காலிமனையை பத்திர பதிவு செய்து தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1 கோடி மோசடி - டாக்டர் கைது

டாக்டர் ஜவகர் கென்னடி தனது குடும்ப சூழ்நிலைக்காக, ஜாக்குலின் ஆரோக்கிய செல்வியிடம், 6 பவுன் தங்க நகையை வாங்கினார்.ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி பணம் மற்றும் நகையை திருப்பி கொடுக்குமாறு வற்புறுத்தி வந்தார்.
காலிமனையை பத்திர பதிவு செய்து தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1 கோடி மோசடி - டாக்டர் கைது
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி, அரியாங்குப்பம் அகத்தியர் நகரை சேர்ந்தவர் சகாயலூர்துசாமி. இவரது மனைவி ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி (48).

இவர் அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளராக பணி செய்து வருகிறார். இவரின் உறவினரான கட லூர் கோண்டூரை சேர்ந்தவர் ஜவகர் கென்னடி (56). இவர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், டாக்டர் ஜவகர் கென்னடி தனது குடும்ப சூழ்நிலைக்காக, ஜாக்குலின் ஆரோக்கிய செல்வியிடம், 6 பவுன் தங்க நகையை வாங்கினார்.

மேலும், ஜாக்குலின் ஆரோக்கிய செல்வியின் உறவினரான மூலக்குளத்தை சேர்ந்த சவரியம்மாளுக்கு, தனது காலிமனையை பத்திர பதிவு செய்து தருவதாக ரூ.1 கோடியை, ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி மூலம் பெற்றார்.

ஆனால் அந்த காலிமனையை வேறு ஒருவரிடம் ஜவகர் கென்னடி விற்று விட்டார்.

இதனை அறிந்த ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி பணம் மற்றும் நகையை திருப்பி கொடுக்குமாறு வற்புறுத்தி வந்தார். ஆனால் டாக்டர் ஜவகர் கென்னடி நகை பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். நகை-பணம் மோசடி செய்யப்பட்டதால் ஜாக்குலின் ஆரோக்கிய செல்வி, அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் முருகானந்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் கட லூர் மாவட்டம் கோண்டூர் அருகே காரில் சென்று கொண்டிருந்த டாக்டர் ஜவகர் கென்னடியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரிடமிருந்து ரூ.17 லட்சத்தை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com