என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இளம்பெண் ஏமாற்றம்"
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த செம்போடையை சேர்ந்த பழனி என்பவர் மகள் சரஸ்வதி (வயது 21). இவருக்கும், கத்தரிப்புலத்தை சேர்ந்த வேணுகோபால் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சரஸ்வதி கணவரை பிரிந்து கடந்த 3 ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இதற்கிடையே சரஸ்வதிக்கும், செம்போடையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் செல்வகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் நெருங்கி பழகி வந்த நிலையில் செல்வகுமாருக்கும், அவரது உறவு பெண்ணுக்கும் திருமண நிச்சயம் செய்துள்ளனர்.
இதுபற்றி அறிந்த சரஸ்வதி தன்னை திருமணம் செய்வதாக ஆசைகாட்டி செல்வகுமார் ஏமாற்றிவிட்டதாக வேதாரண்யம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பின்னர் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுதொடர்பாக வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் வர்ஜினியா வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்