search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மீன் அங்காடியில் குவிந்த அசைவ பிரியர்கள்
    X

    குபேர் மீன் அங்காடியில் குவிந்த அசைவ பிரியர்களை படத்தில் காணலாம்.

    மீன் அங்காடியில் குவிந்த அசைவ பிரியர்கள்

    • பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் விரதம் இருந்த பெரும்பாலான இந்துக்கள் அசைவம் சாப்பிடவில்லை.
    • புரட்டாசி முடிந்து அதிகளவில் மக்கள் வருவார்கள் என்பதால் மீன், இறால், நண்டு, கணவாய் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    புதுச்சேரி:

    பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் விரதம் இருந்த பெரும்பாலான இந்துக்கள் அசைவம் சாப்பிடவில்லை.

    தற்போது புரட்டாசி முடிந்து முதல் ஞாயிற்றுகிழமை என்பதால் நகரின் மையத்தில் உள்ள குபேர் மீன் அங்காடியில் அதிக அளவில் மீன் வந்துள்ளது.அசைவ பிரியர்கள் காலை 6 மணி முதலே அங்காடிக்கு வந்து மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுகளை வாங்கினர்.

    புரட்டாசி முடிந்து அதிகளவில் மக்கள் வருவார்கள் என்பதால் மீன், இறால், நண்டு, கணவாய் போன்றவை அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வஞ்சிரம் மீன் ரூ.300 முதல் ரூ.800 வரையிலும், வவ்வால் ரூ.400 முதல் ரூ.600 வரையிலும், நண்டு ரூ.200 முதல் ரூ.400 வரையிலும், இறால் கிலோ ரூ.200 எனவும் விற்கப்படுகிறது.

    கடந்த மாதத்தை விட அனைத்தும் கூடுதல் விலையில் விற்கப்பட்டது. இதேபோல் சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    Next Story
    ×