என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » உசிலம்பட்டி தற்கொலை
நீங்கள் தேடியது "உசிலம்பட்டி தற்கொலை"
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கந்துவட்டி கொடுமையால் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியபட்டியைச் சேர்ந்தவர் சின்னத்தாய் (வயது 60). இவரது மகன் செல்லப்பாண்டி (40). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி இருந்தார்.
உரிய காலத்தில் கடன் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாததால் கடன் கொடுத்தவர்கள் செல்லப்பாண்டிக்கு நெருக்கடி கொடுத்தனர். மேலும் கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த செல்லப்பாண்டி சில நாட்களுக்கு முன்பு தலைமறைவானார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் செல்லப்பாண்டியின் தாயார் சின்னத்தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்துள்ளனர். மேலும் தரக் குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடன்காரர்களின் தொந்தரவால் விரக்தியடைந்த சின்னத்தாய் இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பாண்டி விசாரணை நடத்தி சின்னத்தாயை தற்கொலைக்கு தூண்டிய 10 பேர் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்களில் குலசேகரன், பிரபு, ஜெயக்குமார், ஜெகநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற 6 பேரை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியபட்டியைச் சேர்ந்தவர் சின்னத்தாய் (வயது 60). இவரது மகன் செல்லப்பாண்டி (40). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி இருந்தார்.
உரிய காலத்தில் கடன் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாததால் கடன் கொடுத்தவர்கள் செல்லப்பாண்டிக்கு நெருக்கடி கொடுத்தனர். மேலும் கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த செல்லப்பாண்டி சில நாட்களுக்கு முன்பு தலைமறைவானார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் செல்லப்பாண்டியின் தாயார் சின்னத்தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்துள்ளனர். மேலும் தரக் குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடன்காரர்களின் தொந்தரவால் விரக்தியடைந்த சின்னத்தாய் இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பாண்டி விசாரணை நடத்தி சின்னத்தாயை தற்கொலைக்கு தூண்டிய 10 பேர் மீது கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்களில் குலசேகரன், பிரபு, ஜெயக்குமார், ஜெகநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற 6 பேரை தேடி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X