என் மலர்
அமெரிக்கா
- அதிக வரிகளால் இந்தியாவில் அமெரிக்க பொருட்களையும் விற்க முடியாத சூழல் உள்ளதக டிரம்ப் குற்றசாட்டு
- கனடா நாடு அமெரிக்காவின் பால் பொருட்களுக்கு 250 சதவீதம் வரை வரி விதிக்கிறது.
அமெரிக்கா மீது இந்தியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகள் அதிக வரி விதிக்கிறது என்றும் இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதையடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு ஏப்ரல் 2-ந்தேதி முதல் தொடங்கும் என்று சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்கா மீதான வரிகளை குறைக்க இந்தியா சம்மதித்துள்ளது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்..
வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
இந்தியா எங்களிடம் மிகப்பெரிய அளவில் வரிகளை வசூலிக்கிறது. இதனால் இந்தியாவில் எந்த பொருட்களையும் விற்க முடியாத சூழல் உள்ளது. தற்போது இந்தியா தனது வரிகளை குறைத்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது.
இதன்மூலம் அவர்கள் என்ன செய்தார்களோ அதை அம்பலப்படுத்தி உள்ளனர். பதிலுக்கு பதில் வரி விதிப்பதாக கூறிய நிலையில் இந்தியா வரிகளை குறைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.
கனடா நாடு அமெரிக்காவின் பால் பொருட்களுக்கு 250 சதவீதம் வரை வரி விதிக்கிறது. இதை ஏற்கவே முடியாது. யாரும் அதனை பேசவே இல்லை. இனி இதுபோல் நடக்கவே கூடாது. அவர்கள் எவ்வளவு வரி விதிக்கிறார்களோ அதேபோல் நாமும் வரி விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
இதற்கிடையே இந்தியா தனது விவசாய வர்த்தகத்தை இறக்குமதிகளுக்கு திறந்து விட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக ராணா அறிவிக்கப்பட்டார்.
- மற்றொரு பயங்கரவாத வழக்கில் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
வாஷிங்டன்:
2008 மும்பை பயங்கரவாத தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் வம்சாவளி தஹாவூர் ராணா என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராணா மற்றொரு பயங்கரவாத வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்காவிடம் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதையேற்று ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் கடந்த ஜனவரி மாதம் அனுமதி வழங்கியது. இதனால் ராணா விரைவில் நாடு கடத்தப்படுவார் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்தது.
இதற்கிடையே, தான் நாடு கடத்தப்படுவதற்கு தடை விதிக்கக்கோரி அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் ராணா நேற்று முன்தினம் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், என்னை நாடு கடத்துவது அமெரிக்க சட்டங்களுக்கு எதிரானது. முக்கியமாக சித்தரவதைகளுக்கு எதிரான அமெரிக்க விதிகள் மீறப்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவில் என்னை கொடுமைப்படுத்த வாய்ப்புள்ளது. எனக்கு தீவிரமான உடல்நல பிரச்சனைகளும் உள்ளன. இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் மருத்துவ உதவிகள் மறுக்கப்படும். இது மரண தண்டனைக்கு நிகரா–னது என குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், ராணாவின் இந்த அவசர மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன்மூலம் ராணாவின் கடைசி முயற்சியும் தோல்வியில் முடிந்தது. எனவே விரைவில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் ஜெர்மனி வீரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.
இதில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நெதர்லாந்தின் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.
முதல் செட்டை 6-4 என வென்ற ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 6-7 (5-7), 6-7 (4-7) என இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடரில் இருந்து ஸ்வரேவ் வெளியேறினார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் பிரிட்டிஷ் வீராங்கனை தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் பிரிட்டிஷ் வீராங்கனையான எம்மா ராடுகானு, ஜப்பானின் மோயூகா உசிஜிமா உடன் மோதினார்.
இதில் எம்மா ராடுகானு 3-6, 2-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஏனென்றால் நாம் மற்றொரு அணு ஆயுதத்தை அனுமதிக்க முடியாது
- டிரம்பின் கடிதம் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
அணுஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரானுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். "நீங்கள்(ஈரான்) பேச்சுவார்த்தை நடத்துவீர்கள் என்று நம்புகிறேன், ஏனென்றால் அது ஈரானுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்" என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஃபாக்ஸ் பிஸ்னஸ் நெட்வொர்க்குக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, "அவர்கள்(ஈரான்) அந்தக் கடிதத்தைப் பெற விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.
நாம் ஏதாவது செய்ய வேண்டும், ஏனென்றால் நாம் மற்றொரு அணு ஆயுதத்தை அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்தார். ஈரானின் அணு சக்தி கட்டமைப்பு இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்கி வரும் சூழலில் டிரம்ப் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
டிரம்பின் கடிதம் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து வெள்ளை மாளிகை விரிவான விளக்கத்தை வெளியிடவில்லை.
இதற்கிடையே ஈரானின் அணுசக்தி திட்டத்தைச் சுற்றியுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கான சர்வதேச முயற்சிகள் குறித்து ரஷிய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், ஈரானிய தூதர் காசெம் ஜலாலியுடன் விவாதித்ததாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அனைத்தையும் கழற்றிவிட்டு நிர்வாண நிலையில் சத்தமாக கத்த ஆரம்பித்தார்.
- சுமார் 25 நிமிடங்கள் அப்பெண் விமானத்தில் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருந்தார்.
விமானத்தில் பெண் பயணி ஒருவர் ஆடைகளை கழற்றி கத்தியபடி நிர்வாணமாக 25 நிமிடங்கள் உள்ளேயே ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை, அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து பீனிக்ஸ் நோக்கி சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் 733 புறப்பட்டது. 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது பெண் பயணி ஒருவர் திடீரென கேபினுக்கு அருகில் சென்று, விமானத்திலிருந்து இறங்க வேண்டும் என்று விமான ஊழியர்களிடம் கூறியுள்ளார்.
ஆனால் விமான ஊழியர்கள் அதற்கு மறுக்கவே, அந்தப் பெண் தன் உடைகள் அனைத்தையும் கழற்றிவிட்டு நிர்வாண நிலையில் சத்தமாக கத்த ஆரம்பித்தார்.
அந்தப் பெண்ணின் செயல்கள் முழு விமானத்திலும் பரபரப்பை ஏற்படுத்தின. சுமார் 25 நிமிடங்கள் அப்பெண் விமானத்தில் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் விமானியின் அறைக் கதவை உதைக்க ஆரம்பித்தார். விமான ஊழியர்கள் அந்தப் பெண்ணை ஒரு போர்வையால் மூட முயன்றனர். ஆனால் அவர் அமைதியடையவில்லை. இறுதியில், விமானி விமானத்தை மீண்டும் தரையிறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
விமானம் மீண்டும் தரையிறங்கியவுடன் ஹூஸ்டன் போலீசார் அந்தப் பெண்ணைக் காவலில் எடுத்து மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பினர். இருப்பினும், அவர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பயணிகளிடம் ஏற்பட்ட சிரமத்திற்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டு, பயணிகளுக்கு 50 டாலர் பயண வவுச்சரை வழங்கியுள்ளது.
- ராக்கெட்டின் எஞ்சின்கள் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் செயலிழந்தன.
- தரைவழி போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக ஃபெடரல் ஏவியேஷன் தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறிய சம்பவம் அரங்கேறியுள்ளது. ராக்கெட் ஏவுதலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நேரலையில் ஒளிபரப்பியது. நேரலை காட்சிகளின் படி ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் எஞ்சின்கள் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களில் செயலிழந்தன.
இதையடுத்து தெற்கு ஃபுளோரிடா மற்றும் பஹாமஸ் அருகில் உள்ள வான்பகுதியில் ராக்கெட் வெடித்து சிதறியது. இதன் காரணமாக மியாமி, ஃபோர்ட் லாடர்டேல், பாம் பீச் மற்றும் ஆர்லாண்டோ விமான நிலையங்களின் தரைவழி போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக ஃபெடரல் ஏவியேஷன் தெரிவித்துள்ளது.
ராக்கெட் வெடித்து சிதறிய சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ், "ராக்கெட் திட்டமிடப்படாத பிரிதலை எதிர்கொண்டு அதன்பிறகு அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ராக்கெட் வெடித்ததை அடுத்து, மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது," என தெரிவித்துள்ளது.
ஸ்டார்ஷிப் ராக்கெட் தோல்விக்கான மூல காரணத்தை நன்கு புரிந்து கொள்ள இன்றைய விமான சோதனையில் இருந்து தரவுகளை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். எப்போதும் போல, நாம் என்ன கற்றுக் கொள்கிறோமோ அதில் இருந்து தான் வெற்றி கிடைக்கும். அந்த வகையில், இன்றைய சம்பவம் ஸ்டார்ஷிப் நம்பகத்தன்மையை அதிகப்படுத்த நமக்கு கூடுதல் பாடங்களை கற்பிக்கும் என்று அந்நிறுவனம் மேலும் தெரிவித்தது.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஜப்பான் வீராங்கனையும், முன்னாள் நம்பர் 1 வீராங்கனையுமான நவோமி ஒசாகா, கொலம்பியாவின் கமீலா ஒசோரியோ உடன் மோதினார்.
இதில் நவோமி ஒசாகா 4-6, 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதன் முதல் சுற்றில் பிரான்ஸ் வீரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.
இதில் பிரான்ஸ் வீரர் அலெக்சாண்டரே முல்லர், பிரேசிலைச் சேர்ந்த தியாகோ செய்போ உடன் மோதினார்.
முதல் செட்டை 6-4 என வென்ற முல்லர், அடுத்த இரு செட்களை 7-5, 7-6 (8-6) என இழந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்.
- ராணுவ விமானத்தைப் பயன்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் செலவு என அமெரிக்கா கூறியது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதிபராக பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்.
அதன்படி, அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைதுசெய்து அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான சி 17 விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு இந்தியா, பெரு, கவுதமாலா, ஹோண்டுராஸ், பனாமா, ஈக்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். 12க்கும் மேற்பட்ட முறை சி12 விமானமும், 30க்கும் மேற்பட்ட அகதிகளை அழைத்துச் செல்வதற்கு என்றே உள்ள பயணிகள் விமானமும் பயன்படுத்தப்பட்டன.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 3 முறை சி17 விமானம் மூலம் அகதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக ஒவ்வொரு முறையும் 30 லட்சம் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 கோடி) செலவானது. கவுதமாலாவுக்கு சிலரை மட்டும் அழைத்துச் செல்வதற்கு சுமார் 20 ஆயிரம் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.17 லட்சம்) செலவு செய்யப்பட்டுள்ளது.
அரசு தகவல்களின்படி அமெரிக்க அகதிகள் மற்றும் சுங்க அமலாக்கத்துறை வசம் உள்ள அகதிகளுக்கு என்றே உள்ள விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 8,500 டாலர் செலாகும் . ஆனால், சி 17 விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 28,500 டாலர் செலவானது என கூறப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற இனி ராணுவ விமானம் பயன்படுத்தப்பட மாட்டாது. ராணுவ விமானத்தை பயன்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் செலவு ஆகிறது. எனவே பயணிகள் விமானம் மூலம் அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அதிக செலவு காரணமாக அகதிகளை அனுப்புவதற்கு சி17 விமானத்தை பயன்படுத்துவதை மார்ச் 1 முதல் அமெரிக்க அரசு நிறுத்தி வைத்து உள்ளதாக தகவல் வெளியாகியது.
- போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19-ல் முடிவுக்கு வந்தது.
- பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.
வாஷிங்டன்:
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் 15 மாதத்துக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19-ல் முடிவுக்கு வந்தது.
இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர். போர்நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.
இந்நிலையில், தங்களிடம் மீதமுள்ள அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக அதிக வரிகளைப் விதித்து வருகின்றன.
- நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக கட்டணங்களை நம்மி டம் வசூலிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்கா விரும்பும் எந்தவொரு போரிலும் சீனா தயாராக இருப்பதாக அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி யேற்றபின் முதல் முறையாக பாராளுமன்ற கூட்டு அமர்வில் உரையாற்றினார்.
அப்போது அவர்," அமெரிக்காவின் பொற் காலம் தொடங்கிவிட்டது. அமெரிக்கர்களின் கனவை நனவாக்க உழைத்து வருகிறோம். 6 வாரங்களில் 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டேன். 400-க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து உள்ளேன்.
அமெரிக்கா மீது நியாயமற்ற வரிகள் விதிக்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக அதிக வரிகளைப் விதித்து வருகின்றன. தற்போது அந்த நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதிக்கும் நேரம் இது.
ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, சீனா, பிரேசில் மற்றும் பிற நாடுகள் நாம் வசூலிப்பதை விட மிக அதிக கட்டணங்களை நம்மி டம் வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது.
அமெரிக்காவிடம் இந்தியா வாகன வரி 100 சதவீதம் வசூலிக்கிறது. இது அமெரிக்காவிற்கு நியாயமில்லை.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக ஏப்ரல் 2-ந்தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்குகிறது. மற்ற நாடுகள் நமக்கு என்ன வரி விதித்தாலும், அதே வரியை அவர்களுக்கு விதிப்போம்" என்றார்.
டிரம்பின் வரி விதிப்பு கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனத் தூதரகம் அதிகாரப்பூர்வ பதிவை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில், "ஃபெண்டானில் விவகாரத்தில் அமெரிக்கா உண்மையிலேயே தீர்வு காண விரும்பினால், அதற்கு சரியான வழி, மற்றவரை சமமாக நடத்துவதன் மூலம் சீனாவுடன் ஆலோசனை நடத்துவதே. ஒருவேளை அமெரிக்கா போரை விரும்பினால், அது வரி விதிப்பு போர், வர்த்தகப் போர் அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி இறுதி வரை போராட நாங்கள் தயார்" என்று அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க சீனா எடுத்துள்ள நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை, அவசியமானவை. பெண்டானில் விவகாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவைத் தவிர வேறு யாரும் அதற்கு பொறுப்பு இல்லை.
அமெரிக்க மக்கள் மீதான மனிதாபிமானம் மற்றும் நல்லெண்ண உணர்வின் அடிப்படையில், அமெரிக்காவுடன் இணைந்து நாங்கள் வலுவான நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எங்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதற்கு பதிலாக, அமெரிக்கா எங்கள் மீது பழி போட்டும், வரிகளை விதித்தும் சீனாவை அழுத்த முயற்சி செய்கிறது. அவர்களுக்கு உதவியதற்காக அவர்கள் எங்களைத் தண்டிக்கிறார்கள்.
இது ஒரு போதும் அமெரிக்காவின் பிரச்சினையைத் தீர்க்கப் போவது இல்லை. மேலும் போதை பொருள் ஒழிப்புத் தொடர்பான நமது பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்பை குறைத்தும் மதிப்பிடுகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது,






