என் மலர்
அமெரிக்கா
- பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
- வரி விதிப்பு என்பது அமெரிக்காவை மீண்டும் பணக்கார மற்றும் சிறந்த நாடாக மாற்றும்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவி யேற்றார். அவர் பதவி யேற்றபின் முதல் முறையாக பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
அமெரிக்காவின் பொற் காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம். 6 வாரங்களில் 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டேன். 400-க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து உள்ளேன்.
நான் பதவியேற்ற சில மணி நேரங்களில் நாட்டின் தெற்கு எல்லையில் தேசிய அவசரநிலையை அறிவித்தேன். சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க ராணுவம் மற்றும் எல்லை ரோந்துப் படையினரை அங்கு நிறுத்தினேன்.
இதன் காரணமாக கடந்த மாதம் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபரான ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ், ஒரு மாதத்தில் லட்சக்கணக்கானோர் சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்தனர்.
அமெரிக்கா மீது நியாயமற்ற வரிகள் விதிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக அதிக வரிகளைப் விதித்து வருகின்றன. தற்போது அந்த நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்கும் நேரம் இது.
ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக கட்டணங்களை நம்மி டம் வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது.
அமெரிக்காவிடம் இந்தியா வாகன வரி 100 சதவீதம் வசூலிக்கிறது. இது அமெரிக்காவிற்கு நியாயமில்லை.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக ஏப்ரல் 2-ந்தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்குகிறது. மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி விதித்தாலும், அதே வரியை அவர்களுக்கு விதிப்போம்.
பொருளாதாரத்தை மீட்டெடுக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வரி விதிப்பு என்பது அமெரிக்காவை மீண்டும் பணக்கார மற்றும் சிறந்த நாடாக மாற்றும்.
அமெரிக்க கனவு தடுக்க முடியாதது. நமது நாடு மீண்டு வருவதற்கான விளிம்பில் உள்ளது. எலான் மஸ்க் தலைமையிலான அரசாங்க திறன் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ரஷியா- உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அயராது பணியாற்றி வருகிறோம். உக்ரைனில் அமைதியை கொண்டு வரும் நோக்கத்துடன் உள்ளோம். அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
டிரம்ப் உரையாற்றியபோது எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். டிரம்ப் ஒவ்வொரு விவகாரம் பற்றி பேசும்போதும், "பொய்" என்று எழுதப்பட்ட பதாகையை காண்பித்தனர்.
- வெடிகுண்டு வைத்து கிங்டா கா உல்லாச சவாரி எந்திரம் தகர்க்கப்பட்டது.
- 2 கோடிக்கும் அதிகமானோர் சவாரி மேற்கொண்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் தனியார் கேளிக்கை பூங்கா ஒன்று செயல்படுகிறது. அங்கு சுமார் 450 அடி உயரமுள்ள கிங்டா கா என்ற ரோலர் கோஸ்டர் இருந்தது.
உலகின் மிக உயரமான உல்லாச சவாரி எந்திர இருந்த கிங்டா கா அந்த பகுதியின் மிகப்பெரும் அடையாளமாக இருந்தது. ஆனால் தற்போது அதன் ஆயுட்காலம் முடிவுக்கு வந்தது. எனவே அதனை அகற்றி விட்டு புதிய உல்லாச சவாரி எந்திரத்தை அமைக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது.
இதனால் வெடிகுண்டு வைத்து கிங்டா கா உல்லாச சவாரி எந்திரம் தகர்க்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இதில் 2 கோடிக்கும் அதிகமானோர் சவாரி மேற்கொண்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- அண்டை மாகாணமான தென் கரோலினாவின் ஹோரி, ஸ்பார்டன்பர்க், ஓகோனி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் தீ பரவியது.
- தீயை அணைப்பதற்காக ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அடுத்தடுத்து அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் பரவின.
இதனால் அண்டை மாகாணமான தென் கரோலினாவின் ஹோரி, ஸ்பார்டன்பர்க், ஓகோனி உள்ளிட்ட பல நகரங்களுக்கும் தீ பரவியது.
இதற்கிடையே தீயை அணைக்கும் பணியில் 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் களமிறங்கினர். ஆனால் அதனை சுற்றியுள்ள 175 இடங்களில் தீ பரவியது.
இதில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகின. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எனவே வட கரோலினா மாகாண கவர்னர் ஹென்றி மெக்மாஸ்டர் அங்கு அவசர நிலை அறிவித்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக நடைபெறும் பணியில் இதுவரை 30 சதவீதம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக பேரிடர் மீட்பு துறை தெரிவித்துள்ளது. எனவே தீயை அணைப்பதற்காக ஏராளமான ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
- அமெரிக்காவில் 350க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன
- அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழி அமெரிக்க ஆங்கிலம் என்று அழைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டார்.
ஃபெடரல் அரசு நிர்வாகம் மற்றும் அரசிடம் நிதி பெறும் அமைப்புகள், பிற மொழி பேசுபவர்களுக்கு உரிய மொழிபெயர்ப்பு உதவிகளை வழங்க வேண்டும் என 90களில் அதிபர் கிளிண்டன் பிறப்பித்த உத்தரவு இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது. இனிமேல், மொழிபெயர்ப்பு உதவி வழங்குவது அந்தந்த அமைப்புகளின் முடிவுக்கு உட்பட்டது.
உலக அளவில் ஆங்கிலத்தை முதல் மொழியாகப் பேசுவோரில் 3-ல் 2 பங்கினர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழி அமெரிக்க ஆங்கிலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு மாதிரியான ஆங்கிலம் தான் பேசப்பட்டது. பின்னர் காலபோக்கில் ஆங்கில ஒலிப்பு முறை மற்றும் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது.
அமெரிக்காவில் 350க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன, ஆனாலும் வெள்ளை மாளிகை ஆவணங்களில் எப்போதும் ஆங்கிலம் மட்டுமே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- டிரம்புடனான மோதல் விவகாரத்தில் ஜெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
வாஷிங்டன்:
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா போர் தொடுத்தது.
போரில் உக்ரைனுக்கு ஆதரவாக இருந்து வந்த அமெரிக்கா ஆயுதங்கள், ராணுவ உதவிகளை செய்து வந்தது. அதேபோல் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளும் ஆதரவு அளித்தன. இதற்கிடையே அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், உக்ரைன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகினார். ரஷியாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார். இந்த விவகாரத்தில் டிரம்ப்-ஜெலன்ஸ்கி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.
இதற்கிடையே டிரம்ப்-ஜெலன்ஸ்கி நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமங்களை அமெரிக்கா எடுத்து கொள்வது தொடர்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு சென்றார்.
அப்போது வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் கேட்ட கேள்வியால் அதிருப்தி அடைந்த ஜெலன்ஸ்கி தனது கருத்தை தெரிவித்தபோது டிரம்ப் குறுக்கிட்டு அவரை கண்டித்தார். மேலும் வான்சும் கண்டிக்கும் வகையில் பேசினார்.
ரஷியாவுடன் போர் நிறுத்தத்தை டிரம்ப் வலியுறுத்திய நிலையில் அதை ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்தார். இதையடுத்து இந்த சந்திப்பு பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது. மேலும் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலன்ஸ்கி வெளியேறினார்.
சர்வதேச ஊடகங்கள் மத்தியில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி இடையே நடந்த வாக்குவாதம், போரின் திசையை மாற்றி விடும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்புடனான மோதல் விவகாரத்தில் ஜெலன்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆதரவு மிகவும் முக்கியம் என்றே கருதப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு அளிக்கப்பட்டு வரும் அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்த அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, போரில் உக்ரைனுக்கு அனுப்பப்பட காத்திருக்கும் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பு உள்ள ரேடார்கள், வாகனங்கள், வெடிமருந்துகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத உதவிகள் விநியோகத்தை நிறுத்தும் முடிவு தொடர்பாக ஆலோசனை நடந்து வருகிறது என்றார். இந்த தகவலை வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே டிரம்ப் அதிபராக பதவியேற்றதும் வெளிநாடுகளுக்கான நிதி உதவிகளை நிறுத்தவும் உத்தரவிட்டார். இதற்கிடையே உக்ரைனுக்கான அனைத்து ராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தும் பட்சத்தில் அது போரில் உக்ரைனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது. உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவினாலும் அமெரிக்காவை போல் ஆயுதங்களை வழங்க முடியுமா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இதற்கிடையே டிரம்ப்-ஜெலன்ஸ்கி மோதல் விவகாரத்தில் நேட்டோ அமைப்பு சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்து உள்ளது. டிரம்புடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டாம் என்று ஜெலன்ஸ்கியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே கூறும் போது, அமெரிக்க அதிபர் டிரம்புடனான உறவை மீட்டெடுக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் நான் கூறியுள்ளேன். டிரம்ப் இதுவரை உக்ரைனுக்குச் செய்த உதவியை ஜெலன்ஸ்கி உண்மையில் மதிக்க வேண்டும்.
டிரம்ப்-ஜெலன்ஸ்கி இடையேயான சந்திப்பில் நடந்த விஷயம் துரதிர்ஷ்டவசமானது. உக்ரைன் ரஷியாவுடன் அமைதியைப் பெறுவதை உறுதி செய்வதில் அமெரிக்க நிர்வாகம் ஈடுபட்டுள்ளதை நான் அறிவேன் என்றார்.
அதேபோல் இந்த விவகாரத்தில் சமரசத்தை ஏற்படுத்த நேட்டோ நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்த நிலையில் லண்டனில் இன்று ஐரோப்பிய தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.
இதன்மூலம் எதிர்கால அமைதி ஒப்பந்தத்தைப் பெற ஐரோப்பிய தலைவர்கள், உதவுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்தார்.
உக்ரைன்-ரஷியா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதும் தெரிவித்து இருந்தார். இதற்கான முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டார்.
இந்த நிலையில் ஜெலன்ஸ்கியுடன் மோதலால் இந்த போரின் அடுத்தக்கட்ட நகர்வு எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு உலக நாடுகளிடையே நிலவி வருகிறது.
- சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அதிபர் டிரம்ப்
- அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்கிடையே, அமெரிக்கா-மெக்சிகோ எல்லை பாதுகாப்புக்காக 10,000 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டனர். ஏற்கனவே பணியில் உள்ள வீரர்களுடன் இணைந்து எல்லையில் ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள் என பென்டகன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், தனது பிரச்சாரத்தின் முக்கிய வாக்குறுதியை நிறைவேற்றவும் முயல்வதால் அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு சுமார் 3,000 ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக பென்டகன்
தெரிவித்துள்ளது.
- ஜெலன்ஸ்கியால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது.
- ரஷியாவுடனான போரில் உக்ரைன் வெற்றி பெறாது.
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார்.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். மேலும் உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்காவை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் இருதலைவர்களும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் பதிலுக்கு பதில் பேசி கொண்டே இருந்தனர். இதில் ஜெலன்ஸ்கி மீது டிரம்ப் பல குற்றச்சாட்டுகளை கூறினார்.
டிரம்ப் கூறும்போது, "நீங்கள் பெரிய சிக்கலில் இருக்கிறீர்கள். இதில் நீங்கள் வெற்றி பெற போவதில்லை. நீங்கள் லட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள். 3-ம் உலகப் போரோடு விளையாடுகிறீர்கள். நீங்கள் செய்வது நாட்டிற்கு மிகவும் அவமரியாதையானது.
உங்களிடம் போதுமான ராணுவம் இல்லை. உங்களுக்காக 350 பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவு செய்தது. உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டார்கள். இல்லையென்றால் போர் 2 வாரத்தில் முடிந்திருக்கும். நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும். ஆனால் எங்கள் நாட்டிற்கு அவமரியாதையை காட்டுகிறீர்கள். உங்களால் போரில் வெற்றி பெற முடியாது என்று எனக்கு தெரியும்.
நீங்கள் இப்படி நடந்து கொண்டால் அமைதி ஒப்பந்தத்தை மிகவும் கடினமாக்கும் என்று நான் பயப்படுகிறேன். நீங்கள் தனியாக செல்ல எந்த வாய்ப்பும் உங்களிடம் இல்லை. மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் வீரர்கள் குறைவாக உள்ளனர். ஆனால் நீங்கள் எனக்கு போர் நிறுத்தம் வேண்டாம். நான் தொடர்ந்து போராட விரும்புகிறேன்' என்று எங்களிடம் கூறுகிறீர்கள்.
உயிர்கள் இழக்கப்படாமல் இருக்க போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். ஆனால் நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை. நான் புதினுடன் இணையவில்லை., நான் யாருடனும் இணைய வில்லை. நான் அமெரிக்காவுடன் இணைந்திருக்கிறேன்.
நீங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள் அல்லது நாங்கள் வெளியேறி விடுவோம்" என்று தெரிவித்தார்.
ஜெலன்ஸ்கி கூறும் போது, "நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் இருக்கிறோம். இவ்வளவு காலமாக நாங்கள் வலுவாக இருந்தோம். நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவித்தோம். போரின் போது, அனைவருக்கும் பிரச்சினைகள் உள்ளன. உங்களுக்கும் கூட பிரச்சினை உள்ளன. இப்போது அதை உணர மாட்டீர்கள், ஆனால் எதிர்காலத்தில் நீங்கள் உணருவீர்கள்" என்று கூறினார்.
ஆனால் ஜெலன்ஸ்கி பேசியபோது டிரம்பும், துணை அதிபர் வான்சும் குறுக்கிட்டு பேசி கொண்டே இருந்தனர். இதில் இருவரும் சத்தமாக பேசினார். அப்போது வான்சிடம் ஜெலன்ஸ்கி, சத்தமாக பேசுவதை நிறுத்துமாறு கேட்டும் கொண்டார்.
இதனால் வான்ஸ் - ஜெலன்ஸ்கி இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பேச்சு வார்த்தையை பாதியில் டிரம்ப் முடித்துக் கொண்டு எழுந்தார். இதனால் இந்த சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் பாதியில் முடிந்தது. வெள்ளை மாளிகைக்கு செல்லுமாறு ஜெலன்ஸ்கி கேட்டு கொள்ளப்பட்டார். உடனே அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதன் காரணமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியும், மதிய விருந்து நிகழ்ச்சியும் நடைபெறவில்லை.
இந்த சந்திப்பு தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறும் போது, உக்ரைன் அதிபா் ஜெலன்ஸ்கி அமைதிக்குத் தயாராக இல்லை. அவரது செயல் அவமதிப்பாகும். அவர் அமைதியைக் கொண்டு வருவதற்குத் தயாராக இருந்தால், நான் மீண்டும் பேச்சுவாா்த்தைக்கு வரத் தயாராக உள்ளேன் என்றார்.
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய பிறகு ஜெலன்ஸ்கி கூறும்போது, "டிரம்பிடம் நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. அமெரிக்காவின் நடவடிக்கை இரு தரப்பினருக்கும் நல்லதல்ல. தாக்குதலுக்கு எதிராக பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை உக்ரைன் ரஷியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடாது என்றார்.
.
- உக்ரைன்-ரஷியா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
- உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
வாஷிங்டன்:
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார்.
ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். மேலும் உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. அமெரிக்கா செல்லும் ஜெலன்ஸ்கி கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்து போட சம்மதம் தெரிவித்தார். அப்போது ரஷியாவுக்கு எதிரான போரில் அனைத்து உதவிகளையும் அமெரிக்காவிடம் இருந்து கேட்டுப் பெற திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் உற்சாகமாக வரவேற்றார்.
- இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அதிபர் டிரம்பை இன்று சந்தித்தார்.
- மன்னர் சார்லஸ் சார்பாக அதிபர் டிரம்பிற்கு அரசுமுறை பயணத்துக்கு அழைப்பு விடுத்தார்.
வாஷிங்டன்:
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் அதிபர் டிரம்பைச் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்பை இன்று சந்தித்தார். அப்போது, மன்னர் சார்லஸ் சார்பாக அதிபர் டிரம்பிற்கு அரசுமுறை பயணத்துக்காக அழைப்பு விடுத்தார். கெய்ர் ஸ்டார்மரின் இந்த அழைப்பினை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.
ரஷிய அதிபர் புதின் உக்ரைனுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில் உக்ரைனுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என அதிபர் டிரம்பிடம் ஸ்டார்மர் அழுத்தம் கொடுப்பார் என கூறப்படுகிறது.
- உக்ரைன்-ரஷியா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
- உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
வாஷிங்டன்:
உக்ரைன்-ரஷியா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷிய அதிபர் புதினுடன் தொலைபேசியில் உரையாடினார்.
ரஷியா போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதி உதவிகளுக்கு பதிலாக உக்ரைனில் உள்ள அரிய வகை கனிம வளங்களை வெட்டி எடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு கால வரம்பில்லாமல் வழங்க டிரம்ப் வலியுறுத்தி வந்தார். உக்ரைனில் தேர்தல் நடத்தாமல் ஜெலன்ஸ்கி பதவியில் நீடிப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே, அமெரிக்கா செல்லும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுடன் கனிம வள ஒப்பந்தத்தில் கையெழுத்து போட சம்மதம் தெரிவித்துள்ளார்.
அப்போது, ரஷியாவுக்கு எதிரான போரில் அனைத்து உதவிகளையும் அமெரிக்காவிடம் இருந்து கேட்டுப் பெற திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாளை அமெரிக்கா வருகிறார் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெற அனுமதிக்கும் "EB-5" இமிக்ரன்ட் விசாவை ஒழிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
- கோல்டன் கார்டு திட்டத்தின்மூலம் அமெரிக்காவின் கடன் சுமை குறையும் என்பது அவரது கருத்து.
அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், வெளிநாட்டில் இருந்து அங்கு குடியேறுபவர்கள் மீது கடுமையான போக்கை கொண்டுள்ளார்.
ஆவணமின்றி சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை நாடு கடத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் மறுபுறம் தொழில்நுபட்பத்துறைக்கு திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு வேண்டும் என்பதால் HB1 வேலை விசாவை டிரம்ப் ஆதரித்து பேசினார்.
இதற்கிடையே அமெரிக்காவில் தொழில் மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெற அனுமதிக்கும் "EB-5" இமிக்ரன்ட் விசாவை ஒழிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

EB-5 விசாவுக்கு பதிலாக அமெரிக்காவுக்கு குடியேறும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பணக்கார வெளிநாட்டவருக்காக டிரம்ப் தங்க அட்டை திட்டத்தை அறிவித்துள்ளார். கோல்டன் கார்டு எனப்படும் இது நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்டு -ஐ ஒத்தது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பேட்டி அளித்த டிரம்ப், "நாங்கள் ஒரு தங்க அட்டையை விற்கப் போகிறோம். அந்த அட்டைக்கு 5 மில்லியன் டாலர்(சுமார் 43 கோடி ரூபாய்) விலையை நிர்ணயம் செய்யப் போகிறோம்" என்று கூறினார். இந்த கோல்டன் கார்டு திட்டத்தின்மூலம் அமெரிக்காவின் கடன் சுமை குறையும் என்பது அவரது கருத்து.
டிரம்ப் அரசின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறுகையில், தங்க அட்டை உண்மையில் ஒரு வகையான கிரீன் கார்டாக இருக்கும்.
டிரம்பின் இந்த புதிய ''கோல்டன் கார்டு' திட்டம் தற்போதுள்ள EB-5 திட்டத்தை மாற்றப் போகிறது. இதன் மூலம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்க வணிகங்களில் முதலீடு செய்வதன் மூலம் கிரீன் கார்டு பயன்களை பெற முடியும். 'கோல்டன் கார்டு' மூலம் பெறப்படும் பணம் நேரடியாக அரசாங்கத்திற்குச் செல்லும் என்று தெரிவித்தார்.
- உண்மையான ராஜா வாழ்க என எழுதப்பட்டு இருக்கிறது.
- இந்த வீடியோ மிக வேகமாக வைரல் ஆனது.
அமெரிக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை (HUD) அலுவலகங்களில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எலான் மஸ்க்-இன் கால்களை முத்தமிடும் வீடியோ ஒளிபரப்பானதால் பரபர சூழல் உருவானது. ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட அந்த வீடியோவின் மீது "உண்மையான ராஜா வாழ்க" என எழுதப்பட்டு இருக்கிறது.
இந்த வீடியோவை உருவாக்கியது யார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. மேலும் அரசு அலுவலக தொலைகாட்சியில் இந்த வீடியோ ஒளிபரப்பானது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிலர் இணைய சேவைகள் ஹேக் செய்யப்பட்டு வீடியோ ஒளிபரப்பப்பட்டு இருக்கலாம் என்று கூறுகின்றனர். வெறும் எட்டு நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ மிக வேகமாக வைரல் ஆனது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த HUD துறை செய்தித் தொடர்பாளர் கேசி லொவெட், "வரி செலுத்துவோர் பணம் மற்றும் நேரம் வீண்விரயமானது. இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.






