என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக தலைவர்"

    • எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    • எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை சந்தித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நலம் விசாரித்தார்

    • எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    • எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் நேற்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். 

    • மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.

    நேற்று சென்னையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேடையிலேயே அவர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் பாலாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் எச்.ராஜா அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இன்று எச்.ராஜா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி எச்.ராஜாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

     அறிக்கையில், பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தொடர் கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நலம் முன்னேறி வருகிறது. உறவினர்கள், நண்பர்களுடன் பேசக்கூடிய வகையில் நலமுடன் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற எச்.ராஜானுக்கு உடல்நலக்குறைவு.
    • எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் எச்.ராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் எச்.ராஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அங்கு எச்.ராஜாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    • பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், அந்தந்த மாநில முக்கிய நிர்வாகிகளும் நிதின் நபினுக்கு ஆதரவாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
    • 2006 இடைத்தேர்தலில் முதல்முறையாக பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று டெல்லியில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் பாஜகவின் செயல்தலைவராக உள்ள நிதின் நபின் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், தலைவர் பதவிக்கு போட்டியின்றி அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    பாஜக தேசிய தலைவராக தற்போது ஜே.பி.நட்டா இருந்து வருகிறார். அவரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், தேர்தல் உள்ளிட்ட சில காரணங்களால் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தேசிய தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நிதின் அக்கட்சியின் தேசிய செயல்தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். அந்தப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டதே, தேசியத் தலைவர் பதவிக்கு பாஜக மேலிடத்தின் தேர்வாக அவர் இருக்கிறார் என்பதை மறைமுகமாக கூறத்தான்.

    இன்று மதியம் 2 மணி முதல் 4 மணிக்குள் வேட்புமனுத் தாக்கல் நிறைவுற்றது. மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 37 வேட்புமனுக்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களின் கையெழுத்துகளும் இடம் பெற்றிருந்தன.

    மேலும், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும், அந்தந்த மாநில முக்கிய நிர்வாகிகளும் நிதின் நபினுக்கு ஆதரவாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.  

    பாஜகவின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஒட்டுமொத்த தேர்தல் செயல்முறைக்கான தேர்தல் அதிகாரியாகச் செயல்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் கே. லக்ஷ்மன் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் அனைத்து மனுக்களும் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இப்போட்டியில் நிதின் மட்டுமே வேட்பாளராக இருந்ததால், அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20, 2026) அன்று முறைப்படி இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என குறிப்பிட்டுள்ளார். 

    மேலும் நாளை பிரதமர் மோடி தலைமையில் நிதின் நபின் பதவியேற்பார் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. தொடர்ந்து பாஜகவின் தேசியக் கவுன்சில் கூட்டம் விரைவில் கூட்டப்பட வாய்ப்புள்ளது. 

    யார் இந்த நிதின் நபின்?

    பீகாரைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்எல்ஏ நவீன் கிஷோர் பிரசாத் சின்ஹாவின் மகன்தான் நிதின் நபின். தந்தை மறைவால் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு முதல்முறையாக 2006-ல் பாஜக எம்எல்ஏ ஆனார். அன்றுமுதல் தற்போதுவரை பாஜக எம்எல்ஏவாக தொடர்கிறார். மேலும் பீகார் அமைச்சரவையில் 2021 முதல் 2022 வரை சாலைப் போக்குவரத்து அமைச்சராகவும், 2024 முதல் 2025 வரை நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

    • தன்னைவிட 41 வயது இளையவரின் காலில் விழுந்து வணங்க முயன்ற தேவேந்திர குமாரின் இந்தச் செயல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • இது முற்றிலும் கலாசார வெளிப்பாடு.

    பாஜக எம்.பி.யும் மத்திய தகவ்லதொடர்புத் துறை அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் காலில் 73 வயது பாஜக எம்எல்ஏ, விழுந்து வணங்க முற்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ வான தேவேந்திர குமார் ஜெயின் (73) உடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில், ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மஹாரியமான் சிந்தியாவும் கலந்து கொண்டார்.

    இதன்போது, கேக் வெட்டி, தேவேந்திர குமாருக்கு மஹாரியமான் ஊட்டி விட்டார்.

    இதைத்தொடர்ந்து 31 வயதேயான மஹாரியமானின் காலில் 73 வயதான தேவேந்திர குமார் விழுந்து வணங்க முயன்றார்.

    தன்னைவிட 41 வயது இளையவரின் காலில் விழுந்து வணங்க முயன்ற தேவேந்திர குமாரின் இந்தச் செயல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பேசிய தேவேந்திர குமார் , "எனக்காக மஹாரியமான் பிறந்தநாள் வாழ்த்து பாடியதால் நான் உணர்ச்சிவசப்பட்டேன். இதனால்தான், அவரது கால்களைத் தொட முயன்றேன்.

    இது முற்றிலும் கலாசார வெளிப்பாடு. இளம் வயதினரின் கால்களைத் தொடுவது குறித்து அரசியலமைப்பில் எதுவும் எழுதப்படவில்லை" என்று தெரிவித்தார். 

    • அவருக்கு வயது தனது 94
    • வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.

    பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபிந்திர புர்கயஸ்தா வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது தனது 94

    அசாமில் பாஜகவை வளர்த்தெடுத்த முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர், வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். சில்சார் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

    இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "கபிந்திர புர்கயஸ்தா அவர்கள் அசாமில் கட்சியை வலுப்படுத்தியவர். அவரது அர்ப்பணிப்புள்ள சேவை என்றும் நினைவுகூரப்படும்" எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

    அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • பீகார் பெண்கள் ஒன்றும் சந்தையில் விற்கும் பொருட்கள் அல்ல. இது பீகார் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்.
    • அவர் இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியிருப்பது அவரது புத்தியின் வறுமையைக் காட்டுகிறது

    பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக ரேகா ஆர்யா உள்ளார்.

    ரேகா ஆர்யாவின் கணவர் கிரிதாரி லால் சாஹுவும் பாஜகவில் முக்கிய தலைவர் ஆவார். அவர் பீகார் பெண்கள் குறித்து கீழ்த்தரமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரகாண்டின் அல்மோராவில் சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் கிரிதாரி லால் சாஹு கலந்து கொண்டார்.

    அப்போது அங்கிருந்த இளைஞர்களிடம் திருமணத்தைப் பற்றிப் பேசிய அவர், "உங்களுக்குத் திருமணம் ஆகவில்லையா? வயதான காலத்திலா திருமணம் செய்யப் போகிறீர்கள்? கவலைப்படாதீர்கள், உங்களால் திருமணம் செய்ய முடியாவிட்டால் நாங்கள் பீகாரிலிருந்து உங்களுக்குப் பெண் அழைத்து வருவோம். அங்கே ரூ.20,000 முதல் ரூ.25,000 கொடுத்தால் பெண் கிடைக்கும்" என்று பேசியுள்ளார்.

    பீகாரின் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள், பாஜகவின் பெண்களுக்கு எதிரான மனநிலையை இது காட்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளன.

    கிரிதாரி லால் கருத்துக்கு பீகார் மாநில பாஜகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    "பீகார் பெண்கள் ஒன்றும் சந்தையில் விற்கும் பொருட்கள் அல்ல. இது பீகார் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம்" என்று பீகார் மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    "அவரது மனைவி பெண்கள் நலத்துறை அமைச்சராக இருக்கும்போதே, அவர் இவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியிருப்பது அவரது புத்தியின் வறுமையைக் காட்டுகிறது" என்று கூறி பீகார் மாநில மகளிர் ஆணையத் தலைவி அஸ்பரா தெரிவித்தார்.

    இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கிரிதாரி லாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதற்கிடையே தனது வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், தான் பெண்களை மிகவும் மதிப்பவன் என்றும் கிரிதாரி லால் மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    • உத்தரப் பிரதேசத்திலிருந்து பாஜக அதன் தேசிய கவுன்சில் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தது.
    • பங்கஜ் சவுத்ரியின் வேட்பு மனுவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆதரித்தார்.

    உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவராக பங்கஜ் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரும், பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். பதவி விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் சவுத்ரி பூபேந்திரா, பங்கஜ் சவுத்ரியிடம் பாஜக கொடியை முறையாக ஒப்படைத்தார்.

    மாநிலத் தலைவரின் நியமனத்துடன், உத்தரப் பிரதேசத்திலிருந்து பாஜக அதன் தேசிய கவுன்சில் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தது. ராஜ்நாத் சிங், யோகி ஆதித்யநாத், பிரஜேஷ் பதக், கேசவ் பிரசாத் மௌரியா, பூபேந்திர சவுத்ரி, ஸ்மிருதி இரானி, சூர்ய பிரதாப் ஷாஹி, சுதந்திர தேவ் சிங் மற்றும் ராமபதி ராம் திரிபாதி போன்ற மூத்த தலைவர்கள் உட்பட மொத்தம் 120 புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    பங்கஜ் சவுத்ரியின் வேட்பு மனுவை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் பிரஜேஷ் பதக், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, முன்னாள் மாநிலத் தலைவர் சுதந்திர தேவ் சிங், சூர்யபிரதாப் ஷாஹி, சுரேஷ் கன்னா, முன்னாள் ஆளுநர் பேபி ராணி மௌரியா ஆகியோர் ஆதரித்தனர்.

    மத்திய நிதித்துறை இணையமைச்சரும், ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த குர்மி தலைவருமான பங்கஜ் சவுத்ரி உத்தரப்பிரதேசத்தின் முக்கிய முகமாக அறியப்படுகிறார்.  

    • மதமாற்றத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
    • உத்தரப் பிரதேச காவல்துறை முஸ்லிம்கள் மீது அற்பமான காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்து, இந்துத் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும்போது அதை மறைக்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.

    உத்தரபிரதேசத்தில் பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் வெறுப்பு பேச்சின் வீடியோ வைரலாகி வருகிறது.

    டோமரியாகஞ்சில் ஒரு கூட்டத்தில் பேசிய பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ராகவேந்திர பிரதாப் சிங், "ஒரு முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து பையன்களுக்கு நாங்கள் ஒரு வேலையை ஏற்பாடு செய்வோம்" என்று பேசியுள்ளார்.

    மதமாற்றத்தை தூண்டும் வகையில் அவரின் பேச்சு அமைந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

    இதுதொடர்பாக ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஒரு தலைவர் கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்றத்தை வெளிப்படையாகத் தூண்டினால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    உத்தரப் பிரதேச காவல்துறை முஸ்லிம்கள் மீது அற்பமான காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்து, இந்துத் தலைவர்கள் வன்முறையைத் தூண்டும்போது அதை மறைக்கும் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.

    அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். இல்லையெனில், அனைவருக்கும் சமமான சட்டம் என்ற வாதம் வெற்றுத்தனமாகிவிடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை
    • மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

    மத்தியப் பிரதேசத்தில் நிலத் தகராறில் பாஜக தலைவரும் அவரது ஆதரவாளர்களும் ஒரு விவசாயியை கொடூரமாகக் கொலை செய்தனர்.

    குணா மாவட்டம், கணேஷ்புரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் ஸ்வரூப் (40 வயது). இவரின் நிலத்தை கேட்டு உள்ளூர் பாஜக பூத் கமிட்டி தலைவர் மகேந்திரா நாகர் தகராறு செய்து வந்தார். ஆனால் ராம் ஸ்வரூப் அதற்கு உடன்படவில்லை. 

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், பாஜக தலைவர் மகேந்திரா நாகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விவசாயி ராம ஸ்வரூப்பை கம்பிகள் மற்றும் தடிகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கினர்.

    மேலும் அவர்கள் வந்திருந்த தார் ஜீப்பை ராம் ஸ்வரூப் மீது ஏற்றினர். இதில், படுகாயமடைந்த ராம் ஸ்வரூப்பை கிராம மக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது துப்பாக்கிகளை காட்டு மிரட்டி சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

    முன்னதாக தந்தை ராம் ஸ்வரூப்பை காப்பாற்ற ஓடிவந்த அவரது மனைவி மற்றும் 2 மகள்களும் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

    இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ராம் ஸ்வரூப்பின் மகள், "என் தந்தையைக் காப்பாற்ற நான் சென்றபோது, அவர்கள் என்னைத் தள்ளி கீழே தள்ளிவிட்டு, என் மீது அமர்ந்து என் உடையைக் கிழித்தனர்.

    எங்களை அச்சுறுத்தத் துப்பாக்கியால் சுட்டனர். என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

     

    மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் மகேந்தர் நாகர், அவரது மகன்கள், மனைவி உள்ளிட்ட 14 பேர் மீது கொலை மற்றும் பெண்களுக்கு மானபங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், மகேந்திரா நாகரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கக் கோரி மூத்த தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக குணா மாவட்ட பாஜக தலைவர் தர்மேந்திர சிகார்வார் தெரிவித்துள்ளார்.  

    • பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார்.
    • அப்போது தனது தாயின் நினைவுகள் குறித்து பிரதமர் மோடி உணர்ச்சிகரமாகப் பேசினார்.

    பாட்னா:

    பீகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்காளர் உரிமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தர்பங்காவில் யாத்திரையின்போது சில காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதற்கிடையே, பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    அம்மா தான் உலகம். அம்மா தான் எங்கள் சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த இந்த பீகாரில் சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது தாயை அவமதித்துவிட்டனர். ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் என் தாயை மட்டுமல்ல, இந்த நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்து விட்டனர்.

    என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ அந்த வலி பீகார் மக்களிடமும் உள்ளது. அரசியலில் எந்தத் தொடர்பும் இல்லாத எனது தாயாரை ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் ஏன் விமர்சனம் செய்தனர்? உங்களை போன்ற கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு சேவை செய்ய என்னை விட்டுப் பிரிந்து இருந்தார்.


    இப்போது என் அம்மா உயிருடன் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சில காலத்திற்கு முன்பு 100 வயதை நிறைவு செய்த பிறகு அவர் நம் அனைவரையும் விட்டுச் சென்றார். அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத என் அம்மாவை ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் அவமதித்து உள்ளனர். சில தாய்மார்களின் கண்களில் கண்ணீரை என்னால் பார்க்க முடிகிறது. இது மிகவும் வேதனையானது. என் அம்மா மிகவும் வறுமையில் என்னை வளர்த்தார். அவர் தனக்கென ஒரு புதிய சேலையை கூட வாங்க மாட்டார். எங்கள் குடும்பத்திற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமிப்பார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசியதைக் கேட்ட மாநில தலைவர் கண்ணீர் சிந்தினார். பின்னால் அமர்ந்திருந்த பெண்கள் சிலரும் கண்ணீர் சிந்தினர்.

    ×