என் மலர்
அமெரிக்கா
- பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
- இதுதொடர்பாக நடந்த வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்தது.
வாஷிங்டன்:
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப். அமைப்பிடம் இருந்து பாகிஸ்தான் கடன் பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தானுக்கு 1. 3 பில்லியன் டாலர் கடன் வழங்க ஐ.எம்.எப். திட்டமிட்டிருந்தது. இந்தக் கடனை வழங்குவுது குறித்து ஐ.எம்.எப். அமைப்பு ஆய்வு செய்ய இருந்தது..
ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நன்கு யோசித்து முடிவு எடுக்கவேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது குறித்து நடந்த ஐ.எம்.எப். அமைப்பில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. சர்வதேச நிதியத்திடம் இருந்து பெறும் நிதியை பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு செலவு செய்கிறது என தெரிவித்தது.
- ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
- இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் பாகிஸ்தான் நிலைகுலைந்து காணப்பட்டது.
வாஷிங்டன்:
பஹல்காம் தாக்குலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனால் நிலைகுலைந்து காணப்படும் பாகிஸ்தான், காஷ்மீரில் தற்கொலைப்படை டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் எஸ்-400 வான் பாதுகாப்பு கவசம் மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் சுட்டு வீழ்த்தின.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்சனையில் நாங்கள் தற்போது தலையிடப் போவதில்லை.
பதற்றத்தைத் தணிப்பதற்கு முயற்சி செய்வோம்.
இரு நாடுகளையும் ஆயுதங்களைக் கைவிடும்படி நாங்கள் கூறமுடியாது.
இது மிகப் பெரிய போராகவோ, அணு ஆயுத பிரச்சனையாகவோ மாறாது என நம்புகிறோம் என தெரிவித்தார்.
- ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் இந்திய பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல்.
- இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் உள்ளிட்டவை சிறப்பாக தடுத்து அழித்தது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா கடந்த 7ம் தேதி நள்ளிரவில் சுமார் 25 நிமிடத்திற்குள் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத இலக்குகளை தாக்கி அழித்தது.
இதனால், பாகிஸ்தான ராணுவம் இந்திய எல்லையில் தன்னிச்சையாக அத்துமீறி குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே நேற்றிரவு ஏவுகணை மற்றும் டிரோன் மூலம் இந்திய பகுதியை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக அவந்திபூரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட்டு, அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, அதாம்பூர், பதிண்டா, சண்டிகார், நநல், பலோடி, உட்டார்லை, பூஜ் ஆகிய இடங்கில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் சரமாரி தாக்குதல் நடத்தியது.
இந்திய விமானப்படை எஸ்-400 சுதர்ஷன் சக்ரா வான் பாதுகாப்பு ஏவுகணை சிஸ்டம் மூலம் அவைகள் தாக்கி அழிக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் உள்ளிட்டவை சிறப்பாக தடுத்து அழித்தது. மேலும், லாகூரில் இந்திய ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், லாகூர் நகரை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லாகூரை விட்டு வெளியேற முடியவில்லை என்றால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
- நாங்கள் இரு நாடுகளுடனும் நன்றாகப் பழகுகிறோம்.
- அவர்கள் நிறுத்துவதை பார்க்க விரும்புகிறேன் என்றார்.
வாஷிங்டன்:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஓ, இது மிகவும் மோசமானது. என் நிலைப்பாடு என்னவென்றால் நான் இருவருடனும் ஒத்துப்போகிறேன்.
எனக்கு இருவரையும் நன்றாகத் தெரியும். அவர்கள் அதைச் சரிசெய்வதை பார்க்க விரும்புகிறேன். அவர்கள் நிறுத்துவதை பார்க்க விரும்புகிறேன்.
இப்போது அவர்கள் நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன். அவர்கள் மிகவும் மோசமாகிவிட்டார்கள், எனவே இப்போது அவர்கள் நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் இரு நாடுகளுடனும் நன்றாகப் பழகுகிறோம்.
இருவருடனும் நல்ல உறவுகள் உள்ளன. அது நின்றுவிடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஏதாவது உதவி செய்ய முடிந்தால், நான் அங்கே இருப்பேன் என தெரிவித்தார்.
- பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
வாஷிங்டன்:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை முதல் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் பதிலடி தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:
நாங்கள் ஓவல் மைதானத்தின் வாசலில் நடந்து கொண்டிருந்தபோது அதைப் பற்றிக் கேள்விப்பட்டோம்.
கடந்த காலத்தின் ஒரு சிறிய பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஏதோ நடக்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.
அவர்கள் பல தசாப்தங்களாகப் போராடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பற்றி யோசிக்கும்போது பல நூற்றாண்டுகளாக. இல்லை, அது மிக விரைவாக முடிவடையும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.
- நடிகைகள் பிரியங்கா, சோப்ரா, கியாரா அத்வானி, திஷா பதானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
- முதல் முறையாக இந்த வருட மெட் காலா நிகழ்வில் பாலிவுட் கிங் ஷாருக் கான் கலந்துகொண்டார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மெட் காலா 2025 ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு நிதி திரட்டும் விதமாக ஆண்டுதோறும் மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில் உலகெங்கிலும் உள்ள திரைப் பிரபலங்கள் இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று வருகின்றனர். வித்தியாசமான உடையில் தோன்றி கேரமா முன் போஸ் கொடுப்பதே இந்நிகழ்வின் சாராம்சம்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மெட் காலா ஃபேஷன் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய நடிகைகள் பிரியங்கா, சோப்ரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் முதல் முறையாக இந்த வருட மெட் காலா நிகழ்வில் பாலிவுட் கிங் ஷாருக் கான் கலந்துகொண்டார்.

ஸ்டைலான கருப்பு நிற உடையில், கழுத்தில் 'K' என்ற எழுத்து பொறிக்கப்பட்ட பெரிய செயின் உடன் ஷாருக் கான் தனக்கே உரிய ஸ்டைலில் தோன்றினார்.

இந்த நிகழ்வில் சுவாரஸ்யமான சம்பவமாக, வெளிநாட்டு ஊடகங்கள் ஷாருக் கானை அடையாளம் காணத் தவறியுள்ளன. நிகழ்வில் ஒரு நிருபர் ஷாருக் கானிடம் நீங்கள் யார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர் சிரித்தவாறே, நான் தான் ஷாருக் கான் என்று கூறியுள்ளார். இந்த உரையாடலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய ரசிகர்கள் கடவுள் அந்தஸ்தில் பார்க்கும் ஷாருக் கானை யார் என்று கேட்ட நபரை நெட்டிசன்கள் வலை வீசி தேடி வருகின்றனர்.
- சான் பிரான்சிஸ்கோயில் அல்காட்ராஸ் சிறைச்சாலை செயல்பட்டு வந்தது.
- 1983இல் இச்சிறைச்சாலை மூடப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் கொடூர குற்றவாளிகளுக்கான அல்காட்ராஸ் (Alcatraz) சிறையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றங்களில் தண்டனை பெறும் குற்றவாளிகளை அடைத்து வைக்க, சான் பிரான்சிஸ்கோயில் அல்காட்ராஸ் சிறைச்சாலை பயன்படுத்தப்பட்டு வந்தது.
1983இல் இச்சிறைச்சாலை மூடப்பட்டதாக கூறப்படும் நிலையில், அமெரிக்காவில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்
தற்போது இச்சிறைச்சாலை சான் பிரான்சிஸ்கோவின் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது
- அல்பயோமி என்ற அந்த 6 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.
- இல்லினாய்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
ஆறு வயது பாலஸ்தீன- அமெரிக்க சிறுவனை குத்திக் கொன்ற அமெரிக்க முதியவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 53 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோவின் வசித்து வந்த ஜோசப் என்ற வயது 73 முதியவரின் வீட்டில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வந்தனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு வீட்டின் அருகே அந்த குடும்பத்தைச் சேர்ந்த அல்பயோமி என்ற அந்த 6 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது இனவெறியால் ஜோசப் அந்த சிறுவனை 26 முறை கத்தியால் குத்தினார். இதனை தடுக்க முயன்ற சிறுவனின் தாய்க்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட ஜோசப் மீது இல்லினாய்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியான நிலையில் அவருக்கு 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- அமெரிக்காவுக்குப் பிறகு அதிக F-15 போர் விமானம் வைத்துள்ள நாடு சவுதி அரேபியா.
- அமெரிக்காவிடம் இருந்து 1000 ஏவுகணைகள் வாங்க உள்ளது.
சவுதி அரேபியாவுக்கு 3.5 பில்லியன் டாலர் (ரூ. 29,600) மதிப்பிலான ஏவுகணைகள் விற்பனை செய்ய அமெரிக்கா தொடக்க கால அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த மாதம் இறுதியில் சவுதி அரேபியா செல்ல இருக்கிறார். இந்த நிலையில் அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.
நிலப்பரப்பில் இருந்து நிலப்பரப்பு இடைநிலை தூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் AIM-120C-8 அட்வான்ஸ் ஏவுகணைகள் 1000 மற்றும் மற்ற தொழில்நுட்ப சப்போர்ட் போன்ற ஆயுதங்களை விற்பனை செய்ய இருக்கிறது.
அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக F-15 போர் விமானம் அதிக அளவில் வைத்திருக்கும் நாடு சவுதி அரேபியா ஆகும். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும், அடுத்த 4 ஆண்டுகளில் 600 பில்லியன் டாலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ஏவுகணைகளை சவுதி அரேபியா போர் விமானத்தில் பயன்படுத்த இருக்கிறது.
- போப் பிரான்சிசின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
- நான் அடுத்த போப்பாக இருக்க விரும்புகிறேன் என்று கிண்டலாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார்.
வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது அடுத்த போப் ஆக யாரை வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, நானே அடுத்த போப்பாக இருக்க விரும்புகிறேன். அதுவே என்னுடைய முதல் தேர்வாக இருக்கும் என்று கிண்டலாக டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், போப் தோற்றத்தில் டிரம்ப் இருக்கும் இருக்கும் AI புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
- ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் கடந்த 2021-ம் ஆண்டில் வாபஸ் பெறப்பட்டன.
- பக்ரம் விமானப்படை தளத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்றார் அதிபர் டிரம்ப்.
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் கடந்த 2021-ம் ஆண்டில் அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டன. இதையடுத்து, அந்த விமானப்படை தளத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என அதிபர் டிரம்ப் அதெரிவித்தார்.
இந்நிலையில், சீனாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் பக்ரம் விமானப்படைத்தளத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. சீனா அணுகுண்டு செய்யும் இடத்திலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ள ஊர் பக்ரம். என தெரிவித்துள்ளார்.
- அடுத்து வரும் பத்து தலைமுறை உக்ரேனியர்களை பொருளாதார ரீதியாக பாதிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன் என ஜெலன்ஸ்கி மறுத்தார்.
- அமெரிக்கா அதிக வரிவிதித்ததால் அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது.
அமெரிக்காவும் உக்ரைனும் ஒரு பெரிய கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. உக்ரைனின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையில்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வந்தார்.
இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசெட் மற்றும் உக்ரைன் துணைப் பிரதமர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்கா உக்ரைனின் மதிப்புமிக்க அரிய பூமி தாதுக்களான டைட்டானியம், யுரேனியம் மற்றும் லித்தியம் ஆகியவற்றை பெற அனுமதிக்கும்.
உக்ரைன் இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைத் தொடர விரும்பினால், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு உக்ரைனை அமெரிக்கா நிர்பந்தித்து வந்தது.

உக்ரைன் தொடர்ந்து அமெரிக்க இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைப் பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது.
கடந்த பிப்ரவரியில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உக்ரைன் பிரதமர் ஜெலென்ஸ்கி இடையே நடந்த சந்திப்பின் போது வாக்குவாதம் வெடித்தது.
அடுத்து வரும் பத்து தலைமுறை உக்ரேனியர்களை பொருளாதார ரீதியாக பாதிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாட்டேன் என ஜெலன்ஸ்கி மறுத்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைய வழிவகுத்தது.
அதுமுதல் ரஷியாவுக்கு ஆதரவாக டிரம்ப் பேசி வந்தார். ஆனால் கடந்த வாரம் வாடிகனில் போப் ஆண்டவர் இறுதிச் சடங்கில் வைத்து டிரம்ப், ஜெலன்ஸ்கி பேசிக்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கடந்த வாரம் உக்ரைனில் நடந்த ஏவுகணைத் தாக்குதல்களைக் கண்டித்த டிரம்ப், ரஷிய அதிபர் புதினை விமர்சித்தார்.
இந்நிலையில் அமெரிக்கா - உக்ரைன் இடையே கனிம ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்கா அதிக வரிவிதித்ததால் அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தியது. இதனால் உக்ரைனுடனான கனிம ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.






