search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
    X

    மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

    மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் ஆனி ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது. நாளை (21-ந் தேதி) பாலாபிஷேகம் நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவில் ஆனி ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது. 2-வது நாளான இன்று (புதன் கிழமை) இரவு முதல் ஆனி உத்திரம் நடைபெறுகிறது. நாளை (21-ந் தேதி) பாலாபிஷேகம் நடக்கிறது.

    இது குறித்து கோவில் இணை ஆணையர் நட ராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் மாதமான ஆனியில் மக நட்சத்திரம் முதலாக மூல நட்சத்திரம் வரையில் 10 நாட்கள் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய உற்சவம் வருகிற 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. இன்று (20-ந் தேதி) இரவு முதல் ஆனி உத்திரம் தொடங்குகிறது.

    நாளை (வியாழக்கிழமை) மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோவிலின் பழைய திருக் கல்யாண மண்டபத்தில் பாலாபிஷேகம் நடை பெறும். இரவு பஞ்சமூர்த்தி கள் ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள்.

    நாளை அதிகாலை பஞ்ச சபை நடராஜர்-சிவகாமி அம்மனுக்கும், பிரதான கால்மாறி ஆடும் நடராஜர்- சிவகாமி அம்மனுக்கும் கோவிலின் 6 கால் பீடத்தில் பாலாபிஷேகம் நடைபெறும்.

    இதர 4 சபை நடராஜர்- சிவகாமி அம்மனுக்கு சுவாமி சன்னதி 100 கால் மண்டபத்தில் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும். கால பூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர்-சிவகாமி அம்மன் மாசி வீதிகளில் வலம் வந்து அருள் பாலிப் பார்கள்.

    திருவிழாவில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் திரவிய பொருட்களை கோவில் உள்துறை அலுவலகத்தில் நாளை முதல் பக்தர்கள் வழங்கலாம்.

    வருகிற 27-ந் தேதி அரு ளாளர் அருணகிரிநாதர் ஜெயந்தி நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆவணி மூல வீதிகளில் அருணகிரிநாதர் புறப்பாடு நடைபெறும்.

    ஆனி மாத பவுர்ணமி அன்று (28-ந் தேதி) உச்சிகால வேலையில் மூலஸ்தான சொக்கநாதருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெறும்.

    இந்த அபிஷேகத்திற்கு பின்னர் சித்திரை வீதிகளில் சுவாமி, குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளுவார்.

    ஆனி ஊஞ்சல் உற்சவ திருநாள் தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை கோவில் சார்பிலோ, உபயதாரர் சார்பிலோ திருக்கல்யாணம் மற்றும் தங்க ரத உலா ஆகியவை நடத்த இயலாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×