search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோ சட்டம்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போலீசார் ஆனந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    • மாணவ, மாணவிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை:

    கோவை ஆலாந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 820 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் கவுண்டம்பாளையம் அடுத்த வடிவேலம்பாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது36) என்பவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இதையடுத்து, போலீசார் ஆனந்தகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஆனந்தகுமாருக்கு ஆதரவாக ஆலாந்துறை அரசு பள்ளியை சேர்ந்த 800-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பள்ளி எதிரே உள்ள சிறுவாணி சாலையில் திரண்டனர்.

    பின்னர் மாணவ, மாணவிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, ஆசிரியர் ஆனந்தகுமார் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மிகவும் நல்லவர்.

    அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பியபடியே இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆலாந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான போலீசார் மற்றும் பள்ளி தலைமை யாசிரியர்(பொறுப்பு) கார்த்திகேயன் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் மாணவ, மாணவிகள் ஆசிரியரை உடனே விடுவிக்க வேண்டும் என்று கூறியபடியே போராட்டத்தை கைவிட மறுத்து கோஷங்களை எழுப்பி கொண்டிருந்தனர்.

    இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தொடர்ந்து மாணவ, மாணவிகள் அனைவரும் அங்கிருந்து எழுந்து 1 கி.மீ தூரம் நடந்து சென்றனர்.

    இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதற்கிடையே சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும், பேரூர் டி.எஸ்.பி ராஜபாண்டியன் அங்கு விரைந்து வந்தார்.

    அவர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாணவர்கள் அனைவரையும் அங்கிருந்து நேராக பள்ளி வளாகத்திற்கு அழைத்து செல்ல முயன்றார்.

    அப்போது மாணவர்கள் பள்ளிக்குள் வர மறுத்தனர். போலீசார் ஆசிரியர்கள் உதவியுடன் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தனர். அப்போது அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ஒருவழியாக மாணவர்களை உள்ளே அழைத்து சென்ற போலீசார் அவர்களை பள்ளி வளாகத்தில் அமர வைத்தனர். அவர்களுக்கு பேரூர் டி.எஸ்.பி. அறிவுரைகளை வழங்கினார்.

    மாணவர்களின் போராட்டத்தை பார்த்த அப்பகுதி மக்கள், ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

    இதற்கிடையே இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 7 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    இவர்கள் போராட்டத்தை தூண்டி விட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாகவே அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பள்ளி மாணவியிடம், வருகைப்பதிவேடு, நோட்டு எடுத்து வா என்று கூறி உள்ளார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவையை அடுத்த துடியலூர் பகுதி தொப்பம்பட்டி பிரிவு, கோத்தாரி நகரை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவருடைய மகன் ஆனந்தகுமார் (வயது 38). இவர், கோவை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்துள்ளார்.

    மேலும், அந்த பள்ளி மாணவியிடம், வருகைப்பதிவேடு, நோட்டு எடுத்து வா என்று கூறி உள்ளார். அவற்றை எடுத்துச் சென்றபோது அந்த மாணவிக்கு, உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் அநாகரிகமாக நடந்து கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு உள்ளார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாரை கைது செய்தனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கருத்து வேறுபாடு காரணமாக ஆசிரியரின் மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
    • ஆசிரியர் சோமராஜூ மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டியில் ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் இந்தி ஆசிரியராக கே.சோமராஜூ (வயது46) பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.

    இந்த நிலையில் ஆசிரியர் தனது பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவியிடம் 4 மாதங்களாக பழகி வந்துள்ளார். அவருக்கு தனது ஸ்மார்ட்போனை வழங்கியுள்ளார்.

    சமீபத்தில் அந்த மாணவியை தனது வீட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று தாலி கட்டி தன்னுடன் வைத்துக் கொண்டார்.

    இருப்பினும், அந்த மாணவி அவரிடமிருந்து தப்பி தனது வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார். நடந்த சம்பவம் பற்றி அவர் தனது பெற்றோரிடம் கூறினார்.

    அதைத் தொடர்ந்து அந்த மாணவி, தனது தந்தையுடன் வந்து போலீசில் புகார் அளித்தார்.

    ஆசிரியர் சோமராஜூ மீது பாலியல் வன்முறை உள்ளிட்ட போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    முதல்கட்ட விசாரணைக்குப் பின்னர் ஆசிரியர் சோமராஜூவை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இருவரும் கடந்த 1 மாதமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
    • போலீசார் சுரேஷ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவருக்கும் களக்காடு அருகே உள்ள மூங்கிலடியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இருவரும் கடந்த 1 மாதமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மாணவி களக்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்து சுரேசை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது சுரேஷ் வீட்டிற்கு வெளியே வந்து நிற்கும் படி கூறியுள்ளார். இதற்கு மாணவி மறுத்துள்ளார்.

    இதையடுத்து சுரேஷ் நீ வெளியே வராவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் அச்சமடைந்த மாணவி உறவினர் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    பின்னர் சுரேஷ் மாணவியை மூங்கிலடி வயல் காட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மாணவியை களக்காட்டில் விட்டு, விட்டு சென்று விட்டார்.

    இதுபற்றி மாணவி நாங்குநேரி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சுரேஷ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.
    • போலீசார் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சகாதவேன் புகார் கொடுக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்த புகாரில் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

    இதன் அடிப்படையில் குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடினர். பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் உதவி ஆய்வாளர் சகாதவேன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் என்பவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.
    • தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர், சிங்கிலி மேடுவை சேர்ந்த பழனிச்சாமி (28).

    இவருக்கும் ஓசூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த 2020-ம் ஆண்டு குழந்தை திருமணம் நடந்தது. அந்த சிறுமிக்கு 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, சிறுமிக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார்.

    இதில் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் (55) என்பவர் விசாரணை அதிகாரியாக செயல்பட்டுள்ளார்.

    விசாரணையின்போது சிறுமியின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், முதலில் மிரட்டியும், பின்பு அதையே காரணம் காட்டியும், பாலியல் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பாலியல் தொடர்பு குறித்து சிறுமியின் கணவர் பழனிசாமிக்கு தெரிந்ததால், கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாக உதவி மையத்திற்கு சிறுமி புகார் தெரிவித்ததை தொடர்ந்து அவரை மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன், வழிகாட்டுதலின்படி சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதற்காக, பழி வாங்கும் நடவடிக்கையாக, சிறுமியை திருமணம் செய்ததாக பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

    காப்பகத்தில் இருந்த குழந்தைகள் நல உறுப்பினரிடம் அளித்துள்ள புகாரில் ஏரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து குழந்தைகள் நல உறுப்பினர்கள் பென்னாகரம் நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

    பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சிறுமி, நீதிபதியிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சகாதேவனை ஏரியூர் போலீசார் மற்றும் பென்னாகரம் மகளிர் போலீசார் மன்மத லீலையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவனை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை போலீசார் தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    வேலியே பயிரை மேய்ந்தது போல் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசே சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ வழக்கில் கைதான சம்பவம் ஏரியூரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
    • நாம் எங்காவது சென்று வாழலாம் என ஆஷிக் ஆசை வார்த்தைகள் கூறினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது தாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் நான் மற்றும் தங்கை, தம்பி ஆகியோர் எனது தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறோம். நான் கடந்த ஆண்டு பள்ளிக்கு செல்லும்போது பனியன் பிரிண்டிங் நிறுவன தொழிலாளியாக வேலை பார்க்கும் ஆஷிக் (வயது 19) என்பவர் என்னிடம் நட்பாக பழகினார். இருவரும் அடி க்கடி போனில் பேசி வந்தோம்.

    பள்ளி படிப்பு முடிந்தும் எங்களது நட்பு தொடர்ந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் தன்னை காதலிப்பதாக ஆஷிக் கூறினார். முதலில் மறுத்த நான் பின் காதலை ஏற்றுக்கொண்டேன். இந்த நிலையில் எனது தந்தைக்கு காதல் விவகாரம் தெரிந்ததால் எனது போனை என்னிடம் இருந்து பறித்து வைத்துக்கொண்டார்.

    சிறிது நாட்கள் கழித்து வேறு ஒரு போன் நம்பரை மாற்றி அதை பயன்படுத்தி வந்தேன். இதனை அறிந்து கொண்ட ஆஷிக் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். நான் என்னிடம் பேச வேண்டாம் என மறுத்து விட்டேன்.

    இந்த நிலையில் எனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதனால் எனது தந்தை மற்றும் தம்பி, தங்கை ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் எனது பாட்டியுடன் தங்கி இருந்து வருகின்றனர்.

    நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன். இதனை அறிந்து கொண்ட ஆஷிக் நேரடியாக எனது வீட்டிற்கு வந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அவர் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன். நாம் எங்காவது சென்று வாழலாம் என ஆசை வார்த்தைகள் கூறினார். அப்போது திடீரென என்னை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். அதேபோல் நேற்று முன்தினமும் எனது வீட்டிற்கு வந்து என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    பின்னர் எனது வீட்டிலிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து எனது சித்தப்பாவிடம் நான் கூறினேன். என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த ஆஷிக் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஆஷிக்கை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
    • சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.

    கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் பீகார் மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது 5 வயது பெண் குழந்தை கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி காணாமால் போனார். இது தொடர்பாக அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் சிறுமியைத் தேடிவந்த நிலையில், அடுத்த நாள் (ஜூலை 28-ந்தேதி) ஆலுவாவில் உள்ள உள்ளூர் மார்கெட் அருகே சதுப்பு நிலப் பகுதியில் ஒரு சாக்குப்பையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

    அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அசாஃபக் அலாம் (29) என்பவரைக் கைது செய்த கேரள போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் அசாஃபக் அலாம்.

    இதனைத்தொடர்ந்து போக்சோ நீதிமன்றம் விசாரணை நடத்தி, கடந்த 4-ந்தேதி அசாஃபக் அலாம் குற்றவாளி என அறிவித்தது. தண்டனை வருகிற 14-ந்தேதி (இன்று) அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி இன்று மரண தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

    இன்று குழந்தைகள் தினம். அதேபோல் போக்சா சட்டம் அறிமுகம் ஆகிய 11-வது ஆண்டாகும். இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய தினத்தில் சிறுமியை கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
    • போலீசார் தேடி வருகின்றனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    அதே கிராமத்தை லாரி டிரைவர் உறவினர் என்பதால் மாணவியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளார். இதனால் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மாணவியை செங்கல்பட்டு அரசு மருத் துவமனைக்கு அழைத்துச சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வந்தவாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்திற்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது.

    மேலும் மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேட்டுப்பாளையம் போலீசில் மகளை கண்டுபிடித்து தரும்படி பெற்றோர் புகார் அளித்தனர்.
    • விக்னேஷ், சிறுமியிடம் வெளியில் செல்லலாம் என்று கூறி வீட்டை விட்டு அழைத்து சென்றுள்ளார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.

    மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது24). கூலித்தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லும் சமயங்களில் பஸ் நிலையத்தில் வைத்து ச