என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் விசாரணை"

    • உம்மர் பாருக்கிற்கும், அவரது மனைவியின் தங்கை குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.
    • இருவரும் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வரம் அருகே உள்ள குஞ்சத்தூர் பகுதியை சேர்ந்தவர் உம்மர் பாரூக். வளைகுடா நாட்டில் பணியாற்றிய இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டார்.

    உம்மர் பாருக்கிற்கும், அவரது மனைவியின் தங்கை குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் உம்மர்பாரூக், தனது குடும்பத்துடன் மனைவியின் தங்கை வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அவர்கள், தங்களுக்குள் பிரச்சனை இருக்கும் 10 சென்ட் நிலம் தொடர்பாக பேசியிருக்கின்றனர்.

    இதனால் உம்மர் பாரூக் மற்றும் அவரது தங்கை கணவர் ஷேகுஞ்சி(வயது53) ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தங்களின் மகள் படிப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு பணம் தேவை என்பதால் நிலத்தை எழுதித் தர முடியாது என்று உம்மர் பாரூக் மனைவியின் தங்கை மற்றும் ஷேகுஞ்சி ஆகியோர் மறுத்துவிட்டனர்.

    அதில் ஆத்திரமடைந்த உம்மர் பாரூக், தன்னிடம் இருந்த கத்தியால் ஷே குஞ்சியை குத்தினார். அந்தநேரத்தில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த உம்மர்பாரூக்கின் மகள் ஜூமைலா, தனது தந்தையை தடுத்தார். அப்போது மாணவி ஜூமைலாவின் கழுத்து மற்றும் வயிற்றில் கத்திக்குத்து விழுந்தது.

    உம்மர் பாரூக்கின் தாக்குதலில் சிக்கி கத்திக்குத்து காயமடைந்த அவரது மகள் ஜூமைலா மற்றும் மனைவியின் தங்கை கணவர் ஷேகுஞ்சி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மாணவி ஜூமைலா பரிதாபமாக இறந்துவிட்டார். ஷேகுஞ்சிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு மாணவி கொலை தொடர்பாக வழக்குப்பதிந்து உம்மர் பாரூக்கை கைது செய்தனர். உம்மர் பாரூக் மோதலில் ஈடுபட்டபோது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தாக்குதலின் போது மகளை கவனிக்காமல் கத்தியால் குத்திவிட்டதாக தெரிகிறது.

    குடும்பத்தினர் மோதலில் விலக்கிய மாணவி, பரிதாபமாக பலியாகி விட்டார். இந்த சம்பவம் காசர்கோட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமி கர்ப்பமாகி 10 வாரங்கள் ஆகி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • வீட்டில் வைத்தே சிறுமியின் கருவை கலைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு தாலுகா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். 11-ம் வகுப்பு படித்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சிறுவயதிலேயே நெருங்கி பழகியுள்ளார். அந்த வாலிபர் சிறுமியை தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து வந்துள்ளார்.

    யாருக்கும் தெரியாமல் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதுபோன்ற நேரங்களில் வாலிபர் 15 வயது சிறுமியிடம் காதல் வசனங்களை பேசி அவரது மனதை மாற்றியுள்ளார்.

    நாம் இருவரும் தான் சேர்ந்து வாழ போகிறோமே? எனவே திருமணத்திற்கு முன்னரே நாம் ஒன்றாக இருப்பதில் எந்த தவறும் இல்லை எனக்கூறி அந்த வாலிபர் சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

    இதன் காரணமாக சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இது பற்றி எதுவுமே தெரியாத நிலையில் எப்போதும் போல சிறுமி பள்ளிக்கும் சென்று வந்திருக்கிறார்.

    இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென காய்ச்சல் மற்றும் உடல் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவரது பெற்றோர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். அப்போதுதான் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. சிறுமி கர்ப்பமாகி 10 வாரங்கள் ஆகி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு சிறுமியின் தாய் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி குடும்பத்தினர் சிலருக்கும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் வெளியில் தெரிந்து விட்டால் நமது குடும்பத்துக்கு அசிங்கமாகிவிடும் என்று சிறுமியின் உறவினர்கள் கருதி உள்ளனர்.

    இதனால் வீட்டில் வைத்தே சிறுமியின் கருவை கலைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதில் சிறுமிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன உறவினர்கள் சிறுமியை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    அங்கு சிறுமியை பரிசோதித்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் டாக்டர்கள் அதிக அளவில் சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதால் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் 15 வயது சிறுமியான மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சி காரணமாகவே சிறுமியின் உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறி அவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    செங்கல்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட போது தான் அவர் கர்ப்பமானது தெரிய வந்துள்ளது.

    இது பற்றி உடனடியாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். அவர்கள் எந்தவித தகவலும் தெரிவிக்காத நிலையில், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலும் மாணவி சிகிச்சை பெற்று உள்ளார். அங்கிருந்தும் முறையான தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை.

    இதன்பிறகு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்தான் சிறுமி உயிரிழந்து உள்ளார்.

    சிறுமி கர்ப்பமானது பற்றி ஆரம்பத்திலேயே போலீசுக்கு தெரிய வந்திருந்தால் அவர்கள் முறைப்படி விசாரணை நடத்தி இருப்பார்கள். சிறுமிக்கு உரிய மருத்துவ பாதுகாப்பு கிடைத்திருக்கும்.

    கடந்த 4-ந்தேதியே சிறுமி கர்ப்பமானது தெரிய வந்த நிலையில் அதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதன்பிறகு கடந்த 17-ந் தேதி ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகே ஆஸ்பத்திரி டாக்டர்கள் செங்கல்பட்டு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இதன் காரணமாக கடந்த 12 நாட்களாக உயிருக்குப் போராடிய சிறுமி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    • உனது மகன்களை கொலை செய்து விடுவேன் என்று விஜித் இளம்பெண்ணிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.
    • சிறுவனின் கண்கள் பிடுங்கப்பட்டு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வடகிழக்கு டெல்லி சாஸ்திரி பூங்கா பகுதியை சேர்ந்த கணவரை இழந்த ஒரு இளம்பெண்ணை வஜித் என்பவர் கடந்த 2020-ம் திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு முதல் கணவருடன் ஏற்கனவே 3 மகன்கள் இருந்தனர்.

    மகன்கள் உடன் இருப்பது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் விடுதியில் இருந்து வீட்டுக்கு வந்த மகன்களை மீண்டும் விடுதியில் சேர்த்து விடுமாறு மனைவியிடம் விஜித் தகராறு செய்துள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. உனது மகன்களை கொலை செய்து விடுவேன் என்று விஜித் இளம்பெண்ணிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து இளம்பெண்ணின் 7-ம் வகுப்பு படிக்கும் 2-வது மகனான அல்தமாஷ் (12) நேற்று காலையில் பள்ளிக்குச் சென்றான். ஆனால் மாலை வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவனை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் வஜித், அல்தமாசின் மூத்த சகோதரர் அமானுக்கு போன் செய்து அல்தமாசை கொலை செய்து விட்டதாகவும் அவனது உடலை காட்டுப் பகுதியில் சென்று எடுத்து கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

    உடனே குடும்பத்தினர் பதறி அடித்து அங்கு சென்று பார்த்த போது சாலையோர புதரில் சிறுவன் அல்தமாஷ் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தான். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறும்போது சிறுவனின் வளர்ப்பு தந்தை, பள்ளியில் இருந்து அவனை அழைத்துச் சென்று கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாக தாக்கி உள்ளார்.

    மேலும் சிறுவனின் கண்கள் பிடுங்கப்பட்டு, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கொலை செய்த வஜித் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.

    இது குறித்து கொலையுண்ட மகனின் தாய் கூறும்போது, தனது கணவர் மீது ஏற்கனவே குடும்ப வன்முறை புகார் அளித்ததாகவும், ஆனால் தன்னையும் தனது 3 மகன்களையும் துன்புறுத்துவதை நிறுத்துவதாக அவர் உறுதியளித்ததை அடுத்து, அந்தப் புகாரை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் 2 நாட்களுக்கு முன்பு, எங்களுக்குள் மீண்டும் சண்டை ஏற்பட்டது. அப்போது நான் அவரை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னேன். இதனால் கோபமடைந்த அவர் எனது மகனை கொடூரமாக கொலை செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வரி பரீசிலனை கட்டணம் பணம் செலுத்த வேண்டும் தெரிவித்துள்ளார்.
    • புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

    அதில் பேசியவர் தன்னை கேரளா மாநில லாட்டரி சீட்டு ஏஜெண்டு என அறிமுகம் செய்து கொண்டு பேசினார். அப்போது அவர் எங்களது லாட்டரி சீட்டில் உங்களுக்கு ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது. அதற்காக வரி பரீசிலனை கட்டணம் பணம் செலுத்த வேண்டும் தெரிவித்துள்ளார்.

    பரிசு விழுந்த ஆசையில் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு தொழிலதிபர் ரூ.21 லட்சத்து 61 ஆயிரத்து 916 அனுப்பினார். பின்னர் எந்த தகவலும் வராததால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் நூதன முறையில் பணம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார்.

    பின்னர் இதுபற்றி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சவ ஊர்வலத்தில் அப்புவுக்கும் புதுவை கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
    • பிரபல ரவுடி பல்லுவிக்கி, ஹேமநாத், சுரேந்தர் சஞ்சீவ் தலைமையில் இந்த கும்பல் அப்புவை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியையொட்டி உள்ள தமிழக பகுதியான சின்னகோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அப்பு என்ற ஜவகர் (வயது 24). இவர் மீது 2 கொலை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

    கடந்தாண்டு அக்டோபர் மாதம் புதுச்சேரி முத்தியால் பேட்டையில் உள்ள பேக்கரியை மாமூல் கேட்டு சூறையாடிய வழக்கில் புதுச்சேரி போலீசார் அவரை கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

    இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் அப்பு, கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பாலகணேஷ், சின்ன முதலியார்சாவடியை சின்னப்பிள்ளை ஆகியோருடன் சின்ன கோட்டக்குப்பம் கறிக்கடை சந்து அமைதி நகரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு 2 பைக்கில் வந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட கும்பல், அப்புவை சுற்றி வளைத்தது.

    அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற அப்புவை அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், சரமாரியாக வெட்டினர். இதில் அப்பு ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    தகவலறிந்த கோட்டக் குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கனகச்செட்டிகுளம் பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சவ ஊர்வலத்தில் அப்புவுக்கும் புதுவை கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

    அந்த சம்பவத்தில் இருந்து அந்த கும்பல், அப்பு மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாகவே அப்பு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மேலும் கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பல்லுவிக்கி, ஹேமநாத், சுரேந்தர் சஞ்சீவ் தலைமையில் இந்த கும்பல் அப்புவை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

    கொலைக்கு முன்னர் அப்புவுடன் மது அருந்தி கொண்டிருந்த பாலகணேஷ் மற்றும் சின்னப்பிள்ளை ஆகியோர் அப்புவின் எதிராளிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கலாம் என கருதி அவர்கள் 2 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் 30 கிலோ எடை கொண்ட 60 மூட்டை பீடி இலை மூட்டைகள் மொத்தம் 1800கிலோ இருந்தது தெரிய வந்தது.
    • போலீசார் வருவதை அறிந்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டவர் நபர்கள் பைபர் படகுடன் தப்பி ஓடினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட கியூபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமசந்திரன் பிரம்ம நாயகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா, கேப்ரியல் ஆகியோர் தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இரவு முழுவதும் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் திருச்செந்தூர் காயல்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் வழியில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த லோடு வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது இலங்கைக்கு படகுமூலம் கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 60 மூட்டை பீடி இலை மூட்டைகள் மொத்தம் 1800கிலோ இருந்தது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் சாத்தான்குளம் சவுந்தரபுரம் பகுதியை சேர்ந்த கற்பக ராஜேஸ்வரன் (40) என்பவரை கைது செய்தனர். போலீசார் வருவதை அறிந்து கொண்டு கடத்தலில் ஈடுபட்டவர் நபர்கள் பைபர் படகுடன் தப்பி ஓடினர்.

    கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், சரக்கு வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட டிரைவர் ஆகியோர் தூத்துக்குடி சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

    கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் ஆகும். 

    • அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை வாங்கினார்.
    • ரத்தம் அடங்கிய பாட்டிலை பிரிட்ஜில் வைத்து பராமரித்தார்.

    ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் போய வசுந்தரா (வயது 34). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு டாக்டரும் காதலித்து வந்தனர். ஆனால் இந்த காதல், திருமணம் வரை செல்லாமல், இடையிலேயே முறிந்தது.

    அந்த டாக்டர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்பெண்ணும் ஒரு டாக்டர்தான். கர்னூலில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    ஆனால், தனது முன்னாள் காதலரை வேறு ஒரு பெண் திருமணம் செய்ததை போய வசுந்தராவால் ஜீரணிக்க முடியவில்லை. பொறாமை அடைந்த அவர், முன்னாள் காதலரை பழிவாங்கவும், தம்பதிகளை பிரிக்கவும் திட்டமிட்டார்.

    அதற்காக முன்னாள் காதலரின் மனைவிக்கு எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை செலுத்த திட்டமிட்டார். அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை வாங்கினார். ஆராய்ச்சிக்கு தேவைப்படுவதாக பொய் சொல்லி, அதை பெற்றார்.

    அந்த ரத்தம் அடங்கிய பாட்டிலை பிரிட்ஜில் வைத்து பராமரித்தார்.

    சம்பவத்தன்று, போய வசுந்தராவின் முன்னாள் காதலரின் மனைவி, கல்லூரியில் பணி முடிந்து, மதிய உணவுக்காக வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, தனக்கு தெரிந்த நர்ஸ் காங்கே ஜோதி (40) என்பவரின் 2 மகன்களை மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று, பெண் டாக்டரின் ஸ்கூட்டர் மீது மோதச் செய்தார்.

    அவர் நினைத்ததுபோல், பெண் டாக்டர் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அவருக்கு உதவுவதுபோல் போய வசுந்தரா நெருங்கினார். ஒரு ஆட்டோவை வரவழைத்தார்.

    ஆட்டோவில் பெண் டாக்டரை ஏற்றியபோது அவருக்கு எச்.ஐ.வி. கலந்த ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தினார். பெண் டாக்டர் கத்தி கூச்சலிட்டார். அதற்குள் போய வசுந்தரா அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இதுபற்றி அவரின் முன்னாள் காதலரான டாக்டர், கர்னூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    போய வசுந்தரா, நர்ஸ் காங்கே ஜோதி, அவரின் 2 மகன்கள் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், இருவரது குடும்பத்தினருக்கிடையே பிரச்சனை நடந்தபடியே இருந்திருக்கிறது.
    • இறுதிச் சடங்கில் கிரேஷ்மா மற்றும் அவரது தாய் சஜிதா ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பூந்துறை ஆரியன்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ். இவரது மனைவி சஜிதா(வயது54). இவர்களது மகள் கிரேஷ்மா(30).

    கிரேஷ்மாவுக்கும், பழஞ்சிரா பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததில் இருந்தே கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டபடி இருந்துள்ளது.

    இதனால் திருமணமான 29 நாட்களிலேயே கணவன்-மனைவி இருவரும் பிரிந்து விட்டனர். கிரேஷ்மா தனது பெற்றோரின் வீட்டுக்கு வந்துவிட்டார். அவரது கணவர் உன்னி கிருஷ்ணன் வெளிநாட்டில் வேலைபார்த்ததால், அவர் அங்கு சென்றுவிட்டார்.

    கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், இருவரது குடும்பத்தினருக்கிடையே பிரச்சனை நடந்தபடியே இருந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரேஷ்மாவின் தந்தை ராஜீவ் இதயக்கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.

    அதன்பிறகு அவர் தனது தாயுடன் வசித்து வந்தார். மகளை, அவரது கணவருடன் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று சஜிதா விரும்பினார். இந்தநிலையில் உன்னி கிருஷ்ணனின் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கில் கிரேஷ்மா மற்றும் அவரது தாய் சஜிதா ஆகிய இருவரும் பங்கேற்றனர்.

    அங்கு வந்திருந்த உன்னிகிருஷ்ணனின் குடும்பத்தினரிடம் இருவரும் பேசியுள்ளனர். அப்போது கிரேஷ்மா மற்றும் அவரது தாயை, உன்னிகிருஷ்ணன் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அதனைக்கேட்டு கிரேஷ்மாவின் தாய் சஜிதா அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்.

    இதனால் துக்க வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தியதால் சிறிது நேரத்திற்கு பிறகு சஜிதா விழித்தெழுந்தார். அதன்பிறகு தாய்-மகள் இருவரும் தங்களின் வீட்டுக்கு வந்துவிட்டனர். துக்க வீட்டில் உன்னி கிருஷ்ணன் கடுமையான வார்த்தைகளால் திட்டியது கிரேஷ்மா மற்றும் அவரது தாய்க்கு மனவேதனையை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

    இதனால் அவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து கிரேஷ்மா மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தங்களின் குடும்ப வாட்ஸ்-அப் குழுவில் தகவல் பதிவிட்டனர்.

    மேலும் தங்களின் சாவுக்கு காரணம் உன்னி கிருஷ்ணன் தான் எனவும், அவர் கிரேஷ்மாவை துன்புறுத்தியதன் காரணமாகவே இந்த முடிவை எடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது குடும்பத்தினர், சஜிதாவின் வீட்டுக்கு வந்தனர்.

    அப்போது அங்கு தாய்-மகள் இருவரும் வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் பூந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருவனந்தபுரம் மருத்துக்வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கிரேஷ்மா மற்றும் அவரது தாய் சஜிதா ஆகிய இருவரும் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளனர். கிரேஷ்மாவின் கணவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே தாய்-மகள் இருவரும் தற்கொலை செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக வழக்கு பதிந்து தொடர்ந்து வசாரணை நடத்தி வருகின்றனர். தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கிரேஷ்மாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்துகின்றனர். 

    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
    • சென்னையில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்று அங்கு நகைகளை அடகு வைத்து பணமாக மாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பொன்விழா நகரை சேர்ந்தவர் சன்னியாசி, இவர் பா.ஜ.க. மாவட்ட வர்த்தக பிரிவு அணி செயலாளராக உள்ளார். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் சென்னையில் வசித்து, அங்கு பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    இதனால் சுத்தமல்லியில் உள்ள வீட்டில் அவரது மாமனார் மாரி, மாமியார் ஆண்டிச்சி (வயது 70) ஆகியோர் மட்டும் வசித்து வருகிறார்கள். கடந்த 8-ந்தேதி காலையில் வீட்டில் ஆண்டிச்சி மட்டும் தனியாக இருந்தார்.

    அப்போது வீட்டுக்குள் புகுந்த கும்பல் ஆண்டிச்சியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல் நடித்து அவரது கை, கால்களை கயிறு மூலம் கட்டி, அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மூக்குத்தி, கம்மல் என சுமார் 15 பவுன் நகைகளை பறித்தனர். தொடர்ந்து பீரோவை திறந்து அதில் இருந்த 10 சவரன் நகைகள், ரூ.6 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த பகுதியில் பொருத்தப்பட்டி ருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    மேலும் அந்த பகுதியில் சம்பவத்தன்று சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    நவீன தொழில்நுட்ப வசதியுடன் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று பேட்டை அண்ணாமலை நகரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினரான ஜீவா நகரை சேர்ந்த சுந்தர் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்த நகைகளை, புத்திசாலித்தனமாக செயல்களை செய்வது போல் சென்னையில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்று அங்கு நகைகளை அடகு வைத்து பணமாக மாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து சென்னைக்கு விரைந்துள்ள தனிப்படையினர், அந்த திருட்டு நகைகளை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு கும்பலை திறம்பட கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் பாராட்டினார்.

    • 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
    • ரெயில் நிலையம் அருகில் சிறுவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில் தங்கம் உருக்கும் தொழில் கூடம் உள்ளது. இதனை மகாராஷ்டிராவை சேர்ந்த சுஹாஷ் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவரிடம் அதே மாநிலத்தை சேர்ந்த ஓம்கார் என்ற 17 வயது சிறுவன் கடந்த வாரம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    இந்த நிலையில், சுஹாஷ் மற்றும் ஓம்கார் மட்டும் நேற்று கடையில் இருந்துள்ளனர். அப்போது சுமார் 1½ கிலோ தங்க நகைகளை உருக்கி, அதனை தங்க கட்டியாக மாற்றிய சுஹாஷ், அதனை எடை போட்டு எடுத்து வருமாறு சிறுவன் ஓம்காரிடம் கொடுத்துள்ளார். அதனை எடுத்துக்கொண்டு கடையின் முகப்பு பகுதிக்கு வந்த ஓம்கார், திடீரென மனம் மாறி தங்க கட்டியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடி தலைமறைவானார். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

    உடனடியாக இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு நேரில் விரைந்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, ரெயில் நிலையம் அருகில் சிறுவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனை லாவகமாக மடக்கி கைது செய்தனர்.

    மேலும், அவரிடம் இருந்த 1½ கிலோ தங்க கட்டியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    • தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழியை காண்பதற்காக வந்த ரவுடி ஆதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ரவுடி ஆதியை வெட்டிக்கொன்றது தோழி சுசித்ராவின் உறவினர்கள் மூன்று பேர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தலைமறைவான சுசித்ராவின் உறவினர்களாக சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • இருவரும் வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டே டி.வி. பார்த்துள்ளனர்.
    • மதுபோதையில் இருந்த சபரிராஜன் ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவனை சரமாரியாக வெட்டினார்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் லெட்சுமணன்(வயது 15). இவன் அங்குள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவனது வீட்டின் எதிர் வீட்டில் வசிப்பவர் ரத்தின வடிவேல். இவரது மகன் சபரி ராஜன்(23).

    இவர்கள் 2 பேரின் குடும்பத்தினரும் உறவினர்கள் போலவே எப்போதும் சகஜமாக பழகி வந்துள்ளனர்.

    இதனால் லெட்சுமணன் அடிக்கடி சபரிராஜன் வீட்டுக்கு சென்று விளையாடுவது உண்டு. கடந்த 5-ந்தேதி லெட்சுமணன் பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில், சபரிராஜன் அழைத்ததன் பேரில் அவரது வீட்டுக்கு லெட்சுமணன் சென்றுள்ளார்.

    இருவரும் வீட்டின் வரவேற்பு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டே டி.வி. பார்த்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், மதுபோதையில் இருந்த சபரிராஜன் திடீரென ஆத்திரமடைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாணவனை சரமாரியாக வெட்டினார்.

    இதில் படுகாயம் அடைந்த மாணவன் லெட்சுமணன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினான். உடனே சபரிராஜன் அதிர்ச்சி அடைந்து தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று பணகுடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

    அங்கு மாணவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை லெட்சுமணன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தான்.

    ஏற்கனவே அரிவாள் வெட்டு குறித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிராஜனை அதிரடியாக கைது செய்திருந்தனர.

    இந்நிலையில், மாணவன் இறந்து விட்டதால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×