என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மீன் அங்காடியில் குவிந்த அசைவ பிரியர்கள்
- பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் விரதம் இருந்த பெரும்பாலான இந்துக்கள் அசைவம் சாப்பிடவில்லை.
- புரட்டாசி முடிந்து அதிகளவில் மக்கள் வருவார்கள் என்பதால் மீன், இறால், நண்டு, கணவாய் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் விரதம் இருந்த பெரும்பாலான இந்துக்கள் அசைவம் சாப்பிடவில்லை.
தற்போது புரட்டாசி முடிந்து முதல் ஞாயிற்றுகிழமை என்பதால் நகரின் மையத்தில் உள்ள குபேர் மீன் அங்காடியில் அதிக அளவில் மீன் வந்துள்ளது.அசைவ பிரியர்கள் காலை 6 மணி முதலே அங்காடிக்கு வந்து மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுகளை வாங்கினர்.
புரட்டாசி முடிந்து அதிகளவில் மக்கள் வருவார்கள் என்பதால் மீன், இறால், நண்டு, கணவாய் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வஞ்சிரம் மீன் ரூ.300 முதல் ரூ.800 வரையிலும், வவ்வால் ரூ.400 முதல் ரூ.600 வரையிலும், நண்டு ரூ.200 முதல் ரூ.400 வரையிலும், இறால் கிலோ ரூ.200 எனவும் விற்கப்படுகிறது.
கடந்த மாதத்தை விட அனைத்தும் கூடுதல் விலையில் விற்கப்பட்டது. இதேபோல் சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்