search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா"

    • 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவுக்கு கொரோனா பரவலும் காரணம்.
    • நடுத்தர வர்க்க பெற்றோர்களிடையே கூட, அவர்களின் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு ஆசை உள்ளது.

    பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையால் வெளியிடப்பட்ட 2022-ம் ஆண்டிற்கான சமீபத்திய தரவுகளின்படி, இஸ்லாமிய பெண்களிடையே ஆரம்பகால குழந்தை பிறப்பது கேரளாவில் 10 வருட காலத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கேரளாவில் 2022-ல் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் உள்ளன.

    15-19 வயதுப் பிரிவினருக்கான புள்ளிவிவரங்களின்படி, 2022ல் இஸ்லாமியரிடையே டீன் ஏஜ் பிரசவங்கள் 7,412 ஆக இருந்தது. இது 2012 க்குப் பிறகு (14066) மிகக் குறைந்த எண்ணிக்கையாகும், இது 47 சதவீத சரிவைக் குறிக்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் கேரளாவில் இஸ்லாமிய பெண்களின் சராசரி டீன் ஏஜ் பிரசவங்கள் 15,000க்கு மேல் இருந்ததை கருத்தில் கொண்டு இந்த சரிவு முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு தசாப்தத்தில் இஸ்லாமியரிடையே அதிக எண்ணிக்கையிலான பதின்ம வயதுப் பிரசவங்கள் 2013-ல் 22,924 ஆகும். 2022-ம் ஆண்டின் எண்ணிக்கையானது தசாப்தத்தின் மிக உயர்ந்த எண்ணிக்கையில் இருந்து 67 சதவிகிதம் குறைந்துள்ளது.

    2019-ம் ஆண்டிலிருந்து இஸ்லாமியரிடையே டீன் ஏஜ் பிரசவங்களின் விகிதம் குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இருப்பினும், 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு கொரோனா பரவலுக்குக் காரணம்.

    இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மத்தியில், ஒரு தசாப்தத்தில் 15-19 வயதுக்குட்பட்ட பிரசவங்களின் எண்ணிக்கையில் மிக அதிகமான சரிவு இஸ்லாமியர்களிடையே பதிவு செய்யப்பட்டுள்ளது- 6,654. இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை முறையே 1749 மற்றும் 2888 ஆக இருந்தது. பதின்ம வயதினரின் குழந்தைப் பிரசவங்களின் சதவீதம் 87 சதவீதம் குறைந்துள்ளது.

    NISA (ஒரு முற்போக்கு முஸ்லீம் பெண்கள் மன்றம்) செயலாளர் வி.பி.சுஹாரா கூறுகையில், டீன் ஏஜ் கர்ப்பத்தின் எண்ணிக்கையில் சரிவு வரவேற்கத்தக்கது. "பருவப் பிரசவங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான முக்கிய காரணியாக இருக்கும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக அதிக விழிப்புணர்வு உள்ளது. மேலும் கடந்த காலத்தைப் போலல்லாமல், பெற்றோர் மற்றும் பெண் இருவரும் நல்ல கல்வியைப் பெறுவதில் ஆர்வமாக உள்ளனர்.

    நடுத்தர வர்க்க பெற்றோர்களிடையே கூட, ஒரு ஆசை உள்ளது. அவர்களின் குழந்தைகளைப் படிக்க வைப்பதற்கு இதுவும் பெண்களின் திருமண வயதை அதிகரிக்கக் கோருவதற்கு ஒரு காரணம்" என்றார்.

    • ராகுல் எடுத்த முடிவு நாளை மறுநாள் (ஜூன் 17) திங்கள்கிழமை தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    • 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களில் வென்று பாராளுன்றத்தில் தங்களது கைகளை ஓங்கச் செய்துள்ளது.

    காங்கிரஸ் சார்பில் கேரளாவின் வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டில் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ராகுல் நீடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் எந்த தொகுயை அவர் தேர்ந்தெடுப்பார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே எழத் தொடங்கியது.

    இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தொகுதியில் தொடர் வேண்டும் என்று மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என்று தெரிவித்தார். வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் காங்கிரஸூக்கு உள்ளதால் ராகுல் ரேபரேலியையே தேர்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

    அப்படி நடக்கும் பட்சத்தில் வயநாட்டில் மறுதேர்தல் நடக்கும்போது பிரியங்கா காந்தி அங்கு போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராகுல் எடுத்த முடிவு நாளை மறுநாள் (ஜூன் 17) திங்கள்கிழமை தெரியவரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பேசுகையில், ஜூன் 17 க்குள் இதுகுறித்து முடிவெடுப்பது அவசியம் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • திருச்சூர் மாவட்டத்தில் இன்று காலை 8.15 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது.
    • பாலக்காடு மாவட்டத்தில் உள்ள குமரநெல்லூர், திரிதாலா பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இன்று காலை 8.15 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. குன்னம்குளம், எருமப்பட்டி, பழஞ்சி, குருவாயூர், சோவனூர் பகுதிகளில் இதனை மக்கள் உணர்ந்துள்ளனர்.

    பாலக்காடு மாவட்டத்தில் உள்ள குமரநெல்லூர், திரிதாலா பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. காலை 8.30 மணிக்கு சுமார் 10 முதல் 20 விநாடிகள் நீடித்த இந்த நில நடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

    • கடந்த மார்ச் மாதம் என்.ஐ.டி. வளாகத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
    • மாணவர் விவகார கவுன்சில் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ( என்.ஐ.டி.) கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் என்.ஐ.டி. வளாகத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இந்த நடைமுறைக்கு மாணவர்களில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் மார்ச் 20-ந் தேதி அன்று கல்லூரியின் நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பணிக்கு வந்த கல்லூரி ஊழியர்களை வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். இதனால் கல்லூரி அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டதாக பதிவாளர் கருத்து தெரிவித்தார்.

    மேலும் போராட்டத்திற்கு காரணமான 5 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அவர்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக அவர்களுக்கு அளிக்கப்பட்ட நோட்டீசில், உங்கள் தவறான நடத்தையால் கல்லூரிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனை வசூலிக்க எங்களுக்கு உரிமை உண்டு என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் 5 மாணவர்களுக்கும் ரூ.33 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக என்.ஐ.டி.மீடியா செல் தலைவர் டாக்டர் சுனிதாவை தொடர்பு கொண்டபோது, மாணவர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வழங்கப்படவில்லை. ஆனால் மாணவர் விவகார கவுன்சில் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வயநாடு தொகுதியிலும், ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
    • வயநாட்டை கைவிடும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க காங்கிரஸ் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 235 இடங்களைக் கைப்பற்றி பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்கு கொடுங்கனவாக மாறியுள்ளது. வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணியின் பிரதிநிதித்துவம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டு இடங்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில் ஒரு தொகுதியின் எம்.பியாக மட்டுமே ஒருவர் தொடரமுடியும் என்பதால் ராகுல் காந்தி எந்த தொகுதியை தியாகம் செய்வார் என்ற கேள்வி தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த ஜூன் 4 முதலே எழத் தொடங்கியது. இதற்கிடையில் கேரளா வந்த ராகுல் காந்தி, தான் எந்த தோகுதி எம்.பியாக தொடர வேண்டும் என்பதை மக்களைக் கேட்டே முடிவெடுப்பேன் என தெரிவித்திருந்தார்.

     

    வடக்கில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் காங்கிரசுக்கு உள்ளதால் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதி எம்.பி யாக தொடர முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. வயநாட்டை கைவிடும் தர்மசங்கடத்தைத் தவிர்க்க காங்கிரஸ் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.அதாவது வயநாட்டில் மறுதேர்தல் நடக்கும்பட்சத்தில் அங்கு ராகுலின் தங்கையும் காங்கிரஸின் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி போட்டியிட அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

     

    முன்னதாக வாரணாசி தொகுதியில் மோடி கடந்த தேர்தலை விட குறைத்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வென்றுள்ளதை விமர்சித்திருந்த ராகுல் காந்தி, வலுவான எதிர்ப்பு இல்லாமலேயே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற மோடி, வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் தோற்றிருப்பார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • நாயனாரின் மனைவி சாரதா பாதங்களை தொட்டு ஆசி பெற்றார்.
    • சுரேஷ்கோபிக்கு, சாரதா இனிப்பு வழங்கினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பாரதிய ஜனதா சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ்கோபி. மத்திய இணை மந்திரி பதவியேற்ற இவர், டெல்லியில் இருந்து கேரளா திரும்பியதும் கோழிக்கோடு தாலி கோவில், பழையாங்கடி மாடைக்காவு கோவில் மற்றும் பரசினிக்கடவு கோவில்களுக்குச் சென்றார்.

    தொடர்ந்து அவர், கண்ணூர் கல்லியசேரியில் உள்ள முன்னாள் முதல்-மந்திரியும், சி.பி.எம். தலைவருமான ஈ.கே.நாயனார் வீட்டுக்குச் சென்றார். அங்கு நாயனாரின் மனைவி சாரதா பாதங்களை தொட்டு ஆசி பெற்றார்.

    சுரேஷ்கோபிக்கு, சாரதா இனிப்பு வழங்கினார். தொடர்ந்து அங்கு மதிய உணவு சாப்பிட்டார். இது தொடர்பாக சாரதா கூறுகையில், சுரேஷ்கோபி, நாயனாருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். பலமுறை இங்கு வந்துள்ளார். கண்ணூர் வரும்போதெல்லாம், எனக்கு போன் செய்து அம்மா எனக்கு சாப்பாடு வேண்டும் என கூறுவார். இப்போது அவர் பழைய சுரேஷ் இல்லை. மிகவும் பிசியாக இருக்கிறார். அவர் என்னை பார்க்க வந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என்றார்.

    • பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
    • முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரளா அமைச்சரவை கூட்டம் கூடியது.

    குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49 உயிரிழந்துள்ளனர். இதில் 11 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் தமிழர்களும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீவிபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இதனிடையே, தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரவும், மேலும் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், குவைத் தீவிபத்து தொடர்பாக கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரளா அமைச்சரவை கூட்டம் கூடியது.

    இந்த கூட்டத்தில் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலத்தை இந்தியா கொண்டுவருவது தொடர்பான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், மீட்பு பணிகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக கேரளா அமைச்சர்கள் குவைத் செல்ல வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. 

    • முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    • ஒவ்வொரு மாதமும் பூஜைகளுக்காக சில நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பூஜைகளுக்காக சில நாட்கள் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் (14-ந்தேதி) திறக்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடைதிறப்பையொட்டி அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெறும். 15-ந்தேதி முதல் ஆன்லைன் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    வருகிற 19-ந்தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிசேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகளும் நடைபெற உள்ளன.

    19-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    • பாதிரியார்களில் கூட முட்டாள்கள் இருக்கலாம் என தெரிகிறது.
    • கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் ஆளும் இடது சாரி கட்சிகள் பெரும் தோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே இந்த கூட்டணி வெற்றி பெற்றது.

    மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த போதிலும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது இடதுசாரி கட்சி தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தோல்விக்கு முதல்-மந்திரி பினராய் விஜயன் பொறுப்பேற்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

    யாக்கோ படை சிரியன் திருச்சபையின் முன்னாள் பிஷப் கீவர்கீஸ் கூரிலோஸ், இந்த தோல்வியில் இருந்து இடதுசாரிகள் பாடம் கற்க வேண்டும். இல்லாவிட்டால், மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் ஏற்பட்ட நிலை கட்சிக்கு ஏற்படும் என்று கூறினார்.

    2018-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கொரோனா காலத்தில் திறம்பட செயலாற்றியதால் தான் 2021-ம் ஆண்டு மாநிலத்தில் இடது சாரி ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தது என்று கூறிய அவர், எப்போதும் வெள்ளம் மற்றும் தொற்று நோய்கள் உதவ முடியாது என்றும் தெரிவித்தார். அவரது கருத்துக்கு முதல்-மந்திரி பினராய் விஜயன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    கேரளாவில் இடதுசாரி ஆட்சிக்கு வந்ததற்கு காரணம் என்று முன்னாள் பிஷப் வெளியிட்ட அறிக்கையை நான் பார்க்க நேர்ந்தது. இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், பாதிரியார்களில் கூட முட்டாள்கள் இருக்கலாம் என தெரிகிறது என்றார். அவரது இந்த கருத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    பினராய் விஜயன் இது போன்ற கருத்துக்களை அவ்வப்போது கூறுவதுண்டு. கட்சி அல்லது அரசை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவர் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    கேரள எதிர்க்கட்சி தலைவர் சதீசன் (காங்கிரஸ்) கூறுகையில், பினராய் விஜயன் விமர்சனங்களை சகித்துக் கொள்ள வேண்டும். அவர் தனது கட்சிக்குள்ளோ அல்லது வெளியேவோ எந்த விமர்சனத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்பதற்கு இது ஓரு எடுத்துக்காட்டு என்றார்.

    • தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
    • வயநாடு, இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்ட ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை.

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று, 5 மற்றும் 6-ம் தேதி ஆகிய 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    இதேபோல், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், வயநாடு, இடுக்கி, ஆலப்புழா, பத்தனம்திட்ட ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சுள் எச்சரிக்கையும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    • காரின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
    • 3 பேரும் ஒரு வாரம் சமூகசேவை செய்ய வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சஞ்சு டெக்கி. பிரபல யூடியூபரான இவர் தனது சேனலில் வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வந்தார். அதன் மூலமாக மிகவும் பிரபலமா னார். அவரது யூ-டியூப் சேனலை 1.6 மில்லியன் சந்தாதாரர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சஞ்சு டெக்கி, நடிகர் பஹத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தை போன்று தனது காரில் நீச்சல் குளம் அமைத்தார். அதில் தண்ணீரை நிரப்பி தனது நண்பர்களுடன் குளித்தபடியே காரை சாலையில் ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது அவர்களது காரில் பிரச்சினை ஏற்பட்டதால் காரில் இருந்த தண்ணீரை சாலையில் வெளியேற்றினர்.

    அவர்களின் இந்த நடவடிக்கையால் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சஞ்சு டெக்கி இந்த காட்சிகளை யூடியூப்பில் நேரலையில் பதிவிட்டதால் அவர் நண்பர்களுடன் காருக்குள் குளித்தது, தண்ணீரை சாலையில் திறந்துவிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு அனைத்தும் யூ-டியூப் நேரலையில் வெளியானது.

    இந்த வீடியோ காட்சியை லட்சக்கணக்கானோர் நேரலையில் பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலப்புழா போக்குவரத்து துறை அதிகாரிகள் சஞ்சு டெக்கியின் காரை நடுவழியில் நிறுத்தி பறிமுதல் செய்தனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக சஞ்சு டெக்கி மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    மேலும் சஞ்சு டெக்கியின் ஓட்டுனர் உரிமம் மற்றும் காரின் வாகன பதிவு சான்றிதழை போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்தனர். இந்நிலையில் சஞ்சு டெக்கி, அவரது நண்பர்கள் சூர்யநாராயணன், அபிலாஷ், ஸ்டான்லி கிறிஸ்டோபர் ஆகிய 3 பேரும் ஒரு வாரம் சமூகசேவை செய்ய வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    அவர்கள் 3 பேரும் வருகிற 3-ந்தேதி முதல் மலப்புரம் எடப்பால் பகுதியில் உள்ள மோட்டார் வாகன பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கட்டாய பயிற்சியில் பங்கேற்க வேண்டும், ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரம் சமூகவேலை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    • கேரளாவில் கடந்த சில வாரங்களாக கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது.
    • கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.

    கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கேரளாவில் கடந்த சில வாரங்களாக கோடை மழை தீவிரமாக பெய்து வருகிறது.

    குறிப்பாக, கொச்சி, கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம் உள்பட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல பகுதிகள் வெள்ளக் காடானது.

    இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை தொடங்கிய நிலையில், கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் இன்று தொடங்கிய பருவமழை படிப்படியாக அனைத்து மாநிலங்கள் என ஜூலை மாதம் வரை நாடு முழுவதும் பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யக்கூடும் எனவும், கேரளாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×