என் மலர்
உலகம்

இந்தியா வரும் எலான் மஸ்க்.. மோடியுடன் பேசிய பின் உறுதி - வியாபாரத்தை விரிவுபடுத்த தீவிரம்
- நேற்று பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் போனில் உரையாடினார்.
- அமெரிக்காவுடனான கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது.
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், டொனால்டு டிரம்ப் உடைய அரசின் செயல்திறன் துறை தலைவராக உள்ளார். தனது ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றை இந்திய சந்தைகளுக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர ஆவலுடன் உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் போனில் உரையாடிய நிலையில், இந்தியா வருவதற்கான தனது விருப்பத்தை இன்று மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார்.
"பிரதமர் மோடியுடன் பேசுவது ஒரு மரியாதை. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர நான் ஆவலுடன் உள்ளேன்!" என்று மஸ்க் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
மஸ்க் உடன் பேசியது குறித்து மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"எலான் மஸ்க் உடன் பேசினேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் வாஷிங்டன் டிசியில் எங்கள் சந்திப்பில் நிகழ்ந்து போலவே, நாங்கள் தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறைகளில் ஒத்துழைப்புக்கான மகத்தான ஆற்றலைப் பற்றி நாங்கள் விவாதித்தோம்.
இந்த துறைகளில் அமெரிக்காவுடனான கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது" என்று தெரிவித்தார்.






