search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கூடோ தற்காப்பு கலை போட்டி புதுவை வீரர்கள் குஜராத் பயணம்
    X

    மாநில கூடோ சங்க தலைவர் வளவன் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்த காட்சி. 

    கூடோ தற்காப்பு கலை போட்டி புதுவை வீரர்கள் குஜராத் பயணம்

    • பாகூர் பாலச்சந்தர், செந்தில் வேல், பிரவின் குமார் உட்பட 25பேர் கொண்ட குழுவினர் பங்கேற்கின்றனர்.
    • கூடோ சங்க தலைவர் வளவன் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

    புதுச்சேரி:

    குஜராத் மாநிலம் சூரத்தில் தேசிய அளவிலான கூடோ தற்காப்பு கலை போட்டி நாளை (புதன்கிழமை) தொடங்கி 29-ந் தேதிவரை நடைபெறுகிறது.

    இப்போட்டியில் புதுவை மாநில அணி சார்பில் புதுவை கூடோ சங்க பொதுச்செயலாளர் சந்தோஷ் குமார் தலைமையில் காலாப்பட்டு செல்வம், பாகூர் பாலச்சந்தர், செந்தில் வேல், பிரவின் குமார் உட்பட 25பேர் கொண்ட குழுவினர் பங்கேற்கின்றனர். இவர்களை வழிய அணுப்பும் விழா புதுவை பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி மாநில கூடோ சங்க தலைவர் வளவன் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ராஜ், மூத்த பயிற்சியாளர்கள் ஆறுமுகம், அசோக், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டன

    Next Story
    ×