள் இருந்ததால் அவைகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி விட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். பலமணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.
- நகை திருட்டு தொடர்பாக வீட்டில் வேலை பார்த்தவர்களிடமும், வீட்டுக்கு வந்து சென்ற உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
- நாகமலை புதுக்கோட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் 9-ம் வகுப்பு மாணவனை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
மதுரை:
மதுரை நாகமலை புதுக்கோட்டை பல்கலை நகரை சேர்ந்த ஒருவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் உள்ள தங்க நகைகளின் இருப்பை சோதித்துப் பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 52 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது வீட்டில் வேலை பார்த்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அடுத்தபடியாக வீட்டுக்கு வந்து சென்ற உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனாலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அவரது வீட்டில் 52 பவுன் தங்க நகைகளை குடும்பத்தினர் யாராவது திருடி இருக்கலாம்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் ஓட்டல் அதிபரின் 13 வயது மகன் நகைகளை திருடியிருப்பது தெரியவந்தது. அவர் அங்குள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு ஆன்லைன் விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் இருந்து வந்து உள்ளது.
கடந்த சில வாரங்களாக நண்பர்களுடன் சேர்ந்து ஆடம்பரமாக செலவு செய்து ஊர் சுற்றி வந்து உள்ளார். அதற்கான பணம் சிறுவனுக்கு எப்படி வந்தது? என்று தெரியவில்லை.
இதுபற்றி விசாரித்தபோது, ஓட்டல் அதிபர் தனது மகனுக்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். ஆனால் சிறுவனிடம் கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கில் பணம் புழங்கி உள்ளது. அவர் நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றி செலவு செய்துள்ளார்.
எனவே நாகமலை புதுக்கோட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் 9-ம் வகுப்பு மாணவனை தனியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதில் சிறுவன் கூறும்போது, எனக்கு ஆன்லைனில் விளையாட அதிக பணம் தேவைப்பட்டது. எனவே உடன் படிக்கும் நண்பனிடம் கடன் கேட்டேன். அப்போது அவன் எனக்கு கோச்சடையில் அண்ணன் ஒருவரை தெரியும். அவரிடம் நகை கொடுத்தால் பணம் கொடுப்பார் என்று தெரிவித்தான்.
இதைத்தொடர்ந்து எங்கள் வீட்டில் பீரோவில் இருந்த 52 பவுன் தங்க நகைகளை படிப்படியாக எடுத்து சென்று நண்பனிடம் கொடுத்து, கோச்சடையில் உள்ள ஒருவரிடம் பணம் பெற்று செலவு செய்து வந்தேன் என்று தெரிவித்து உள்ளார்.
இதன் அடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் ஓட்டல் அதிபர் செல்லப்பாண்டி மகன் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் ஓட்டல் அதிபர் வீட்டில் மகனே 52 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவ-மாணவிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விடைத்தாள்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மதிப்பீட்டு மையத்தில் வைக்கப்பட்டு இருந்தன.
- விரைந்து வந்த பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்தபோது 15 விடைத்தாள் கட்டுகள் மாயமாகி இருப்பதை கண்டுபிடித்தனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக்கல்வி இயக்ககம் மூலம் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பட்டயம், முதுநிலை பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய தேர்வு, கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டு கடந்த மாதம் ஆன்லைன் மூலம் நடந்தது.
மாணவ-மாணவிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விடைத்தாள்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மதிப்பீட்டு மையத்தில் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில், தொலைநிலைக் கல்வியின் கூடுதல் தேர்வாணையரின் அலுவலக கண்காணிப்பாளர் விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு ஆய்வு செய்ய சென்றபோது, விடைத்தாள் கட்டுகள் சிதறிக்கிடந்தன. உடனடியாக துணைவேந்தர், தேர்வாணையர், கூடுதல் தேர்வாணையர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்தபோது 15 விடைத்தாள் கட்டுகள் மாயமாகி இருப்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரணை நடத்தியபோது பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆடு மேய்ப்பவர்கள் விடைத்தாள் கட்டுகளை திருடிச் சென்று இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகம் சார்பில் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இதில் ராஜம்பாடியில் உள்ள ஒரு பழைய பேப்பர் கடையில் விடைத்தாள்களை சிலர் எடைக்கு போட்டு சென்றது தெரியவந்தது.
அந்த விடைத்தாள் கட்டுகள் ஆலம்பட்டியில் செயல்படும் ஒரு பழைய பேப்பர் கடைக்கு அனுப்பட்டு, அதன் பின்னர் மதுரை வீரகனூரில் உள்ள மொத்த பேப்பர் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டபோது விடைத்தாள் கட்டுகளை ரோட்டோரம் கண்டெடுத்து அதனை கடையில் போட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட 3 பேர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
மேலும் விடைத்தாள்கள் மாயமான சம்பவத்தில் அதிகாரிகள் தூண்டுதல் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவில்தான் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் யார்? யார்? என்பது தெரியவரும் என்று கூறப்படுகிறது.
- வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்ட கணவன்-மனைவி அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் பொன்ராஜ் வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
திருப்பரங்குன்றம்:
மதுரை திருநகர் லைன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 55). இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் அமெரிக்காவிலும், மற்றொரு மகன் பெங்களூருவிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
பொன்ராஜ் திருநகர் 3-வது பஸ் நிறுத்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவருடன் மனைவி ராமலட்சுமியும் கடையை கவனித்து வந்தார். தினமும் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு காலையில் கடைக்கு சென்று விட்டு இரவில் தான் வீட்டிற்கு திரும்பி வருவார்கள்.
அதேபோல் நேற்று காலை கடைக்கு சென்ற அவர்கள், இரவு 11 மணிக்கு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன்-மனைவி இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த அனைத்து பொருட்களும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. யாரோ மர்ம நபர்கள் பொன்ராஜ் வீடு புகுந்து நகைகளை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து திருநகர் போலீஸ் நிலையத்தில் பொன்ராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் பொன்ராஜ் வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி சம்பவ இடத்திற்கு மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்து அருகில் உள்ள கண்மாய் வரை ஓடிசென்று நின்றுவிட்டது. இதனால் பொன்ராஜ் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் அந்த வழியாகத்தான் தப்பி சென்று இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.
பொன்ராஜ் தினமும் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியை அழைத்து கொண்டு கடைக்கு செல்வதை அவரது வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் முன்னதாகவே நோட்டமிட்டு வந்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
இதனால் அவரது வீட்டின் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். பூட்டி இருந்த வீட்டில் மர்ம நபர்கள் பட்டப்பகலில் புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பேக்கரியில் பூட்டை உடைத்து கடையில் உள்ள டி.வி. மற்றும் லேப்டாப் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
- கடையை திறக்க வந்த உரிமையாளர், திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகராட்சி பெரியகுப்பம் ரெயில்வே குடியிருப்பில் வசிப்பவர் நாகம்மாள் (70). வீட்டின் பின்புறமாக உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.
மற்றொரு சம்பவம்...
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம் ஆயில் மில் அருகில் தனியார் திருமண மண்டபம் அருகில் உள்ள பேக்கரியில் இரவு பூட்டை உடைத்து கடையில் உள்ள டி.வி. மற்றும் லேப்டாப் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் காலையில் கடையை திறக்க வந்த உரிமையாளர், திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜதுரைக்கும் ஆலங்குளத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
- இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராஜதுரை தனது வீட்டு அருகே நின்றிருந்த போது அங்கு வந்த சுரேசுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆலங்குளம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 60). இவர் ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலராக 2 முறை பதவி வகித்தவர்.
தற்போது வார்டு வரையறையின் படி இந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து தனது மனைவி அன்னக்கிளியை இத்தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்தார்.
ராஜதுரைக்கும் ஆலங்குளத்தை சேர்ந்த சுரேஷ் (40)என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ராஜதுரை தனது வீட்டு அருகே நின்றிருந்த போது அங்கு வந்த சுரேசுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜதுரையை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேசை தேடி வருகின்றனர்.