என் மலர்
அமெரிக்கா
- வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- யூகி பாம்ப்ரி ஜோடி 2வது சுற்றில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
வாஷிங்டன்:
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, நெதர்லாந்தின் செம் வெர்பீக்-ஸ்வீடனின் கோரன்சன் ஜோடி உடன் மோதியது.
இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 7-6 (7-1) என இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட யூகி பாம்ப்ரி ஜோடி அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 10-6 என கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- 90ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஹல்க் ஹோகன்.
- WWE போட்டியை பிரபலமாக்கியதில் இவருக்கு முக்கிய இடம் உண்டு.
புளோரிடா:
பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (71), அமெரிக்காவில் காலமானார். இவர் 90ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
புகழ்பெற்ற அமெரிக்க மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன். WWE போட்டியை பிரபலமாக்கியதில் இவருக்கு முக்கிய இடம் உண்டு.
ஹல்க் ஹோகனின் வீரதீர ஆளுமை, தேசபக்தி விளம்பரங்கள் மற்றும் உடல்கட்டு ஆகியவற்றால் அவரது புகழ் உயர்ந்தது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இத்தாலி வீரர் முசெட்டி முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.
இதில் முசெட்டி முதல் செட்டை 6-3 என வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட கேமரூன் நூரி அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் இத்தாலியின் முசெட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத வரிகள் விதிக்கப்படும்.
- ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும்.
அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் சில நாடுகளுடன் உடன்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீத வரிகள் விதிக்கப்படும்.
இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா 90 சதவீத லாபத்தைப் பெறும்.
ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும். இந்த ஒப்பந்தம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதுபோன்ற எதுவும் இதற்கு முன்பு இருந்ததில்லை.
ஜப்பான் அமெரிக்காவிற்கு 15 சதவீத பரஸ்பர வரிகளை செலுத்தும். இது அமெரிக்காவிற்கு மிகவும் உற்சாகமான நேரம். ஜப்பானுடன் நாம் எப்போதும் சிறந்த உறவைக் கொண்டிருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் பிலிப்பைன்ஸ் நாடுடனும் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
- நீட்டித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
- லிண்ட்சே கிரகாம் புதிய மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது போர் நடத்தி வருவதால் ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை அமலில் உள்ளது.
இருப்பினும் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்த வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு ரஷியா போரை நீட்டித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், டிரம்ப் உடைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள எம்.பி. லிண்ட்சே கிரகாம் புதிய மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.
அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் 100 சதவீதம் வரி விதிக்க உள்ளார்.
இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு நான் கூறுவது என்னவென்றால், நீங்கள் தொடர்ந்து ரஷியாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போர் நீடிக்க அனுமதித்தால் உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழித்து விடுவோம்' என்று தெரிவித்தார்.
- கீதா கோபிநாத் கடந்த 2019-ல் சர்வதேச நாணய நிதியத்தில் தலைமை பொருளாதார நிபுணராக சேர்ந்தார்.
- ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதார பேராசிரியராக மீண்டும் பணியில் சேர உள்ளேன் என்றார்.
வாஷிங்டன்:
சர்வதேச நாணய நிதியத்தில் துணை நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தில் தலைமைப் பொருளாதார நிபுணராக சேர்ந்தார்.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பதவியில் இருந்து விலகுவதாக கீதா கோபிநாத் அறிவித்துள்ளார். மேலும், அவர் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதார பேராசிரியராக மீண்டும் பணியில் சேர உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கீதா கோபிநாத் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச நாணய நிதியத்தில் சுமார் 7 அற்புதமான ஆண்டுகளுக்கு பிறகு நான் எனது கல்வி வேர்களுக்கு திரும்ப முடிவு செய்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
கீதா கோபிநாத் இவ்வுலகின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அசாத்திய கல்வியறிவும், அறிவார்ந்த தலைமை பண்பும் கொண்டவர் என ஐ.எம்.எப். நிர்வாக இயக்குநர் கிறிஸ்ட்டின் லகார்டே பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோவில் இணைந்தது.
- தற்போது மீண்டும் வெளியேறியுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்காவின் அரசுத்துறை செய்தித்தொடர்பாளர்
டாமி ப்ரூஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
கல்வி, அறிவியல் மற்றும் கலாசாரத்தின் மேம்பாட்டுக்காக செயல்படும் யுனெஸ்கோவிலிருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து முழுமையான விளக்கத்தை அமெரிக்க வெளியிடாத நிலையிலும், இஸ்ரேலுக்கு எதிராக நிலையை எடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியது. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்த நிலையில், தற்போது வெளியேறியுள்ளது.
முதல் முறையாக 1984ஆம் ஆண்டு ரொனால்டு ரீகன் அமெரிக்க அதிபராக இருந்தபோது யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்க விலகியது.
- சார்ஜ் போடும் நேரத்தில் உணவருந்தும் வசதி.
- உலகம் முழுவதும் விரிவுப்படுத்த எலான் மஸ்க் திட்டம்.
மின்சார கார் தயாரிப்பதில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் திகழ்ந்து வருகிறது. அமெரிக்காவில் டெஸ்லா கார் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆங்காங்கே சார்ஜ் போடுவதற்கான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
வாகனத்திற்கு சார்ஜ் போடும் வரை, வாகன ஓட்டி மற்றும் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் காத்திருக்க வேண்டி நிலை ஏற்படும். இந்த நேரத்தை அவர்கள் உணவருந்துவதற்காக பயன்படுத்தினால், பயணம் நேரம் மிச்சமாகும்.
இதை கருத்தில் கொண்டு TESLA DINER-ஐ லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் டெஸ்லா நிறுவனம தொடங்கியுள்ளது. சார்ஜ் நிலையத்தில் வாகனத்திற்கு சார்ஜ் செய்ய வேண்டும் என்றால், அதற்கு முன்னதாகவே அந்த நிலையத்திற்கு வருவது தொடர்பாகவும், உணவு தேவை என்றால் அது தொடர்பாகவும் ஆர்டர் செய்தால், சார்ஜ் போடும் நேரத்தில் வாகனத்திற்கு உணவு வந்து சேரும். இல்லையென்றால் உணவகத்தில் சென்று சாப்பிடும் வகையில் ஏற்பாமு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் TESLA DINER தொடங்கப்பட்டுள்ளது. இது வெற்றி பெற்றால் உலகளவில் விரிவுப்படுத்த மஸ்க் முடிவு செய்துள்ளார்.
- சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- 2016 தேர்தலில் ரஷியாவின் உதவியுடன் டிரம்ப் வென்றதாக குற்றம்சாட்டினார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை FBI கைது செய்து அழைத்துச் செல்லும் செயற்கை நுண்ணறிவு வீடியோவை டிரம்ப் பகிர்ந்துள்ளார். சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ, ஒபாமா டிரம்புடன் பேசிக் கொண்டிருந்தபோது அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதை காட்டுகிறது. பின்னர் ஆரஞ்சு நிற உடை அணிந்து ஒபாமா சிறைச்சாலையில் இருப்பதையும் இந்தக் காட்சிகள் காட்டுகின்றன.
முன்னதாக 2016 தேர்தலில் ரஷியாவின் உதவியுடன் டிரம்ப் வென்றதாக பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக ஒபாமா விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் துளசி கப்பார்ட் தெரிவித்திருந்தார்.
- Andy Byron தனது நிறுவனத்தின் மனித வள (HR) அதிகாரியான Kristin Cabot உடன் கலந்துகொண்டார்.
- இவர்கள் இருவரையும் பாருங்கள்.. இது ஒரு காதல் உறவா? வெட்கப்படுகிறார்கள்.."
அமெரிக்காவில் Astronomer எனும் தரவு மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது. Andy Byron என்பவர் கடந்த 2023 முதல் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். Andy Byron, மேகன் கெர்ரிகன் பைரன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் பாஸ்டன் நகரில் கோல்ட் பிளே குழுவின் இசைகச்சேரி நடைபெற்றது. இதில் கிஸ் கேம் என்ற விளையாட்டு நடைபெற்றது. அதாவது, கேமரா ரேண்டம் ஆக பார்வையாளர்களில் அமர்ந்திருக்கும் ஒரு ஜோடியை திரையில் காட்டும். அந்த ஜோடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த கான்சர்ட்டில் Andy Byron தனது நிறுவனத்தின் மனித வள (HR) அதிகாரியான Kristin Cabot உடன் கலந்துகொண்டார்.
கிஸ் கேமில் கேமரா அவர்களை நோக்கி திரும்பியது. திரையில் தங்கள் படம் தெரிவதால் அதிர்ச்சியடைந்த இருவரும் தங்களை மறைத்துக்கொள்ள முயன்றனர்.
அப்போது பாடகர் கிறிஸ் மார்ட்டின், இதைப் பார்த்து மேடையில், "ஓ..! இவர்கள் இருவரையும் பாருங்கள்.. இது ஒரு காதல் உறவா? வெட்கப்படுகிறார்கள்.." என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதையடுத்து, Astronomer நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "எங்கள் தலைவர்கள் நடத்தை மற்றும் பொறுப்புணர்வில் ஒரு தரத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சமீபத்தில், அந்தத் தரம் பூர்த்தி செய்யப்படவில்லை" என்று தெரிவித்தது.
சர்ச்சையை அடுத்து, தனது பதவியை ஆண்டி பைரன் ராஜினாமா செய்துள்ளார். ஆண்டி பைரனின் ராஜினாமா கடிதத்தை இயக்குநர்கள் குழு ஏற்றுக்கொண்டது.
இணை நிறுவனர் மற்றும் தலைமை தயாரிப்பு அதிகாரி பீட் டிஜாய் இடைக்கால CEO ஆக செயல்படுவார் என்றும் Astronomer அறிவித்துள்ளது.
- டேக்-ஆஃப் ஆனதும் அதன் இடது எஞ்சினில் தீப்பிடித்தது.
- விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்ப வழிகாட்டியது.
அமெரிக்காவில் நேற்று, லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி டெல்டா ஏர் லைன்ஸ் உடைய போயிங் 767-400 ரக பயணிகள் விமானம் புறப்பட்டது.
ஆனால் டேக்-ஆஃப் ஆனதும் அதன் இடது எஞ்சினில் தீப்பிடித்ததால், மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலேயே அவசரமாகத் தரையிறங்கியது.
விமானி அவசரநிலையை அறிவித்ததையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்ப வழிகாட்டியது. தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டெல்டா விமானத்தில் எஞ்சின் தீப்பிடிப்பது இது இரண்டாவது முறை. கடந்த ஏப்ரல் மாதமும் ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
- பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது.
- அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார் அர்ஜூன் எரிகைசி.
லாஸ் வேகாஸ்:
பிரீஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 வீரர்கள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதினர். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களைப் பிடித்தவர்கள் காலிறுதிக்கு முன்னேறினர்.
நேற்று முன்தினம் நடந்த காலிறுதியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜூன் எரிகைசி வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் அர்ஜூன் எரிகைசி பிரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, அமெரிக்காவின் லெவன் அரோனியன் உடன் மோதினார். இதில் அர்ஜூன் எரிகைசி தோல்வி அடைந்தார்.






