search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தூண்டில் வளைவு அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்
    X

    தந்திராயன்குப்பம் மீனவ பகுதியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பார்வையிட்ட காட்சி.

    தூண்டில் வளைவு அமைக்கும் பணி விரைவில் தொடங்கும்

    • அமைச்சர் பொன்முடி உறுதி
    • தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள மீனவர் கிராமங்களை பார்வை யிட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே நடுக்குப்பம் மீனவ கிராம மக்கள் தூண்டில் வளைவு அமைக்க கோரி இன்று காலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள மீனவர் கிராமங்களை பார்வை யிட்டார்.

    பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    நடுக்குப்பம் மீனவ பகுதி மக்களின் கோரிக்கையான தூண்டில் வளைவு ஏற்க னவே முதல்-

    அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மீனவ பகுதிகளில் விரைவில் தூண்டில் வளைவு அமைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×