என் மலர்
நீங்கள் தேடியது "பணம் மோசடி"
- டாக்டர் ஜவகர் கென்னடி தனது குடும்ப சூழ்நிலைக்காக, ஜாக்குலின் ஆரோக்கிய செல்வியிடம், 6 பவுன் தங்க நகையை வாங்கினார்.
- ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி பணம் மற்றும் நகையை திருப்பி கொடுக்குமாறு வற்புறுத்தி வந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி, அரியாங்குப்பம் அகத்தியர் நகரை சேர்ந்தவர் சகாயலூர்துசாமி. இவரது மனைவி ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி (48).
இவர் அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணி செய்து வருகிறார். இவரின் உறவினரான கட லூர் கோண்டூரை சேர்ந்தவர் ஜவகர் கென்னடி (56). இவர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், டாக்டர் ஜவகர் கென்னடி தனது குடும்ப சூழ்நிலைக்காக, ஜாக்குலின் ஆரோக்கிய செல்வியிடம், 6 பவுன் தங்க நகையை வாங்கினார்.
மேலும், ஜாக்குலின் ஆரோக்கிய செல்வியின் உறவினரான மூலக்குளத்தை சேர்ந்த சவரியம்மாளுக்கு, தனது காலிமனையை பத்திர பதிவு செய்து தருவதாக ரூ.1 கோடியை, ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி மூலம் பெற்றார்.
ஆனால் அந்த காலிமனையை வேறு ஒருவரிடம் ஜவகர் கென்னடி விற்று விட்டார்.
இதனை அறிந்த ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி பணம் மற்றும் நகையை திருப்பி கொடுக்குமாறு வற்புறுத்தி வந்தார். ஆனால் டாக்டர் ஜவகர் கென்னடி நகை பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். நகை-பணம் மோசடி செய்யப்பட்டதால் ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி, அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் முருகானந்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் கட லூர் மாவட்டம் கோண்டூர் அருகே காரில் சென்று கொண்டிருந்த டாக்டர் ஜவகர் கென்னடியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.17 லட்சத்தை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் மெசேஜ் வந்தது.
அதில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து மர்ம நபர்கள் அவரை தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகம் எவ்வாறு செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினர்.
பின்னர் அவர்கள் ஒரு லிங்கை அவருக்கு அனுப்பி அதன் மூலம் முதலீடு செய்யுமாறு கூறினர். இதனை தொடர்ந்து அவர் முதலில் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்தார். இதன் மூலம் அவருக்கு ரூ.3 ஆயிரம் லாபம் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அவர் பல்வேறு தவணைகளாக ரூ.5½ கோடி முதலீடு செய்தார். இதன் மூலம் கிடைத்த லாபத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் அது முடியவில்லை.
எனவே அவர் தனக்கு முதலில் ஆலோசனைகள் வழங்கியவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதற்காக மோசடியான கே.ஒய்.சி. ஆவணங்கள், போலி வாடகை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன
- முறைகேடான கணக்குகள் தொடங்குவதற்கு உடந்தையாக இருந்ததற்காக வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகள் பணப்பலன்களை பெற்று இருப்பதை கண்டறிந்தனர்.
புதுடெல்லி:
ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகரில் உள்ள பஞ்சாப் மற்றும் சிந்து வங்கிக்கிளை மூலம் 13 போலி கணக்குகளை உருவாக்கி அவற்றின் மூலம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்திருக்கின்றனர். சைபர் குற்றங்கள் மூலம் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட இந்த பணத்தை எடுப்பதற்காக போலி நிறுவனங்களின் பெயரில் நடப்பு கணக்குகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இதற்காக மோசடியான கே.ஒய்.சி. ஆவணங்கள், போலி வாடகை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. சைபர் குற்றவாளிகளின் இந்த மோசடிக்கு குறிப்பிட்ட அந்த வங்கியின் மேலாளர் விகாஸ் வத்வா மற்றும் அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.
வங்கி அதிகாரிகளின் உடந்தையுடனும், குற்றவியல் சதித்திட்டத்துடனும் இந்த கணக்குகள் தொடங்கப்பட்டதாகவும், இதற்காக கே.ஒய்.சி. விதிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மீறியதாகவும் கூறப்படுகிறது. இந்த கணக்குகள் மூலம் ரூ.1,084 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், மேற்படி முறைகேடான கணக்குகள் தொடங்குவதற்கு உடந்தையாக இருந்ததற்காக வங்கி மேலாளர் மற்றும் அதிகாரிகள் பணப்பலன்களை பெற்று இருப்பதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து விகாஸ் வத்வா உள்பட 19 பேர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்போனில் குற்றப்பிரிவு போலீஸ்காரர் என கூறி ஒருவர் வீடியோ காலில் பேசினார்.
- குண்டு வெடிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளில் முதியவர் செல்போன் எண் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஸ்ரீ நகர் காலனியை சேர்ந்தவர் 78 வயது முதியவர். இவர் மத்திய அரசு ஊழியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருடைய செல்போனில் குற்றப்பிரிவு போலீஸ்காரர் என கூறி ஒருவர் வீடியோ காலில் பேசினார்.
குண்டு வெடிப்பு மற்றும் கடத்தல் வழக்குகளில் முதியவர் செல்போன் எண் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிபிஐயின் நோட்டீஸ்களை காட்டினார். இந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றால் முதியவர் கணக்கில் இருந்து குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு ரூ.51 லட்சத்தை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார். வழக்கு முடிந்த பிறகு நீங்கள் அனுப்பும் பணத்தை மீண்டும் உங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும் என கூறினார்.
போலீசார் இந்த வழக்குகளில் தன்னை கைது செய்து விடுவார்களோ என பயந்த முதியவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.51 லட்சத்தை அனுப்பி வைத்தார். பின்னர் டிஜிட்டல் கைது மூலம் தான் ஏமாற்றப்பட்டுதை அறிந்த முதியவர் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவையில் அதிகளவிலான சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
- சைபர் மோசடிக்கு ஆளாகும் பட்சத்தில் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும்.
கோவை:
இணைய பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு நகரங்களில் இணைய பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நாக் அவுட் டிஜிட்டல் மோசடி எனும் விழிப்புணர்வு இயக்கத்தை தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது.
அதன்படி கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் பிரிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கோவையில் அதிகளவிலான சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. நகரை பொறுத்தவரை நாள்தோறும் குறைந்தபட்சம் 50 சைபர் குற்றங்கள் நிகழ்கின்றன. இதில் இருந்து தப்பிக்க எப்போதும் 1930 என்ற எண்ணை ஸ்பீடு டயலில் வைத்திருக்க வேண்டும். சைபர் மோசடிக்கு ஆளாகும் பட்சத்தில் உடனடியாக அந்த எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும்.
கோவை நகரில் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை சைபர் மோசடியால் ரூ.49 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மோசடியாளர்களிடம் இருந்து ரூ.14 கோடியை மீட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தனர்.
இதில் சைபர் குற்றப்பிரிவு காவல் துணை ஆய்வாளர் பிரவீன்குமார், ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கிருஷ்ணகுமார், ஆனந்தன், அஞ்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- பேராசிரியை பெயரில் சட்ட விரோத பணம் மற்றும் தகவல் பரிமாற்ற மோசடி கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
- பல்வேறு பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால், சைபர் கிரைமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பெரிய காலாப்பட்டு தனியார் நர்சிங் கல்லுாரியில் பணியாற்றி வரும் பேராசிரியை ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் டெல்லி தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய அதிகாரி போல் பேசினார்.
அதில், பேராசிரியை பெயரில் சட்ட விரோத பணம் மற்றும் தகவல் பரிமாற்ற மோசடி கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி போலீசார் தொடர்பு கொள்வர் என கூறினார்.
இதையடுத்து, சிறிது நேரத்தில் பேராசிரியையிடம் தொடர்பு கொண்ட மற்றொரு மர்மநபர் டெல்லி போலீஸ் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அதில், பேராசிரியைக்கு மகாராஷ்டிரா முன்னாள் மந்திரி ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் பல்வேறு பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால், சைபர் கிரைமில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த வழக்கில் இருந்து விடுவிக்க பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதை நம்பிய பேராசிரியை ரூ.9 லட்சத்து 69 ஆயிரத்து 362-ஐ மர்மநபருக்கு அனுப்பினார்.
அதன் பிறகு சிலரிடம் பேராசிரியை விசாரித்தபோது பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்தார். இதையடுத்து பேராசிரியை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- வேதிகா நடிகை ஆலியா பட்டிடம் நிதி ஆவணங்கள் மற்றும் பணம் கையாள்வது தொடர்பான வேலையை செய்து வந்துள்ளார்.
- ஆலியா பட்டின் தாயார் சோனி ரஸ்தான் போலீசில் புகார் அளித்ததை தெரிந்து கொண்ட வேதிகா தலைமறைவானார்.
மும்பை:
இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சொந்தமாக எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.
நடிகை ஆலியா பட்டிடம் 2001 முதல் 2004 வரை வேதிகா பிரகாஷ் ஷெட்டி (வயது32) என்பவர் தனி உதவியாளராக பணியாற்றினார்.
இந்த நிலையில் நடிகை ஆலியா பட்டின் தாயாரும், முன்னாள் நடிகையும் இயக்குனருமான சோனி ரஸ்தான், வேதிகா பிரகாஷ் ஷெட்டி ரூ.77 லட்சம் மோசடி செய்ததாக கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி ஜூஹூ போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
குற்றவியல் மற்றும் நம்பிக்கை மோசடி தொடர்பான விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வேதிகா பிரகாஷ் ஷெட்டியின் மீது போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
வேதிகா நடிகை ஆலியா பட்டிடம் நிதி ஆவணங்கள் மற்றும் பணம் கையாள்வது தொடர்பான வேலையை செய்து வந்துள்ளார். போலி பில்களை தயாரித்து, அதை உண்மையானதாக காட்ட நவீன தொழில் நுட்பமுறைகளை பயன்படுத்தி உள்ளார்.
ஆலியா கையெழுத்திட்டப் பிறகு அந்த தொகை வேதிகாவின் நண்பரின் கணக்கிற்கு மாற்றப்பட்டு பிறகு அவரது கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆலியா பட்டின் தாயார் சோனி ரஸ்தான் போலீசில் புகார் அளித்ததை தெரிந்து கொண்ட வேதிகா தலைமறைவானார். ராஜஸ்தான், கர்நாடகா, புனே, பெங்களூரு என தொடர்ந்து இடங்களை மாற்றிக் கொண்டே இருந்தார்.
வேதிகாவை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீசார் பெங்களூருவில் பதுங்கி இருந்த அவரை கைது செய்தனர். அவரை மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் செய்தியாகும்.
- லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் ஹாக் செய்து உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவர்.
புதுச்சேரி:
புதுவை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறியதாவது:-
வாட்ஸ் ஆப் குழுக்களில் தற்போது பல்வேறு வங்கிகளின் பெயர்களில் தங்களின் வங்கிக்கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் ஆப் லிங்க் வந்து கொண்டு உள்ளது. அது இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான லிங்க் மற்றும் செய்தியாகும். அதை யாரும் நம்ப வேண்டாம். மேலும் அந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். அப்படி நீங்கள் கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் ஹாக் செய்து உங்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடி விடுவர். மேலும் உங்களின் வாட்ஸ் ஆப் ஹாக் செய்யப்படும்.
இதுபோன்று சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம். பண பரிவர்த்தனை வங்கிக் கணக்கு போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நேரில் சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.
மேலும் இணைய வழி சம்பந்தமான புகார் தெரிவிக்க மற்றும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள 1930, 0413 2276144, 9489205246 எண்களில் இணைய வழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மும்பையில் இருந்து தீப்தி ராஜசேகர் என்ற பெயரில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
- டெலிகிராம் லிங்க்குக்குள் தொழிலதிபர் சென்று குறிப்பிட்ட வங்கிக்கணக்குக்கு 12 தவணைகளாக ரூ.19 லட்சத்து 53 ஆயிரத்தை பரிமாற்றம் செய்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்த 50 வயது தொழிலதிபரின் சமூக வலைதள பக்கத்தில் விளம்பரம் வந்துள்ளது. அதில் பங்குசந்தையில் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதை நம்பிய அவர் சம்பந்தப்பட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அதற்கு மும்பையில் இருந்து தீப்தி ராஜசேகர் என்ற பெயரில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
பின்னர் டெலிகிராம் லிங்க்குக்குள் தொழிலதிபர் சென்று குறிப்பிட்ட வங்கிக்கணக்குக்கு 12 தவணைகளாக ரூ.19 லட்சத்து 53 ஆயிரத்தை பரிமாற்றம் செய்தார். அந்த தொகைக்கு அதிக லாபம் வந்ததாக அவருக்கு காட்டியுள்ளது. ஆனால் பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.
மேலும் கூடுதல் பணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்பிறகே, தொழிலதிபர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
- மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறை கைதிகள் மூலம் லட்டு, மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து, கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் சிறை உள்ளதால், மெயின் ரோட்டோரம் சிறைக்கு சொந்தமான ஒரு அறையில் வைத்து பொதுமக்களுக்கும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுகிறது. கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் (வயது 34) என்பவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
இவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்குரிய பணத்தை சிறை கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஆனால் அந்த பணம் சிறை கணக்கிற்கு சரியாக வரவில்லை. இதனால் சுப்பிரமணியம் மீது சிறை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பொருட்கள் வாங்கியதற்கு 'ஜி.பே.' மூலம் பணம் அனுப்பி வருகிறோம் என்று கூறினர். இதையடுத்து அந்த 'ஜி.பே.' அக்கவுண்ட் யாருடையது என்று அவர்கள் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த செல்போன் எண் சிறை வார்டன் சுப்பிரமணியத்தின் மாமியாரின் செல்போன் எண் என்பது தெரிந்தது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அவருடைய மாமியாரின் செல்போன் எண் மூலமாக 'ஜி.பே.' அக்கவுண்டுக்கு சென்றிருப்பது தெரிந்தது.
இதைத்தொடர்ந்து சிறை வார்டன் சுப்பிரமணியத்திடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணம் மோசடி செய்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து சேலம் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத், சிறை வார்டன் சுப்பிரமணியத்தை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நடராஜன், விஜயலட்சுமி இருவரும் தமிழ்நாட்டில் கலெக்டராக பணிபுரிந்தவர்கள்.
- எனது பணம் முழுவதும் அவர்கள் மோசடி செய்து விட்டனர்.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் திருமலை பகவான் என்ற பெயரில் பஸ் சர்வீஸ் நடத்தி வருகிறேன். ஒட்டன் சத்திரத்தில் இருந்து வேடசந்தூருக்கு பேருந்து வழித்தட அனுமதி வாங்கி தருவதாக கூறி மதுரையை சேர்ந்த மணி என்பவர் என்னை அணுகினார். அவர் மும்பையைச் சேர்ந்த குருபாய் என்பவரை மகாராஷ்டிரா முதல் மந்திரியின் உறவினர் என்றும், அதே போல் தனியார் கண் மருத்துவமனையின் உரிமையாளர் என்று டாக்டர் ராஜ்குமார் என்பவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நடராஜன், விஜயலட்சுமி இருவரும் தமிழ்நாட்டில் கலெக்டராக பணிபுரிந்தவர்கள். தற்போது அரசு உயர் பதவியில் இருக்கிறார்கள். அவர்களிடம் சொன்னால் உங்களுக்கு பேருந்து வழித்தட அனுமதி கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி என்னிடம் ரூ.20 லட்சம் வரை வங்கிப் பரிவர்த்தனை மூலமாக பல்வேறு தவணை களில் பணம் பெற்றனர். பல மாதங்கள் ஆகியும் எனக்கு பேருந்து வழித்தட அனுமதி கிடைக்கவில்லை. திரும்பவும் நான் கேட்டதற்கு சரிவர அவர்கள் பதிலளிக்கவில்லை. வீணாக அலைக்கழிப்பு செய்தனர்.
இதன் காரணமாக எனது குடும்பத்தினரால் நான் தனிமையாக ஒதுக்கப்பட்டேன். தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளேன். ஆரப்பாளையத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று நான் செலுத்திய பணத்தையாவது திரும்ப கொடுங்கள் என்று கேட்டேன். அப்போது எல்லா பணத்தையும் கலெக்டர் நடராஜன் மற்றும் விஜயலட்சுமி ஆகியோரிடம் கொடுத்து விட்டோம். அதை எல்லாம் திரும்ப கேட்டு பெற முடியாது. ஆகையால் ஊர் போய் சேருங்கள். அதையும் மீறி அடிக்கடி இங்கே வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.
மேலும் அவர்கள் என்னை மிரட்டும்போது பட்டுமணி என்ற ஒருவர் தன்னை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் என்றும் அவருடன் இரண்டு போலீஸ்காரர்களும் இருந்தனர். அவர்களும் சேர்ந்து என்னை இனிமேல் வந்தால் கஞ்சா கேசில் உள்ளே தள்ளி விடுவோம். சிறைக்கு சென்றால் நீ என்றுமே வெளியே வர முடியாது என்றும் மிரட்டினர். இவ்வாறு நான் இந்த கும்பலிடம் ஏமாந்தது அறிந்த எனது மனைவியும் என்னுடன் பேசுவதற்கு மறுத்து வருகிறார்.
இதனால் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆகவே எனக்கு உயிருக்கு பயமாக உள்ளது. எனது பணம் முழுவதும் அவர்கள் மோசடி செய்து விட்டனர். எனவே எனது பணத்தை பெற்று தருமாறும், போலியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெயரை சொல்லி மோசடி செய்த இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பரிசீலித்த கமிஷனர் லோகநாதன் உரிய விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- 140-க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் சுமார் ரூ.4 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- கீழ்ப்பாக்கம் உள்பட பல இடங்களில் செயல்பட்டு வந்த மையங்கள் மூடப்பட்டு உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
சென்னை:
பிரபல தனியார் மையம் ஒன்று நீட் மற்றும் ஐ.ஐ.டி. தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த மையம் சார்பில் பெற்றோர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பண வசூலும் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் திடீரென மையத்தை மூடியதால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி மையத்தின் தலைவர் அங்கூர் ஜெயின் மற்றும் இயக்குனர்கள் மீதும் கீழ்பாக்கம் தனியார் மையக் கிளை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
140-க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் சுமார் ரூ.4 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒருங்கிணைந்த பயிற்சி என்ற அடிப்படையில் பெற்றோர்களிடம் பண வசூலில் ஈடுபட்டு மோசடி அரங்கேறி இருக்கிறது.
கீழ்ப்பாக்கம் உள்பட பல இடங்களில் செயல்பட்டு வந்த மையங்கள் மூடப்பட்டு உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். டெல்லியில் தனியார் பயிற்சி மைய தலைமையகத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் திடீரென மையங்கள் மூடப்பட்டது தெரிய வந்து உள்ளது.
தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் 6 மையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






